இதை செய்தால் சர்க்கரை நோயே கண்டு அலறும்..!! 100% அனுபவ உண்மை..!!

0
69
#image_title

இதை செய்தால் சர்க்கரை நோயே கண்டு அலறும்..!! 100% அனுபவ உண்மை..!!

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழ வகைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
பழங்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் அவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் பெரும் பங்காற்றுகிறது.

தினமும் ஒரு பழம் உண்டால் உடலில் உள்ள பல நோய் பாதிப்பு விரைவில் குணமாகும். அந்த வகையில் நம் மண்ணில் விளையக்கூடிய பழ வகைகளில் ஒன்றான நாவலில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இவை சர்க்கரை நோய் நோயை குணப்படுத்தும் மருந்தாக செயல்படுகிறது.

இந்த சரக்கரை நோயை குணமாக்க குணப்படுத்த தினமும் 1 கிளாஸ் நாவல் ஜூஸ் செய்து பருகுங்கள். இந்த பழம் சீசன் டைமில் தான் கிடைக்கும். எனவே இந்த பழத்தை எங்கு கண்டாலும் விடாதீர்கள்.

சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:-

பரம்பரை தன்மை , அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல், உடல் பருமன், மன அழுத்தம்
அடிக்கடி கர்ப்பம் அடைதல், உயர் இரத்த அழுத்தம், இரத்த மிகை கொழுப்பு, சினைப்பை நீர்க்கட்டி, சோம்பலான வாழ்க்கை முறை.

சர்க்கரை நோய் அறிகுறிகள்:-

அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், அதிகப்படியான உடல் சோர்வு, தண்ணீர் தாகம் அதிகரித்தல்
கண் பார்வை மங்குதல், அதிகப்படியான தலைவலி.

நாவல் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*பிஞ்சு நாவல் பழம்

*தண்ணீர்

செய்முறை…

ஒரு கைப்பிடி அளவு நாவல் பழத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு மாற்றி பருகவும். இவ்வாறு செய்தால் சர்க்கரை நோய் விரைவில் குணமாகும்.

நாவல் பழம் ஜூஸ் பயன்கள்:-

*இதில் அதிகளவு கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், சோடியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

*இந்த நாவல் பழத்தில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்து காணப்படுகிறது.

*தோல் தொடர்பான பாதிப்பு, மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, இரத்தம் தொடர்பான பாதிப்பு என அனைத்து பாதிப்பையும் சரி செய்ய உதவுகிறது.