கல்லீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

0
58
#image_title

கல்லீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இவை தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழந்தால் உடல் சார்ந்த பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இந்த கல்லீரல் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது.

கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் நீங்க வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி – 1 துண்டு

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*இலவங்க பட்டை – 1 துண்டு

*வெள்ளை பூண்டு பல் – 2

*மஞ்சள் தூள் – 1 பின்ச்

*தூயத் தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 துண்டு இலவங்க பட்டை, 1 துண்டு இடித்த இஞ்சி மற்றும் 2 பல் பூண்டு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி 1 தேக்கரண்டி தேன், 1 பின்ச் மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கல்லீரலில் அடைபட்டு கிடந்த கழிவுகள் முழுவதும் நீங்கி அவை சுத்தமாகவும், ஆரோக்யமாகவும் இருக்கும்.

குறிப்பு:-

இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது.

மற்றொரு தீர்வு:-

முதலில் 4 பெரு நெல்லி எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து அவற்றின் கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து கொத்தமல்லி 1/4 கப் அளவு எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் 1 கற்றாழை மடல் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். அதில் இருந்து 2 அல்லது 3 தேக்கரண்டி ஜெல் எடுத்து ஒரு பவுலில் சேமித்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் துண்டுகள், 1/4 கப் கொத்தமல்லி இலை, 3 தேக்கரண்டி அளவு கற்றாழை ஜெல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 சிட்டிகை அளவு இந்துப்பு மற்றும் 1 சிட்டிகை அளவு சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.

இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் கல்லீரலில் உள்ள கழிவுகள் முழுவதுமாக நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.