உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் காலையில் இந்த 5 வகை தேநீரை பருகுங்கள்!!

0
41
#image_title

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் காலையில் இந்த 5 வகை தேநீரை பருகுங்கள்!!

நம்மில் பலருக்கு காலையில் டீ அல்லது காபி குடித்தால் தான் அன்றைய நாளுக்கான வேலையே தொடங்கும். இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம். இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது.

டீ பருக வேண்டும் அதே சமயம் அவை ஆரோக்கியமாதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி தேநீர் செய்து பருகுங்கள். இவை உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும்.

1)துளசி இலை தேநீர்

தேவையான பொருட்கள்:-

*துளசி இலை – 15

*எலுமிச்சை சாறு – 1 1/2 தேக்கரண்டி

*தேன் – சிறிதளவு

*தண்ணீர் – 1 1/2 கிளாஸ்

செய்முறை:-

ஒரு பவுலில் 15 துளசி இலைகளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் எடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள 15 துளசி இலைகளை சேர்த்து கொள்ளவும்.

இதை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். 1 1/2 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1 கிளாஸ் என்று வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். இதில் 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தேன் கலந்து பருகினால் சளி, இருமல் பாதிப்பு நீங்குவதோடு உடல் ஆரோக்கியமான இருக்கும்.

2)புதினா இலை தேநீர்

தேவையான பொருட்கள்:-

*புதினா இலை – 5

*எலுமிச்சை சாறு – 1 1/2 தேக்கரண்டி

*தேன் – சிறிதளவு

*தண்ணீர் – 1 1/2 கிளாஸ் அளவு

செய்முறை:-

ஒரு பவுலில் 5 புதினா இலைகளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் எடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள 5 புதினா இலைகளை சேர்த்து கொள்ளவும்.

இதை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். 1 1/2 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1 கிளாஸ் என்று வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். இதில் 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தேன் கலந்து பருகினால் வாய்துற்றம், உடல் சூடு நீங்குவதோடு உடல் ஆரோக்கியமான இருக்கும்.

3)கொய்யா இலை தேநீர்

தேவையான பொருட்கள்:-

*கொய்யா இலை – 8

*ஏலக்காய் – 1

*வெல்லம் – சிறிதளவு

செய்முறை;-

ஒரு பவுலில் 8 கொய்யா இலைகளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள 8 கொய்யா இலைகளை சேர்த்து கொள்ளவும். அதோடு 1 ஏலக்காயை இடித்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு வெல்லம் சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் உடல் எடை, உடம்பு வலி, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகள் விரைவில் சரியாகும்.

4)வெங்காயத் தேநீர்

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)

*தேன் – 1 1/2 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*தூள் உப்பு – 1 சிட்டிகை அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அதில் 1/4 கப் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு 2 கப் தண்ணீர் 1 கப் அளவிற்கு வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும். அதனை டம்ளருக்கு வடிகட்டி தேன் 1 1/2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி மற்றும் தூள் உப்பு 1 சிட்டிகை அளவு சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.

வெங்காயத்தில் இயற்கையாகவே ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்து காணப்படுகிறது. இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இதில் தேநீர் செய்து பருகினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் மோசமான இரத்த ஓட்டம் உள்ளிட்ட பிரச்சனை விரைவில் சரியாகும்.

5)ரோஜா இதழ் தேநீர்

தேவையான பொருட்கள்:-

*பன்னீர் ரோஜா இதழ்கள் – 15

*தண்ணீர் – 1 கப்

*தேன் – சிறிதளவு

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 15 பன்னீர் ரோஜா இதழ்களை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

அடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள ரோஜா இதழ்களை அதில் சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் இதழ்களின் நிறம் கொதிக்கும் நீரில் கலக்கும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் உடல் எடை விரைவில் குறைந்து விடும்.