மஞ்சள் காமாலை உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்க!! அப்புறம் நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

0
51
#image_title

மஞ்சள் காமாலை உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்க!! அப்புறம் நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

உடலில் பித்தம் அதிகரித்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்.இந்த பித்தம் அதிகமாகும் பொழுது வேளையில் இரத்ததில் கலந்து விடுகிறது.இதனால் இரத்தம் சூடேறுதல்,வயிற்றில் புளிப்பு தன்மை உண்டாகுதல்,சளி பிடித்தல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும்.இதை இயற்கை வழியில் எளிதாக சரி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:-

*கீழாநெல்லி – 3 கிராம்

*சீரகம் – 3 கிராம்

*பழுத்த பூவரச இலை – 3 கிராம்

*கரிசலாங்கண்ணி – 3 கிராம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் கீழாநெல்லி,பழுத்த பூவரசு இலை,கரிசலாங்கண்ணி,சீரகம் உள்ளிட்டவற்றை 3 கிராம் அதாவது அனைத்தையும் சம அளவு எடுத்து கொதிக்கும் நீரில் போடவும்.

பின்னர் 1 1/2 டம்ளர் 1 டம்ளராக சுண்டி வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.இந்த கஷாயம் மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

மற்றொரு ரெமிடி:-

தேவையான பொருட்கள்:-

*கீழாநெல்லி – 1 கைப்பிடி அளவு

*சீரகம் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அம்மிக்கல்லில் கீழா நெல்லி 1 கைப்பிடி அளவு மற்றும் சீரகம் 1 தேக்கரண்டி அளவு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து காய்ச்சவும்.1 1/2 கிளாஸ் தண்ணீர் 1 கிளாஸாக வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.இவ்வாறு செய்வதன் மூலம் மஞ்சள் காமாலை பாதிப்பு சரியாகும்.