நரம்பு தளர்ச்சியை நிரந்தரமாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

0
216
#image_title

நரம்பு தளர்ச்சியை நிரந்தரமாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

நம் உடல் இயக்கத்திற்கு நரம்பு மிக மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் நரம்பு ஆரோக்கியம் நாளடைவில் குறைந்து தளர்ச்சி ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. நரம்பு தளர்ச்சி எதனால் ஏற்படுகிறது என்று கேட்டால் அதற்கு காரணங்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.

மது அருந்துதல், நரம்பியல் குறைபாடு, முதுமை, புகைபிடித்தல், மனக் கவலை, தவறான உணவுமுறை பழக்கம், சர்க்கரை நோய் உள்ளிட்ட காரணங்களால் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது.

இந்த நரம்பு தளர்ச்சி பாதிப்பு பெரும்பாலும் ஆண்கள் தான் ஏற்படுகிறது. இதை உரிய நேரத்தில் குணப்படுத்திக் கொண்டால் பக்க விளைவுகளை சந்திக்காமல் தவிர்த்து கொள்ள முடியும்.

*அமுக்கரா கிழங்கு பொடி
*பனங்கற்கண்டு

ஒரு கிளாஸ் அளவு நீரில் 1 ஸ்பூன் அளவு அமுக்கரா கிழங்கு பொடி சேர்த்து காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும். அமுக்கரா கிழங்கு பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி பயன்படுத்துங்கள்.

*தேன்
*சின்ன வெங்காயம்

உங்களுக்கு தேவையான அளவு சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து அதில் 1 அல்லது 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புகள் வலுப்பெற்று நரம்பு தளர்ச்சி பாதிப்பு நீங்கும்.