Tuesday, September 17, 2024
Home Blog Page 4902

நாளை சகல தோஷங்களையும் நீக்கும் சனிப் பிரதோஷம்! சிவனை வழிபடுவது எப்படி?

0

நாளை சகல தோஷங்களையும் நீக்கும் சனிப் பிரதோஷம்! சிவனை வழிபடுவது எப்படி?

சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனாலும் அவருக்கு உகந்த தினமான பிரதோஷ காலத்தில் எம்பெருமான் சிவனை அவருடைய ஆலயத்திற்குச் சென்று வணங்குவதே சிறந்த பலனை அளிக்கும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சிவ வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு அமாவாசைக்கு முன்னதான மூன்றாம் நாளும் பெளர்ணமிக்கு முன்னதான மூன்றாம் நாளும் பிரதோஷம் வரும் ஆக ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு பிரதோஷங்கள் உண்டு.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் தான் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த வேளையில், சிவாலயங்களில், சிவ பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது சிவனாருக்கும் நந்திதேவருக்கும் பல்வேறு விசேஷ பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறும்.

இந்தத் திரயோதசி திதி சனிக் கிழமைகளில் வந்தால் மஹா சனிப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி வரும் சனிக்கிழமை 09.11.2019 அன்று மஹா சனிப் பிரதோஷம் வருகிறது.

இதே போல் ஒவ்வொரு கிழமையன்றும் வரும் பிரதோஷமும் மகத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் சனிக்கிழமை தினங்களில் வருகிற பிரதோஷம் மிகவும் உன்னதமானது. ஒரேயொரு சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தின் போது, சிவனாரைத் தரிசனம் செய்தாலே, நம் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களெல்லாம் தொலைந்துவிடும் என்பது முன்னோர்கள் கூறிய ஐதீகம். ஐந்து சனிப் பிரதோஷ தரிசனம் முந்தைய பிறவியில் செய்த பாவங்களையும் போக்கவல்லது என்கிறார்கள் சிவ ஆச்சார்யர்கள்.

பிரதோஷ விரதம் :

பிரதோஷ நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ காலமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி சிவ பெருமானுக்கு உகந்த மந்திரமான ஐந்தெழுத்தை சிவாய நம என ஓதி வழிபட வேண்டும்.

எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் ‘சனிப் பிரதோஷம்” அதிக அளவில் பலன் தரக் கூடியது என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய்பிறை) சனிக்கிழமையில் வந்தால் ‘மஹாப் பிரதோஷம்” என்றும் வழங்கப்படுகிறது.

சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் முழுவதும் ஆலயம் சென்று இறை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும்போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடியே கேட்க வேண்டும்.

சிவ மந்திரமான நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும்.

பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்கு உகந்த பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் இந்நாளில் அபிஷேகம் நடைபெறும். இவருக்கும் எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம்.

பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

பாசத்தின் பொருள் மாவீரன் ஜெ.குரு தான்! மருத்துவர் இராமதாஸின் உணர்ச்சி மிகுந்த கவிதை

0

பாசத்தின் பொருள் மாவீரன் ஜெ.குரு தான்! மருத்துவர் இராமதாஸின் உணர்ச்சி மிகுந்த கவிதை

மாவீரன் காடுவெட்டி குரு தன் மீது அளவுக்கு அதிகமாக பாசத்தை வைத்திருந்ததை கவிஞனாக மாறி கவிதையாக வெளிக்காட்டிய பாமக நிறுவனர் இராமதாஸ், தன் கம்பீரமான பேச்சால் வன்னிய இளைஞர்களை தாண்டி மற்ற சமுதாய இளைஞர்களையும் நாடி நரம்புகளை இழுக்க செய்வார் ஜெ.குருநாதன் எனப்படும் காடுவெட்டி ஜெ.குரு, இராமதாஸ் மீது மிகுந்த பாசத்தை காட்டுவார்,

மரணம் ஒன்று தான் அய்யாவிடம் இருந்து என்று அடிக்கடி பொது மேடைகளில் ‌சொல்லி தன் பாசத்தை வெளிகாட்டுவார் மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு,. நுரையீரல் ‌பாதிப்பு காரணமாக ‌அவர் உயிரிழந்தது பாமகவினருக்கு மட்டும் அல்லாமல் தனிப்பட்ட முறையில் மருத்துவர் இராமதாசுக்கும் தான்,

அவர் எழுதிய கவிதை!

பாசத்தின் பொருள் அவன் தான்!

என் அகராதியில் பாசம் என்ற
இடத்தில் அவன் பெயர் தான்!
விசுவாசம் என்பதற்கு வீழாத
எடுத்துக்காட்டு அவன் தான்!!

நான் சார்ந்த விஷயங்களில்…
உண்மை அவன் உடன்பிறவா சகோதரன்!
நேர்மையின் நிழலும் அவன் தான்….
வீரத்தின் விளைநிலமும் அவனே தான்!!

அவனுக்கு நான் ஒருபோதும் எந்த
உத்தரவும் பிறப்பித்ததே கிடையாது!
என் உணர்வை அறிந்து உடனடியாக
செய்து முடிப்பான் எந்த செயலையும்!!

அவன் ஒரு வியாழன்….. அவன் என்னை
சுற்றி வருவதாலேயே நான் சூரியன் ஆனேன்!
அவன் மீது அன்பு காட்டி, அரவணைத்ததாலேயே
அவனுக்கு நான் தாயும், தந்தையுமானேன்!!

இவற்றையெல்லாம் நினைக்கையில்
நெஞ்சமெல்லாம் இனிக்கிறது!
அவனை நேரில் பார்க்க தேடுகிறேன்…
காணவில்லை…. மாவீரா…. எங்கே போனாய்?‌

என்று மாவீரன் மீது உள்ள பாசத்தை கவிதையாக வர்ணித்து உள்ளார்.

பிரேக்கிங்: அயோத்தி வழக்கின் தீர்ப்பு தேதி, நேரம் அறிவிப்பு!

0

பிரேக்கிங்: அயோத்தி வழக்கின் தீர்ப்பு தேதி, நேரம் அறிவிப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக இருதரப்பினர் கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு கடந்த பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதி முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டது

இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று வழக்கு பட்டியல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளது

தீர்ப்பு வெளியானதும் அயோத்தியில் எத்தகைய சூழல் நிலவுமோ? என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் நிலவி வருவதாகவும் இதனால் சர்ச்சைக்குரிய நிலத்தின் அருகே வசித்து வரும் மக்கள் தற்காலிகமாக அந்த பகுதியை விட்டு வெளியேறியிருப்பதாகவும் கூறப்படுகிறது

மாணவரை சுட்டுக்கொன்ற விஜய்யும் கழிவறையில் வழுக்கி விழுவாரா? நீதிமன்றம் அறிவுரை

0

மாணவரை சுட்டுக்கொன்ற விஜய்யும் கழிவறையில் வழுக்கி விழுவாரா? நீதிமன்றம் அறிவுரை

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் என்ர பகுதியை 19 வயது பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் என்பவரை அவரது நண்பர் விஜய் சமிபத்தில் சந்தித்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்டு கொன்றார். முகேஷின் நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைய விஜய் தலைமறைவானார்.

இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கையை அடுத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்த விஜய்யை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் விஜய் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் அதே நேரம் இளைஞர் விஜய் கழிவறையில் வழுக்கி விழாதவாறு பார்த்துக்கொள்ள போலீசுக்கு நீதிபதி அறிவுரை கூறினார்.

கடந்த சில மாதங்களாகவே போலீசார்களிடம் சிக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கழிவறையில் வழுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டுடன் தோன்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்தே நீதிபதி, காவல்துறைக்கு இதுபோன்ற அறிவுரையை வழங்கியுள்ளதாக தெரிகிறது

காலையில் பேட்டி, மாலையில் முதல்வர் சந்திப்பு: என்ன நடக்குது ரஜினி வீட்டில்?

0

காலையில் பேட்டி, மாலையில் முதல்வர் சந்திப்பு: என்ன நடக்குது ரஜினி வீட்டில்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை கமல்ஹாசன் வீட்டில் நடந்த கே பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி கொண்டிருந்த நிலையில் திடீரென ரஜினிகாந்த் அளித்த பேட்டியால் ஊடகங்கள் பரபரப்பு அடைந்தன.

முதலில் பேட்டி கொடுத்த ரஜினிகாந்த் அதன் பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்ததால் இன்று முழுவதும் ரஜினிகாந்த் செய்திகளே முன்னணி ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருந்தது

குறிப்பாக இந்த பேட்டியில் அவர் ’தான் பாஜகவின் காவி நிறத்தில் சிக்க மாட்டேன் என்றும் தமிழகத்தில் இன்னும் ஆளுமை உள்ள தலைவர் இல்லாமல் வெற்றிடமாக இருப்பதாகவும் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரையும் அவர் ஆளுமையுள்ள தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த பேட்டி எடுத்துக் காட்டியது

இந்த நிலையில் காலையில் முதல்வரை விமர்சனம் செய்தது ரஜினிகாந்த் பேட்டி அளித்த நிலையில் மாலையில் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்தார். தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று இரு தரப்பிலும் கூறப்படுகிறது

இருப்பினும் இந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. தலைமைச் செயலக வட்டாரங்கள் இதுகுறித்து கூறிய போது ’லதா ரஜினிகாந்த அவர்களுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய பதவியை அளிக்க உள்ளதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் ஓரிரண்டு நாட்களில் தெரிந்துவிடும்

தனி அதிகாரியை எதிர்த்து வழக்கு: விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

தனி அதிகாரியை எதிர்த்து வழக்கு: விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கீதா என்ற தனி அதிகாரியை நேற்று நியமனம் செய்யப்பட்டதை அடுத்து இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் விஷால் இன்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும், நடிகர் சங்கம் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது இந்த நியமனம் செல்லாது என்றும், தனி அதிகாரி நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் விஷாலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்

இதன் பின்னர் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதாடுகையில் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கி இருப்பதாகவும், நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தில் வெற்றிடம் இருப்பதால் தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டதாகவும் பதிலளித்தார்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனி அதிகாரி நியமன தடைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், இது குறித்து தமிழக அரசு வரும் 14ஆம் தேதிக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும், அன்றைய தினம் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்து உத்தரவிட்டார்

இன்றைய வழக்கின் விசாரணையில் எப்படியும் தனி அதிகாரி நியமனத்துக்கு இடைக்காலத் தடை கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நடிகர் விஷாலுக்கு இந்த உத்தரவு அதிர்ச்சியை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது

பாமக தலைவர் G.K மணி மற்றும் திருமாவளவன் இடையேயான சந்திப்பு அரசியல் நாகரிகமா?! கூட்டணிக்கு அச்சாரமா?

0

பாமக தலைவர் G.K மணி மற்றும் திருமாவளவன் இடையேயான சந்திப்பு அரசியல் நாகரிகமா?! கூட்டணிக்கு அச்சாரமா?

சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பாமக தலைவர் G.K.மணி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் . திருமாவளவனுடன் சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது பாமக தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாமக தொண்டர்கள் சார்பில் பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணமே உள்ளன.

நேற்று சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் “நமக்கான சேட்டிலைட் தொலைக்காட்சி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுச்  செயலாளர் மல்லை சத்யா, இந்திய குடியரசு கட்சி தலைவர் சேகு தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழக அரசியலில் எலியும் பூனையுமாக எதிரான அரசியலை செய்து வரும் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சியின் தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து ஒருவரை ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியாக பேசிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சம்பந்தபட்ட கட்சிகளின் தொண்டர்கள் வரை அனைவருக்குமே இந்த சந்திப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பாமக மற்றும் விசிக என இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படும் போது இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்தது.ஆனால் மருத்துவர் ராமதாஸ் மூலமாக அரசியல் பயின்ற திருமாவளவன் பிரிந்து சென்று அந்த கட்சிக்கும்,குறிப்பாக வன்னியர் சமுதாயத்திற்கும் எதிராக மறைமுகமாகவும்,நேரிடையாகவும் என தரமற்ற செயல்களில் ஈடுபட்டது இரு கட்சியினரின் இடையே இடைவெளியை அதிக படுத்தியது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த பெரிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தொடர்ந்து இரண்டு கட்சிகளுக்கு இடையேயான பிரச்சினையை இரண்டு சாதிகளுக்கு இடையேயான பிரச்சனையாக கிளப்பி விட்டது. இப்படி தமிழ் சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகத்தினரிடையே பிரிவினையை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து மாறி மாறி இரு கட்சிகளும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன.

இந்நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என இருவரும் நேற்று சந்தித்துக் கொண்ட போது, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக கைகொடுத்து பேசிக்கொண்டார்கள். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்நிகழ்வு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்பாடுகளை பிடிக்காமல் இருந்த பாமக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மேடையிலும் சம்பந்தமே இல்லாமல் பாமகவை சீண்டி கொண்டிருந்த திருமாவளவன் பாமக கட்சியின் தலைவருடன் மகிழ்ச்சியாக பேசியது தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமையம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுடன் விசிக கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளை தவிர வேறு எந்த தொகுதியிலும் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய திமுக தலைமை அனுமதிக்கவில்லை.அப்போதே இது அரசியலில் நடைபெறும் நவீன தீண்டாமை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. அதையடுத்து தற்போது நடைபெற்ற விக்கரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட திருமாவளவன் அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய வாய்ப்பு வழங்கவில்லை.குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக வசிப்பது தலித் மக்கள் தான் என்ற நிலையிலும் திருமாவளவன் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க திமுக தலைமை அனுமதிக்கவில்லை.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்த முரசொலி அலுவலகம் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தை திரும்ப தர வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தான் திருமாவளவன் மழுப்பாலான பதிலை அளித்திருந்தார். தொடர்ந்து திமுக தலைமையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதும்,விசிக தொண்டர்களை எரிச்சலடைய செய்துள்ளது. மேலும் அதிமுக தலைமையிலான அரசு கவிழும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் செயல்படாத தன்மையால் மேலும் பெரும்பான்மை பெற்று வருகிறது. பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளும் அதிமுகவுடன் இணைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அந்த கூட்டணியே வெற்றி பெறும் சூழல் நிலவி வருகிறது.

எதிரும் புதிருமாக செயல்பட்ட பாமக மட்டும் விசிக ஒரே கூட்டணியில் இருக்க மாட்டோம் என முடிவு செய்திருந்தனர்.ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டும்,திமுகவில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க மறுப்பதாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என்றே எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் இதற்கு பாமக எதிராக அமைந்து விட கூடாது என்பதை உறுதி செய்யவே G.K.மணி மற்றும் திருமாவளவன் இடையேயான சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு வருகின்ற உள்ளாட்சி மட்டும் சட்டமன்ற தேர்தலில் அமையவுள்ள கூட்டணிக்கு அச்சாரமா? என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.

ப.சிதம்பரத்தை அடுத்து குறிவைக்கப்படும் திமுக பிரமுகர்!

0

ப.சிதம்பரத்தை அடுத்து குறிவைக்கப்படும் திமுக பிரமுகர்

பாஜகவின் பெரும் தலைவலியாக இருப்பது திமுக மட்டுமே என்ற ஒரு கருத்து பாஜகவின் மேலிடத்தில் இருந்து வருவது தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும் போது ’கோபேக் மோடி’ என்று கோஷம் போடுவது, பாஜகவை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது

இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ப சிதம்பரம் அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து திமுகவுக்கு அமித்ஷா-மோடி கூட்டணியினர் குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல் சமீபத்தில் பேட்டியளித்த ஒரு பாஜக பிரமுகர் ’தமிழகத்தில் இரண்டு பிரமுகர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்டார், இன்னொருவர் மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளார்

இதனை அடுத்து அந்த இன்னொரு பிரமுகர் அனேகமாக திமுக பிரமுகராகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் சம்பந்தப்பட்ட 2ஜி வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு உள்ளதாகவும் அதேபோல் திமுக பிரமுகர் சாதிக் பாட்சா கொலை வழக்கும் தூசு தட்டப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது

அமித்ஷா – மோடியின் பார்வை தற்போது திமுக பக்கம் திரும்பியுள்ளதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் திமுக இமேஜை உடைத்து காலி செய்தால்தான் தங்கள் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என்பதால் அடுத்த குறி திமுகவுக்குத்தான் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன

பாஜகவின் இந்த அதிரடியை எதிர்கொள்ள திமுகவும் தயாராக இருப்பதாகவும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் பாஜக அதிரடி காட்டினால் பதிலடி கொடுக்க ஊடகங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற முடிவில் திமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியின் திடீர் பாஜக எதிர்ப்பு பேட்டி ஏன்?

0

ரஜினியின் திடீர் பாஜக எதிர்ப்பு பேட்டி ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பாஜகவின் முகம் என்றும், பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்றும், அதே போல் ஆன்மீக அரசியல் என்ற பெயரில் இந்துத்துவத்தை ஆதரிப்பவர் என்றும் எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம் சாட்டி வந்தன. மேலும் ரஜினி பாஜகவில் இணைந்து விடுவார் என்றும் அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்க உள்ளார். அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்னதாகவே அவர், ’தான் ஆதரவாளர் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏனெனில் ரஜினிகாந்துக்கு அனைத்து மத இன ரசிகர்கள் இருப்பதால் அனைவரின் ஆதரவையும் பெற வேண்டும் என்பதே அவரது திட்டம்

இந்த நேரத்தில் பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை தனக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதிய ரஜினிகாந்த் இன்று தனது பேட்டியில் தான் பாஜக ஆதரவாளர் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்பார்த்தது போலவே ரஜினியின் இந்த பேட்டியை திமுக தவிர பாஜகவை பிடிக்காத அரசியல் கட்சிகள் வரவேற்று உள்ளனர் விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகள் ரஜினியின் பேட்டியை பாராட்டியுள்ளன

திமுக இந்த பேட்டி கொடுத்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது. குறிப்பாக திருவள்ளுவர் நாத்திகர்தான் என்று ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு திமுக உள்பட யாரும் பதில் கூறவில்லை என்பது தான் உண்மை. ரஜினிகாந்த் கூறிய வெற்றிடம் என்ற கருத்துக்கு மட்டும் துரைமுருகன் பதிலளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினியின் இந்த பேட்டியில் இருந்து அவர் தான் எந்த கட்சிக்கும் ஆதரவாளர் இல்லை குறிப்பாக பாஜகவின் ஆதரவாளர் இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்: ரஜினிகாந்த்

0

திருவள்ளுவருக்கும் தனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடந்து கொண்டிருப்பதாகவும் இந்த முயற்சியில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்றும் ரஜினிகாந்த் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்

இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் கே பாலசந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினிகாந்த் கூறியபோது, ‘திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியிருக்கும் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. திருவள்ளுவர் ஒரு சித்தர், ஞானி. சித்தர், ஞானிகள் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்

அதே நேரத்தில் திருவள்லுவர் ஒரு ஆத்திகர், கடவுள் நம்பிக்கை உடையவர். நாத்திகர் இல்லை. மேலும் நாட்டில் எவ்வளவோ மக்களுடைய பிரச்சினை இருக்கும் போது திருவள்ளுவர் விவகாரத்தை பெரிதாகத் தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

மேலும் பொன் ராதாகிருஷ்ணன் அடிக்கடி என்னை வந்து சந்திப்பதால் தான் பாஜகவில் இணையவிருப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி வருகின்றனர். திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயற்சிப்பது போல் எனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடந்து கொண்டிக்கின்றது அதில் திருவள்ளூர் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறினார்.

முன்னதாக கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்ற கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கே.பாலசந்தருடனான தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் கமல்ஹாசனுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.