கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க பருப்பு சாறு குடிங்க!

0
137
#image_title

கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க பருப்பு சாறு குடிங்க!

உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்ற பருப்பு வேக வைத்த பானம் அருந்துவது நல்லது. உடலில் வயிற்று, கை, தொடை பகுதியில் தான் கொழுப்புகள் படிகிறது. இதை ஆரோக்கியமான முறையில் கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கப்படி தொடர்ந்து 15 நாட்களுக்கு பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம்
2)சுக்கு
3)மிளகு
4)துவரம் பருப்பு
5)எலுமிச்சை சாறு
6)உப்பு
7)கொத்தமல்லி
8)திப்பிலி
9)இஞ்சி
10)பூண்டு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் துவரம் பருப்பு 50 கிராம் போட்டு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற விடவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி மிளகு, 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி, 10 கிராம் திப்பிலி போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு துண்டு இஞ்சி, 3 பல் பூண்டை தோல் நீக்கி அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஊற வைத்த துவரம் பருப்பை போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றவும்.

அடுத்து அதில் சீரகம், மிளகு கலவையை அதில் சேர்க்கவும். பிறகு அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கலந்து விடவும்.

பிறகு பாதி எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வேக விடவும்.

பருப்பு நன்கு குழைந்து வரும் வரை வேக விட்டு அடுப்பை அணைக்கவும். இதை இளஞ்சூட்டில் குடித்து குடிக்கவும். தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வந்தால் உடல் எடை மளமளவென குறைந்து விடும்.