கல்லீரலில் உள்ள கழிவுகள் நீங்க இந்த இயற்கை வழியை பின்பற்றுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

0
40
#image_title

கல்லீரலில் உள்ள கழிவுகள் நீங்க இந்த இயற்கை வழியை பின்பற்றுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம்.ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழந்தால் அதற்கு கொழுப்பு நிறைந்த உணவு,அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கும்.இந்த கல்லீரல் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

*பட்டை – 1

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*பூண்டு – 2 பற்கள்

*மஞ்சள் தூள் – 1 பின்ச்

*தேன் – 1 தேக்கரண்டி

*இஞ்சி – 1 துண்டு

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் 1 துண்டு இடித்த இஞ்சி,1 துண்டு பட்டை மற்றும் 2 பூண்டு பற்கள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

தொடர்ந்து இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டிக் கொள்ளவும்.இதில் 1 தேக்கரண்டி தேன்,1 பின்ச் மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பருகவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கல்லீரலில் அடைபட்டு கிடந்த கழிவுகள் முழுவதும் நீங்கி அவை சுத்தமாகவும்,ஆரோக்யமாகவும் இருக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*பெரு நெல்லிக்காய் – 4

*கொத்தமல்லி இலை – 1/4 கப்

*கற்றாழை ஜெல் – 3 தேக்கரண்டி

*இந்துப்பு – 1 சிட்டிகை

*மஞ்சள் தூள் – 1சிட்டிகை

செய்முறை:-

முதலில் 4 பெரு நெல்லி எடுத்து தண்ணீர்’கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதை கொட்டை நீக்கி சிறு சிறு’துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து கொத்தமல்லி 1/4 கப் அளவு எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் 1 கற்றாழை மடல் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.அதில் இருந்து 2 அல்லது 3 தேக்கரண்டி ஜெல் எடுத்து ஒரு பவுலில் சேமித்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் துண்டுகள்,1/4 கப் கொத்தமல்லி இலை,3 தேக்கரண்டி அளவு கற்றாழை ஜெல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 சிட்டிகை அளவு இந்துப்பு மற்றும் 1 சிட்டிகை அளவு சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.

இந்த பானத்தை பருகிய அடுத்த 1 மணி நேரத்திற்கு எந்த ஒரு உணவையும் உட்கொள்ள கூடாது.இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் கல்லீரலில் உள்ள கழிவுகள் முழுவதுமாக நீங்கிவிடும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.