எலும்பு தேய்மானம் மூட்டு வலி முதுகு வலி ஒரே நாளில் குணமாக வேண்டுமா? அப்போ இந்த ஊட்டச்சத்து பொடியை பயன்படுத்துங்கள்!

0
196
#image_title

எலும்பு தேய்மானம் மூட்டு வலி முதுகு வலி ஒரே நாளில் குணமாக வேண்டுமா? அப்போ இந்த ஊட்டச்சத்து பொடியை பயன்படுத்துங்கள்!

இன்றைய உலகில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் எலும்பு சார்ந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். உடல் எலும்புகளுக்கு வலு இல்லையேல் எவ்வித காரியத்தையும் செய்ய இயலாது. எனவே ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளுங்கள். அதனோடு ஊட்டச்சத்து பொடியை தயாரித்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கோதுமை
2)பருத்தி விதை
3)சோயா விதை
4)பால்
5)நாட்டு சர்க்கரை

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் கோதுமை, பருத்தி விதை, சோயா விதை சம அளவு போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற விடவும்.

இவை அனைத்தும் நன்கு ஊறி வந்ததும் தண்ணீரை வடிகட்டி விடவும். பிறகு ஒரு காட்டன் துணியில் இந்த பொருட்களை போட்டு வெயிலில் நன்கு காய விடவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் நாட்டு மாட்டு பால் ஊற்றி சூடாக்கவும். பால் சூடானதும் அரைத்த ஊட்டச்சத்து பொடி 2 தேக்கரண்டி அளவு போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இந்த பாலை ஒரு கிளாஸுக்கு ஊற்றி சுவைக்காக சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி குடிக்கவும். இந்த பானம் எலும்பு தேய்மானம், மூட்டு வலி, முதுகு வலி அனைத்தையும் முழுமையாக குணமாக்கும்.