மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!!

0
153
#image_title

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!!

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த மலச்சிக்கல் பிரச்சனையை இன்று பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனுபவித்து வருகின்றனர்.

எளிதில் செரிக்காத உணவை சாப்பிடுதல், மலம் வந்தால் அதை கழிக்காமல் அடக்கி வைத்தல், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.மலச்சிக்கலுக்கு மருந்து மாத்திரை எடுத்து வந்தால் அவை உடல் நலத்தை தான் பாதிக்கும்.முழுமையான தீர்வு என்பது கிடைக்காது.எனவே வீட்டு வைத்தியம் மூலம் மலச்சிக்கலுக்கு முழுமையான தீர்வு காண்பது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)மோர்
2)வெந்தயம்
3)சீரகம்
4)ஒமம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி ஓமம் போட்டு மிதமான தீயில் கருகிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி ஓமம் போட்டு 1 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த பொருட்களை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு கிளாஸ் மோரில் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி போட்டு கலக்கி பருகவும்.

இந்த மோரை காலை நேரத்தில் பருகுவது நல்லது.மோரில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்து இருக்கிறது.இதை குடித்தால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்து மலக் குடலில் இறுகி போன மலம் அனைத்தும் இளகி வெளியேறும்.