தலை முடியை தொட்டாலே வேரோடு வருகிறதா? அப்போ “வெந்தயம் + அரிசி” இருந்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

0
73
#image_title

தலை முடியை தொட்டாலே வேரோடு வருகிறதா? அப்போ “வெந்தயம் + அரிசி” இருந்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

கீழே கொடுக்கப்பட்டுள்ள சீரம் பயன்படுத்தி வந்தால் தலை முடி உதிர்விற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம்
2)அரிசி
3)கற்றாழை
4)கறிவேப்பிலை

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு கொத்து கறிவேப்பிலை,ஒரு தேக்கரண்டி வெந்தயம்,ஒரு தேக்கரண்டி அரிசி மற்றும் 3 கற்றாழை துண்டுகளை சேர்க்கவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.

மறுநாள் அதை எடுத்து பார்த்தால் தண்ணீரின் நிறம் லைட் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இந்த ஸ்ப்ரேவை தலை முடியின் வேர்காள் பகுதியில் படும்படி செய்யவும்.

பின்னர் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தலை முடி உதிர்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மற்றொரு தீர்வு உங்களுக்காக:

தேவையான பொருட்கள்:-

1)சின்ன வெங்காய தோல்
2)அரிசி ஊறவைத்த தண்ணீர்
3)வெந்தயம்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் அரிசி ஊறவைத்த தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1/4 கைப்பிடி சின்ன வெங்காய தோல் சேர்த்து ஒரு இரவு ஊற விடவும்.

மறுநாள் இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இந்த ஸ்ப்ரேவை தலை முடியின் வேர்காள் பகுதியில் படும்படி செய்யவும்.

பின்னர் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தலை முடி உதிர்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.