ஒரு கிளாஸ் மோரில் இந்த பொடியை சேர்த்து குடித்தால் இந்த ஜென்மத்தில் வாயுத்தொல்லை இல்லை!!

0
91
#image_title

ஒரு கிளாஸ் மோரில் இந்த பொடியை சேர்த்து குடித்தால் இந்த ஜென்மத்தில் வாயுத்தொல்லை இல்லை!!

உணவு கட்டுப்பாடு இல்லாவிட்டால் உடலில் அதிகளவு வாயுக்கள் தேங்கிவிடும்.கெட்ட வாயுக்களால் உடலில் உறுப்புகள் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.எனவே உடலில் உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)மோர்
2)வெந்தயம்
3)நெய்
4)ஓமம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.

பிறகு இந்த வெந்தயத்தை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி ஓமத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

ஒரு கிளாஸ் மோரில் அரைத்த வெந்தயம் மற்றும் ஓமப் பொடியை சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.இவ்வாறு காலை மாலை இருவேளை குடித்து வந்தால் வாயுத் தொல்லை முழுமையாக கட்டுப்படும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)மோர்
2)சீரகம்

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி சீரகத்தை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.இந்த பொடியை ஒரு கிளாஸ் மோரில் போட்டு கலந்து குடித்தால் வாயுத் தொல்லை முழுமையாக கட்டுப்படும்.