நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!!

0
45
#image_title

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!!

சளி என்பது நம் அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்று தான் என்றாலும் இதை கவனிக்காமல் விட்டால் நாளடைவில் மார்பு சளியாக மாறி விடும் அபாயம் இருக்கிறது.

இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல், வறட்டு இருமல், நெஞ்சு அனத்தம், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உருவாக நேரிடும். இதனை சரி செய்ய மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது என்றாலும் சிலருக்கு அவை சேராமல் போய்விடும். இதனால் வாய்ப்புண், உடல் சூடு ஆகியவை ஏற்படும். ஆனால் இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகினால் மார்பு சளி பிரச்சனை உடனடியாக சரியாகி விடும்.

தேவையான பொருட்கள்:-

*வெற்றிலை

*சுக்கு

*மிளகு

*சீரகம்

*நாட்டு சர்க்கரை

செய்முறை:-

அடுப்பு ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் வெற்றிலையை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு அதனுடன் சிறு துண்டு சுக்கை இடித்து சேர்க்கவும்.

பிறகு மிளகு மற்றும் சீரகம் தேவையான அளவு எடுத்து தனி தனியாக இடித்து அதில் சேர்த்து கொள்ளவும். 1 1/2 டம்ளரில் இருந்து 1 டம்ளராக வரும் வரை கொதிக்க விட்டு 1 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து 1 நிமிடம் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இந்த கஷாயத்தை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் மார்புபில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்.