சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற பாட்டி சொன்ன அற்புத மூலிகை வைத்தியம்!!

0
25
#image_title

சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற பாட்டி சொன்ன அற்புத மூலிகை வைத்தியம்!!

சிறுநீரகம் நம் உடலின் ஒரு முக்கிய உள் உறுப்பாகும்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது.இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இதில் தேங்கி இருக்கும் சிறுநீரக கற்களால் அவை ஆரோக்கியத்தை இழப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.இந்த சிறுநீரக கற்களை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் கரைத்து வெளியேற்றி விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம் – 2

*மிளகு – 7

*எலுமிச்சம் பழச்சாறு – 1 தேக்கரண்டி

*தூயத் தேன் – 2 தேக்கரண்டி

*சுத்தமான தண்ணீர் – 200 மில்லி

செய்முறை:-

1.எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.அதில் பாதி எடுத்து ஒரு பவுலில் சாறு பிழிந்து கொள்ளவும்.எலுமிச்சம் பழ விதைகளை நீக்கி விடுவது நல்லது.1 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு இருந்தால் போதுமானது.

2.பின்னர் தூயத் தேன் 2 தேக்கரண்டி எடுத்து எலுமிச்சை சாற்றில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

3.அடுத்து சின்ன வெங்காயம் 1 அல்லது 2 எடுத்து தோல்களை நீக்கி தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் ஒரு உரலில் போட்டுக்கொள்ளவும்.அதனோடு கருப்பு மிளகு 6 முதல் 7 வரை சேர்த்து இடித்து கொள்ளவும்.இதையும் எலுமிச்சை சாறு + தேன் இருக்கும் பவுலில் சேர்க்கவும்.

4.அடுத்து 200 மில்லி அளவு சுத்தமான தண்ணீர் எடுத்து அந்த பவுலில் ஊற்றிக்கொள்ளவும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்து பருகி வந்தோம் என்றால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.இதனால் விரைவில் சிறுநீரகம் சுறு சுறுப்பாக வேலை செய்ய தொடங்கி விடும்.