Health Tips

இதை மூட்டுகளின் மேல் தடவினால்.. சில நிமிடங்களில் மூட்டு வலி மாயமாகும்..!!

இதை மூட்டுகளின் மேல் தடவினால்.. சில நிமிடங்களில் மூட்டு வலி மாயமாகும்..!!

இன்றைய உலகில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம், மூட்டுகளில் தேய்மானம், அடிபடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய்

*கடுகு எண்ணெய்

*கற்பூரம்

*பூண்டு

*மஞ்சள் தூள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய். 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.

பின்னர் அதில் தூள் செய்த கற்பூரம் ஒன்று, இடித்த பூண்டு ஒன்று மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வரை சூடேற்றி விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெய் கலவையை மூட்டுகளின் மேல் தடவவும். இந்த எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன் உபயோகிப்பது நல்லது. மூட்டுகள் சூடு பொறுக்கும் அளவிற்கு எண்ணெய் காய்ச்சினால் போதும்.இவ்வாறு தொடர்ந்து மூட்டுகளின் மேல் தடவி வருவதன் மூலம் மூட்டு வலி பாதிப்பு முழுமையாக நீங்கி விடும்.

Kanavu Palangal in Tamil : கனவில் பணம் வந்தால் என்ன பலன்..?

பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 அடிப்படை சாஸ்திரக் குறிப்புகள்..!!