இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

0
95
Holiday only for these nine districts! Tamil Nadu government's action order!
Holiday only for these nine districts! Tamil Nadu government's action order!

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

கேரளா பகுதிகளில் ஓணம் பண்டிகை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த பண்டிகையை கேரளா எல்லையை யொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  வருகிற எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது.

மேலும் நீலகிரி ,கோவை ,திருப்பூர் ,சென்னை , மாவட்டங்களுக்கும் வரும் எட்டாம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அந்த பகுதிகளில் மலையாளம் பேசும் மக்கள் அதிகளவில் இருப்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து  இந்த ஆண்டு கூடுதலாக ஈரோடு ,திருவள்ளூர் , செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் ஓணம் பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் மொத்தம் ஒன்பது மாவட்டங்களுக்கு ஓணம்ப்பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K