மூட்டு வலி வேரோடு நீங்க இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க போதும்!

0
195
#image_title

மூட்டு வலி வேரோடு நீங்க இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க போதும்!

சிலருக்கு சிறிது நேரம் வேலை பார்த்தாலே மூட்டுகளில் வலி ஏற்பட்டு விடும். கூடவே உடல் சோர்வும் உண்டாகும். இந்த மூட்டு வலி பொதுவான பாதிப்பு தான் என்றாலும் குணப்படுத்திக் கொள்ளத் தவறினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தேவையான பொருட்கள்

*கோதுமை
*வேர்க்கடலை
*கருப்பு கொண்டைகடலை

ஒரு கிண்ணத்தில் வேர்க்கடலை, கோதுமை, கருப்பு கொண்டை கடலை சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு காட்டன் துணியில் இந்த பொருட்களை சேர்த்து மூட்டை கட்டி இரண்டு இரவு வைக்கவும்.

இவ்வாறு செய்தால் பயிர்கள் முளைகட்டி இருக்கும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பால் போல் நன்கு அரைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து பருகவும்.

தினமும் காலை டீ, காபிக்கு பதில் இதை 1 கிளாஸ் குடித்து வந்தால் மூட்டு வலி, எலும்பு தேய்மானம், முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவை முற்றிலும் குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்…

*ராகி
*கம்பு
*கருப்பு உளுந்து
*வெள்ளை சோளம்

ஒரு பாத்திரத்தில் ராகி, கம்பு, கருப்பு உளுந்து, வெள்ளை சோளம் ஆகியவற்றை சம அளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தம் செய்யவும்.

இதை ஒரு காட்டன் துணியில் போட்டு நன்கு காயவைத்து எடுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அரைத்த பொடி 2 ஸ்பூன் அளவு மற்றும் கருப்பட்டி தேவையான அளவு சேர்த்து காய்ச்சி குடிக்கவும். இவ்வாறு அடிக்கடி செய்து குடித்து வந்தால் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.