எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

0
139
#image_title

எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

உடலில் எலும்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். எலும்பு வலிமையாக இருந்தால் தான் நிற்க, நடக்க… எந்த ஒரு செயலையும் செய்ய முடியும். இந்த எலும்பை வலிமையாக்க உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

*பச்சை பயறு
*சோளம்
*ஏலக்காய்
*வேர்க்கடலை
*பேரிச்சம் பழம்

செய்முறை…

அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் பச்சை பயறு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் வெள்ளை சோளம் மற்றும் வேர்க்கடலை தனி தனியாக வறுத்துக் கொள்ளவும்.

இந்த பொருட்களை நன்கு ஆறவிடவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து வறுத்த வேர்க்கடலை, வெள்ளை சோளம், பச்சை பயறு சேர்த்து அரைக்கவும். பொடியாகும் வரை அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.

பின்னர் 1 ஏலக்காய் மற்றும் பேரிச்சம் பழம் சேர்த்து அரைத்து அதையும் பொடியாக்கி வைத்துள்ள மாவில் கலந்து கொள்ளவும்.

இதை உருண்டையாக பிடிக்க வேண்டும். அதற்காக சிறிது நெய் சேர்த்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும்.

இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலுமை ஆகும். இரத்த ஓட்டம் சீரக இருக்கும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.