பாட்டி வைத்தியம்.. பெருஞ்சீரகம் + மிளகு போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவு இருக்காது!!

0
33
#image_title

பாட்டி வைத்தியம்.. பெருஞ்சீரகம் + மிளகு போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவு இருக்காது!!

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*புதினா – 5 இலைகள்

*பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 6 முதல் 8

செய்முறை:-

அடுப்பில் டீ போடும் பாத்திரத்தில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பின்னர் அதில் சோம்பு (பெருஞ்சீரகம்) 1 தேக்கரண்டி,கருப்பு மிளகு 6 அல்லது 8 சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் வாசனை நிறைந்த புதினா இலைகள் 5 சேர்த்து மிதமான கொதிக்க விடவும்.

பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சுண்டி 1/2 டம்ளராக வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும்.

அடுத்து இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.சுவைக்காக தேன்,நாட்டு சர்க்கரை உள்ளிட்ட எதையும் சேர்க்க தேவையில்லை.இந்த பானத்தை அப்டியே பருகாலம்.தினமும் 2 வேளை குடிப்பது நல்லது.இதை தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் மூட்டுகளில் நீர் கோர்த்தல் பாதிப்பு நீங்கி முட்டுவலி பிரச்சனை சரியாகும்.