இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

0
92
#image_title

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

நவீன கால வாழ்க்கை சூழலில் பல்வேறு ஆபத்தான நோய் பாதிப்புகள் கூட அசால்ட்டாக நம்மை தொற்றி விடுகிறது. சில வருடங்களுக்கு முன் மாரடைப்பு என்ற நோய் வயதானவர்களை மட்டுமே பாதித்து வந்த நிலையில் தற்பொழுது இளம் வயது ஆட்களையும் குறித்து தாக்கி வருகிறது.

இந்த மாரடைப்பு பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து காணப்படும் நிலையில் அந்த பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் சமையலில் வாசனைக்காக உபயோகிக்கும் கொத்தமல்லி தழைகளை வைத்து தேநீர் செய்து பருகுவது நல்லது.

கொத்தமல்லி தழைகளில் அடங்கியுள்ள சத்துக்கள்:-

*இரும்புச் சத்து

*வைட்டமின் ஏ, சி, கே

*மாங்கனீஸ்

*கால்சியம்

*பாஸ்பரஸ்

கொத்தமல்லி இலை தேநீர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி இலை – 1/4 கப்

*மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

*அன்னாசி மொக்கு – 1

*தேன் – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில்
ஒரு அன்னாசி மொக்கு மற்றும் 1 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

பிறகு அதில் 1/4 கப் கொத்தமல்லி இலைகளை சேர்த்து 2 நிமிடம் வரை கொதிக்க விட்டு அணைத்துக் கொள்ளவும். இந்த கொத்தமல்லி இலை தேநீரை ஒரு டம்ளருக்கு வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து பருகவும்.

கொத்தமல்லி தழையின் பயன்கள்:-

இளம் வயது மாரடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க கொத்தமல்லி இலை தேநீர் சிறந்த தீர்வாக இருக்கும்.

இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு, உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.

இந்த இலையில் டீ போட்டு குடித்தால் செரிமானக் கோளாறு, இரத்த அழுத்தம்,
சரும பாதிப்பு, உடல் பருமன் பாதிப்பு உள்ளிட்டவை சரியாகும்.