வீட்டில் எலிகள் ராஜ்ஜியமா? கவலையை விடுங்க.. இப்படி செய்தால் ஆட்டத்தை அடக்கி விடலாம்!!

0
30
#image_title

வீட்டில் எலிகள் ராஜ்ஜியமா? கவலையை விடுங்க.. இப்படி செய்தால் ஆட்டத்தை அடக்கி விடலாம்!!

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் எலிகள் சேட்டை அதிகம் இருக்கும்.தக்காளி முதல் பேப்பர் வரை அனைத்தையும் ருசி பார்க்கும் இந்த எலிகளால் நமக்கு டென்ஷன் தான் அதிகமாகும்.இதை ஒழிக்க நாமும் பல வழிகளை முயற்சி செய்திருப்போம்.ஆனால் நமக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

இப்படி நம்மை பாடாய் படுத்தி வரும் எலிகளை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விடலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் கீழ் உள்ள செய்முறை விளக்கத்தை பாலோ செய்து பாருங்கள் ஒரே நாளில் வீட்டில் உள்ள அனைத்து எலிகளும் வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

*அரசி சாதம் – 4 தேக்கரண்டி

*பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி

*ஹார்பிக் – 2 தேக்கரண்டி

*ஊதுபத்தி அட்டை – 1

செய்முறை:-

1.முதலில் ஒரு சிறிய பவுலை எடுத்து கொள்ளவும்.

2.அதில்அரிசி சாதம் 4 தேக்கரண்டி போட்டு கையால் நன்கு மசித்து கொள்ளவும்.

3.பிறகு கேக் செய்ய பயன்படுத்தும் பேக்கிங் பவுடர் 2 தேக்கரண்டி எடுத்து அதில் சேர்க்கவும்.
முக்கியமாக கையில் ஒரு க்ளவ்ஸ் போட்டு கொண்டு இந்த ரெமிடியை தயார் செய்யவும்.கையுறை இல்லையென்றால் பயன்படுத்தாத அதாவது வீணான டூத் பிரஸ் ஒன்றை வைத்து இந்த பொருட்களை கலக்கவும்.

4.பேக்கிங் பவுடருக்கு பிறகு கழிவறைக்கு பயன்படுத்தும் ஹார்பிக்கில் இருந்து 2 தேக்கரண்டி எடுத்து அந்த பவுலில் சேர்க்கவும்.பிறகு பிரஸ் அல்லது கையுறை போட்டு கொண்டு நன்கு கலக்கி விடவும்.

5.அதன் பின் பூஜைக்கு பயன்படுத்தும் ஊதுபத்தியின் அட்டை பெட்டி அல்லது வேஸ்ட் அட்டை பெட்டிகளை 4 அல்லது 5 துண்டுகளாக கிழித்து வைத்து கொள்ளவும்.

6.அதில் செய்து வைத்துள்ள பேஸ்டை தடவி வீட்டில் எலிகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வைக்கவும்.இப்படி செய்வதன் மூலம் எலிகள் அதை உண்ணும்.அதன் பின் வயிறு வீங்கி இறந்து விடும்.இதை தொடர்ந்து 3 முதல் 4 நாட்கள் செய்தால் வீட்டில் உள்ள மொத்த எலிகளும் செத்து மடிந்து விடும்.