இதை செய்தால் ஒரு கடி எறும்பு கூட வீட்டு பக்கம் அண்டாது!! 100% தீர்வு இருக்கு!!

0
49
#image_title

இதை செய்தால் ஒரு கடி எறும்பு கூட வீட்டு பக்கம் அண்டாது!! 100% தீர்வு இருக்கு!!

எறும்புகளின் சிவப்பு எறும்பு,சாமி எறும்பு என்று சொல்லப்படும் கருப்பு எறும்பு,கட்டெறும்பு என்று பல்வேறு வகைகள் இருக்கிறது.நம்மில் பலர் வீடுகளில் இந்த எறும்பு தொல்லைகள் அதிகம் இருக்கும்.இவை உண்ணும் உணவு,இனிப்பு பொருட்கள் என்று அனைத்து இடங்களிலும் வரிசை கட்டி செல்கிறது.நாம் உடுத்தும் துணிகளில் கூட இவை பரவலாக காணப்படுகிறது.நாம் உண்ணும் உணவு பண்டம் கடுகளவு விழுந்தால் கூட அடுத்த நொடியில் எறும்பு கூட்டம் அதை உண்ண வரிசை கட்டிக்கொண்டு வரும்.

இத்தனை எறும்புகள் எங்கிருந்து வருகிறது? எப்படி இவ்வளோ எறும்புகள் உற்பத்தியாகிறது என்ற ஆராய்ச்சி நமக்கு தேவையில்லை.நமக்கு தேவை அதை வீட்டிற்குள் வராமல் தடுக்க வேண்டும் அல்லது ஒழிக்க வேண்டும்.இதற்காக கடைகளில் பணம் கொடுத்து ரசாயனப் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் எறும்பு தொல்லைக்கு தீர்வு கண்டு விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரம் – 4

*ஷாம்பு – 1 பாக்கெட்

*எலுமிச்சம் பழம் – 1

*இலவங்கம் – 10

செய்முறை விளக்கம்:-

1)எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக அறுத்து கொள்ளவும்.இதன் சாற்றை ஒரு பவுலில் பிழிந்து கொள்ளவும்.

2)பின்னர் 10 இலவங்கத்தை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தூள் செய்து கொள்ளவும்.இதை எலுமிச்சை சாறு பிழிந்து வைத்துள்ள பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

3)பின்னர் பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம்(சூடம்) நான்கு என்ற எண்ணிக்கையில் எடுத்து தூள் செய்து அதை அந்த பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.

4)அடுத்து நாம் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு 1 பாக்கெட் அளவு எடுத்து அந்த பவுலில் ஊற்றிக் கொள்ளவும்.இறுதியாக 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்.

5) இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் கடி எறும்பு கூட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே பண்ண வேண்டும்.இந்த முறையை அடிக்கடி செய்து வந்தோம் என்றால் நம்மை பாடாய் படுத்தி வரும் கடி எறும்பு கூட்டங்களை எளிதில் வீட்டை விட்டு வெளியேற்றி விடலாம்.