கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை தவிக்க விட்டு சென்றார் கணவன்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை!

0
66
Husband left pregnant woman to suffer in Coimbatore district! This is the reason why the police investigation!
Husband left pregnant woman to suffer in Coimbatore district! This is the reason why the police investigation!

கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை தவிக்க விட்டு சென்றார் கணவன்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை!

கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி உடையார் விதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் வொர்க் ஷாப்பில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் காவியா (27) என்பவருக்கும்  கடந்த எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. காவியா தற்போது இரண்டு மாத கர்ப்பணியாக உள்ளார். மேலும் இந்நிலையில் முத்துக்குமார் கடந்த  நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரால்  வேளையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. மேலும் முத்துக்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அதிக மன வேதனை அடைந்து காணப்பட்டுள்ளார்.

மேலும் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பூச்சி மருந்தை குடித்து  மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து முத்துக்குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் முத்துக்குமார் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மாத கர்ப்பிணியை தவிக்க விட்டு சென்ற முத்துக்குமாரை நினைத்து அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K