இதை குடித்தால் ஒரு வாரத்தில் 7 கிலோ எடை கடகடன்னு குறைந்து விடும்..!!

0
50
#image_title

இதை குடித்தால் ஒரு வாரத்தில் 7 கிலோ எடை கடகடன்னு குறைந்து விடும்..!!

இன்றைய நவீன உலகில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை ருசிக்க தொடங்கி விட்டதால் உடலில் பல்வேறு நோய்கள் உருவாகத் ஆரமித்து விட்டது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் சத்தான உணவுகளை நாம் எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் உண்ணும் துரித உணவுகள் நம் உடல் எடையை கூட்டி விரைவில் நோய் பாதிப்புக்கு வித்திடுகிறது. இந்த உடல் எடை கட்டுக்குள் வைக்காவிட்டால் பல நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேர்ந்து விடும்.

உடல் எடை அதிகரிக்க காரணம்:-

*ஜீன் அமைப்பு

*துரித உணவு

*எண்ணெய் உணவு

*உடல் உழைப்பு இல்லாமை

*உடற் பயிற்சி இல்லாமை

தேவையான பொருட்கள்:-

*கருஞ்சீரகம்

*இஞ்சி

*எலுமிச்சை சாறு

*மஞ்சள் தூள்

செய்முறை…

முதலில் 1 துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அதேபோல் கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி போட்டு பொடி செய்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின்னர் இடித்து இஞ்சி மற்றும் பொடித்த கருஞ்சீரகத்தை சேர்த்து கலக்கி கொள்ளவும்.

அடுத்து 1 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். அதில் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும். இதை இரவு உணவு உட்கொண்ட பிறகு பருகி வருவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அனைத்தும் கரைந்து உடல் ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும்.