மழைகாலங்களில் வரும் சளி, இருமல் பாதிப்பை 1 மணி நேரத்தில் சரி செய்ய உதவும் நாட்டு வைத்தியம்!!

0
75
#image_title

மழைகாலங்களில் வரும் சளி, இருமல் பாதிப்பை 1 மணி நேரத்தில் சரி செய்ய உதவும் நாட்டு வைத்தியம்!!

தமிழக்த்தில் தற்பொழுது பருவ மழைக்காலம் என்பதினால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:-

*மூக்கு ஒழுகுதல்

*மூக்கடைப்பு

*மூச்சு விடுதலில் சிரமம்

*தொண்டை வலி

*தொண்டை புண்

*நீஞ்சு அனத்தம்

*தலைவலி

*வறட்டு இருமல்

*உடல் சோர்வு

சளி, இருமல் பாதிப்பு உடனடியாக குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்:-

தேவையான பொருட்கள்:-

*மிளகு – 1/2 தேக்கரண்டி

*கொத்தமல்லி விதை – 1/2 தேக்கரண்டி

*சுக்கு – சின்ன துண்டு

*பெருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை…

ஒரு உரலில் 1/2 தேக்கரண்டி மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகு சேர்த்து இடித்துக் கொள்ளவும். பின்னர் 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி விதையை அதில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு இடித்த மிளகு, சீரகத்தை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இடித்த கொத்தமல்லி மற்றும் 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்க்கவும்.

சிறு துண்டு சுக்கு தட்டி அதில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை 1 டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இந்த பானத்தை காலை, மதியம், மாலை அல்லது இரவு என்று மூன்று வேலையும் பருகினால் சளி, இருமல் பாதிப்பு விரைவில் குணமாகும்.