இதை செய்தால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி மற்றும் முதுகு வலி வராது.. 100%அனுபவ உண்மை!!

0
74
#image_title

இதை செய்தால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி மற்றும் முதுகு வலி வராது.. 100%அனுபவ உண்மை!!

பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பாதிப்பு மூட்டு வலி.இந்த பாதிப்பு ஏற்பட்டால் எளிதான வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.இந்த வலி மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது.

அதேபோல் முதுகுவலி என்பது அனைவருக்கும் தீராத ஒரு பிரச்சனையாக இருக்கிறது.இதை
ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்;-

*பால் – 1 டம்ளர்

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 4 அல்லது 5

*பூண்டு – 3

செய்முறை:-

முதலில் 3 பூண்டு பற்களை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு உரலில் 4 அல்லது 5 கருப்பு மிளகு சேர்த்து இடித்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் பால் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.இவை கொதிக்கும் நேரத்தில் இடித்த மிளகு 4 அல்லது 5 சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து கொள்ளவும்.

பின்னர் இந்த பாலை ஒரு டம்ளரில் ஊற்றி பருகவும்.சுவைக்காக தேன்,சர்க்கரை போன்ற எந்த பொருளையும் சேர்க்க கூடாது.இவ்வாறு தொடர்ந்து இந்த பாலை பருகி வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி மற்றும் முதுகு வலி உடனடியாக சரியாகிவிடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 1/4 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி வெந்தயம்,1/2 தேக்கரண்டி சீரகம்,1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

அடுத்து இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.இதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.பின்னர் தண்ணீர் சூடு பொறுக்கும் நிலைக்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றி அதில் தயார் செய்து வைத்துள்ள சீரகம் + வெந்தயம் + கருப்பு மிளகு பொடியில் 1 தேக்கரண்டி சேர்த்து பருகி வந்தோம் என்றால் பாடாய் படுத்தி வந்த மூட்டு வலி மற்றும் முதுகு வலி விரைவில் சரியாகும்.

அதேபோல் ஒரு பவுலில் சிறிதளவு வெந்தயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இந்த பேஸ்டை முதுகு மற்றும் மூட்டுகளில் வலி இருக்கும் இடத்தில் போட்டு நன்கு மஜாஜ் செய்து வருவதன் மூலமும் இந்த பாதிப்பு சரியாகும்.