முழங்கால் மூட்டு வலி 5 நிமிடத்தில் பறந்து விடும் இந்த தைலத்தை போட்டால்.. ஒரு முறை முயற்சித்து பாருங்கள்!!

0
23
#image_title

முழங்கால் மூட்டு வலி 5 நிமிடத்தில் பறந்து விடும் இந்த தைலத்தை போட்டால்.. ஒரு முறை முயற்சித்து பாருங்கள்!!

பொதுவாக வயதானவர்களை பாதிக்கு நோயாக மூட்டுவலி இருந்து வந்தது.ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் வயதானவர்களை காட்டிலும் இளவயதினர் தான் இந்த மூட்டு வலியால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதற்கு ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம் காரணமாக சொல்லப்படுகிறது.உடலில் உள்ள மூட்டு எலும்புக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காத போது அவற்றில் தேய்மானம் உண்டாகி வலி ஏற்படும்.இதனை தான் முழங்கால் மூட்டு வலி என்கிறோம்.

இதை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை வழியில் தீர்வு காண்பது மிகவும் சிறந்ததாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*வேப்ப எண்ணெய் – 1/2 லிட்டர்

*கிச்சிலி கிழங்கு – 8 முதல் 10

செய்முறை:-

முதலில் வேப்ப எண்ணெய் 1/2 லிட்டர் எடுத்து ஓரு சுத்தமான இரும்பு கடாயில் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து வேப்ப எண்ணெய் ஊற்றி வைத்துள்ள கடாயை வைக்கவும்.வேப்ப எண்ணெய்யில் ஒரு வித வாசனை வரும்.அவை குமட்டலை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.இதனை சரி செய்யவும்,வேப்ப எண்ணெய் போல் மூட்டு வலிக்கு சிறந்த
தீர்வாக இருக்கும் மற்றொரு பொருளான கிச்சிலி கிழங்கு 8 முதல் 10 எடுத்து கொள்ளவும்.இதனை ஒரு உரலில் போட்டு தட்டி கொள்ளவும்.

பின்னர் தட்டி வைத்துள்ள இந்த கிச்சிலி கிழங்கை சூடாகி கொண்டிருக்கும் வேப்ப எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.எண்ணெய் நன்கு காய்ந்து கெட்டி பதத்திற்கு வரும் வரை விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து இந்த வேப்ப எண்ணெய் தைலத்தை நன்கு ஆறவிட்டு ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.

இரவு தூங்குவதற்கு முன் முழங்கால் மூட்டுகளின் மேல் தயார் செய்து வைத்துள்ள தைலத்தை போட்டு நன்கு மஜாஜ் செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு வலி உடனடியாக சரியாகி விடும்.