இவ்வாறு செய்தால் நுரையீரல் சளி நொடியில் கரைந்து வெளியேறிவிடும்!

0
188
#image_title

இவ்வாறு செய்தால் நுரையீரல் சளி நொடியில் கரைந்து வெளியேறிவிடும்!

நுரையீரலில் தேங்கி கிடந்த சளி முழுவதுமாக கரைந்து வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு
2)எலுமிச்சை சாறு
3)தேன்

செய்முறை:-

இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

தண்ணீர் சூடானதும் இடித்த பூண்டு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விடவும்.

பூண்டு + எலுமிச்சை சாறு நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு கிளாஸுக்கு இதை வடிகட்டி தேன் கலந்து குடித்தால் நுரையீரலில் படிந்து கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்பூரவல்லி
2)மிளகு
3)எலுமிச்சை சாறு
4)தேன்

செய்முறை:-

உரலில் இரண்டு கற்பூரவல்லி தலையை போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு இரண்டு மிளகை போட்டு இடித்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். 2 நிமிடங்கள் கழித்து இடித்த கற்பூரவல்லி மற்றும் மிளகை போட்டு குறைவான தீயில் கொதிக்க விடவும்.

தொடர்ந்து ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கிளாஸுக்கு வடிகட்டி கொள்ளவும்.

இந்த பானத்தில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் நாள்பட்ட நுரையீரல் சளி அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.