மார்பில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள் போதும்!!

0
187
#image_title

மார்பில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள் போதும்!!

மார்பில் தேங்கிய சளி கரைந்து வெளியேற மருத்துவரை அணுகாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு
2)ஓமம்
3)மஞ்சள் தூள்
4)வெற்றிலை
5)பால்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு ஸ்பூன் ஓமத்தை போட்டு மிதமான தீயில் கருகிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த ஓமத் தூள்,வெற்றிலை சாறு,சுக்கு தூளை போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு பாலை காய்ச்சவும்.

அதன் பின்னர் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் மார்பில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறிவிடும்.