ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 8, 2024
Home Blog Page 4903

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

0

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

புதுச்சேரி மாநில அதிமுகவின் முன்னாள் மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய புருஷோத்தம்மன் விஷவண்டு தாக்கி உயிரிழந்தார், புதுச்சேரி சட்டமன்றத்தில் இரண்டு முறை மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார்,. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி,

புதுச்சேரி அதிமுகவில் மாநில துணைச் செயலாளர், மாநில புறநகர் செயலாளர், விவசாயப் பிரிவுச் செயலாளர் போன்ற பல பதவிகளை வகித்தவர்,. அவர் தனக்கு சொந்தமான புதுவை திருக்கனூர் பக்கத்தில் உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் ராதாபுரத்தில் தனது விவசாய நிலத்தில் நடைபெற்ற பணிகளை பார்த்து கொண்டிருக்கும்போது விஷவண்டு கொட்டியதில் சம்பவ இடத்திலே மயங்கி விழுந்துள்ளார்,.

உடனடியாக அங்குள்ளவர்கள் அவரை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்,. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,.

நாளை அவரது இறுதிச்சடங்கு புதுச்சேரியில் நடக்கும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புருஷோத்தமன் மரணத்திற்கு தமிழுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

விஜய் நடிக்க வேண்டிய படத்தில் புதுமுக நடிகர்: டைட்டில் அறிவிப்பு

0

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ’யோகா அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது

ஆனால் இந்த படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. அதற்கான காரணம் கூறப்படவில்லை. இந்த படத்தில் நடிக்க விஜய் விரும்பவில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த படத்தில் அறிமுக நடிகர் வருண் என்பவர் நடிக்க உள்ளார். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷின் நெருங்கிய உறவினர் என்பதும் இந்த படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ’இமைபோல் காக்க’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் தூய தமிழில் இந்த படத்தின் டைட்டிலையும் கவுதம் மேனன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி

0

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி

தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகவிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டின் தீபாவளியும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில மாதங்களில் ஒன்பது முறை அறிவிக்கப்பட்டு அனைத்து ரிலீஸ் தேதிகளும் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு வந்ததால் தனுஷ் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது 10வது முறையாக நவம்பர் 29 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதால் இந்த தேதியில் கண்டிப்பாக படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் கமிட் ஆன முதல் படம் இதுதான். ஆனால் இந்த படம் ரிலீசுக்கு முன்னரே அவர் நடித்த ஒருசில படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. மேலும் இந்த படத்தில் சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி

0

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி

ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளர் இருப்பதுண்டு. அந்த வகையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக மீராமிதுனையே நெட்டிசன்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி மற்றும் தமிழக போலீஸ், தமிழக அரசு மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

தற்போது என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் நிறைய விஷயங்கள் தவறாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே நான் இருக்க முடியாத அளவு எனக்கு பிரச்சனைகள் உள்ளன. இதனால் வேறு மாநிலம் சென்றால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று எனக்கு தோன்றுகிறது. என் மீது 2 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டுமே பொய்யானது, போலியானது. லஞ்சம் வாங்கி கொண்டு என் மீது தமிழக போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்டபடி எந்த ஒரு தொகையும் தரவில்லை. நான் ஒரு ரூபாய் கூட அட்வான்ஸ் வாங்காமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து பத்து நாட்களில் மொத்தமாக தருவதாக கூறினார்கள். ஆனால் இன்று வரை எனக்கு பேமெண்ட் வரவில்லை.

இது சம்மந்தமாக விஜய் டிவிக்கு தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை. இந்த பேட்டிக்கு பின்னரும் விஜய் டிவி ஒப்பந்தப்படி எனது சம்பளத்தை கொடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தொலைக்காட்சியும் பெரும் பிரச்னையை சந்திக்க நேரிடும். மேலும் விஜய் டிவி மீது ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்வேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆன்லைன் சினிமா டிக்கெட்: களத்தில் குதிக்கும் அமேசான்

0

ஆன்லைன் சினிமா டிக்கெட்: களத்தில் குதிக்கும் அமேசான்

ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் கால்பதித்து வணிகம் செய்து வரும் நிலையில் தற்போது அடுத்ததாக சினிமா டிக்கெட் விற்பனையும் செய்யவுள்ளது

அமேசான் நிறுவனம் ’புக் மை க்ஷோ’ ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனத்துடன் இணைந்து சினிமா டிக்கெட்டுகளை விற்பனை செய்ய உள்ளது

இதற்காக அமேசான் நிறுவனத்தின் செயலியில் சினிமா டிக்கெட்டுக்கு என ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் சினிமா டிக்கெட் எடுப்பவர்கள் தனியாக புக்மைக்ஷோ அல்லது டிக்கெட் நியூ இணையதளங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அமேசான் செயலிலேயே சினிமா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்

அது மட்டுமின்றி ஆரம்பகால சலுகையாக குறிப்பிட்ட நாட்களுக்கு முன் பதிவு செய்யும் டிக்கெட்டுக்களுக்கு 2% கேஷ்பேக் சலுகையையும் அமேசான் வழங்கியுள்ளது

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இனிமேல் ஆன்லைன் மூலம் தான் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற வழிமுறையை விரைவில் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் அமேசான் நிறுவனம் இந்தத் துறையில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

#

போதி தர்மர் சிலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்! மத்திய அரசுக்கு இராமதாஸ் வேண்டுகோள்

0

போதி தர்மர் சிலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்! மத்திய அரசுக்கு இராமதாஸ் வேண்டுகோள்

போதி தர்மர் சிலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்தியா – சீனா இடையிலான இருதரப்பு உறவுகளையும், சுற்றுலாவையும் மேம்படுத்தும் நோக்குடன் காஞ்சிபுரத்தில் போதி தர்மருக்கு பிரமாண்ட சிலை அமைக்கவும், புத்த மதத்துடன் தொடர்புடைய தமிழக நகரங்களை இணைத்து சுற்றுலா வளையம் அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

புதிய வாய்ப்புகள் உருவாகும் போது அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது தான் அறிவார்ந்த அரசுக்கு அடையாளம் ஆகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங் அவர்களுக்கும் இடையே கடந்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுக்களின் போது, இந்தியா – சீனா இடையிலான பொருளாதார மற்றும் சுற்றுலா உறவுகளை வலுப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அதன் ஒருகட்டமாகவே போதி தர்மரின் பெருமைகளை மையமாக வைத்து தமிழ்நாட்டில் சுற்றுலா வளையம் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய அளவில் சிலை வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் வல்லபாய் படேலுக்கு 597 அடி உயரத்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை விட சற்று குறைந்த உயரத்தில் போதி தர்மரின் சிலை அமைக்கப்படும்; அங்கு போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ஒலி ஒளி காட்சிகள் ஏற்பாடு செய்யப்படும்; காஞ்சிபுரத்தில் தொடங்கி மாமல்லபுரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட புத்த மதத்துடன் தொடர்புடைய 6 நகரங்களை இணைக்கும் வகையில் வட்டச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்ய தமிழக அரசின் சுற்றுலாத் துறை திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை இரு வகைகளில் பயனளிப்பதாக அமையும். முதலாவதாக, சீன மக்களால் வணங்கப்படும் போதி தர்மரை மையமாக வைத்து சுற்றுலா மையம் அமைக்கப்படுவதால், அது சீன மக்களையும், சீன அரசையும் பெரிதும் கவரும். அதனால், இரு தரப்பு சுற்றுலாவும், வணிகமும் அதிகரிப்பது மட்டுமின்றி, இரு தரப்பு உறவும் வலுவடையும். இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள போதிலும், அதன் லட்சியங்களை எட்டுவதற்கு சீனாவின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேவை ஆகும். ஆனால், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் யாருக்கு வலிமை அதிகம் என்பது குறித்த போட்டியில் இந்தியாவும், சீனாவும் ஒன்றையொன்று நம்பிக்கையின்றி அணுகுவதால், இரு தரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அனைத்தையும் போதி தர்மர் சுற்றுலா மூலமான நடவடிக்கைகள் தகர்க்கும். அந்த வகையில் இது பயனுள்ளதாகும்.

இரண்டாவதாக போதி தர்மரின் பெருமையை தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பரப்ப கடந்த காலங்களில் தமிழக ஆட்சியாளர்கள் எதையும் செய்யவில்லை. சீனாவிலிருந்து இந்தியா வந்த யுவான்-சுவாங்கின் வரலாற்றை பாடநூல்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்த அளவுக்குக் கூட, நமது மண்ணின் மைந்தனான போதி தர்மரின் வரலாறு நமது மக்களுக்கும், மாணவர்களுக்கும் புகட்டப் படவில்லை. பல்லவ நாட்டை ஆண்ட கந்தவர்மனின் மூன்றாவது மகனாக பிறந்த போதி தர்மர், தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து புத்த துறவியாக மாறினார்.

பின்னர் சீனாவுக்கு சென்று புத்த மதத்தை பரப்பியதுடன், குங்பூ கலையையும் கற்பித்தார். சீனாவில் மட்டுமின்றி, தாய்லாந்து, ஜப்பான், ஹங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் போதி தர்மர் வணங்கப்படுகிறார். ஆனால், அவரைப் பற்றிய உண்மைகள் இதுவரை மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. இப்போது போதி தர்மரின் மிகப் பிரமாண்ட சிலை அமைக்கப்படுவதன் மூலமும், அவரது வாழ்க்கை வரலாறு பரப்பப்படுவதன் மூலமும் பல்லவ வம்சத்து இளவரசரான போதி தர்மரின் புகழ் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரவும்.

இந்திய சீன உறவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த அதிக நிதி தேவை. இத்திட்டத்தை தமிழக அரசால் மட்டும் செயல்படுத்த முடியாது. எனவே, போதி தர்மர் சிலை அமைத்தல் மற்றும் புத்த மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைத்து சுற்றுலா வளையம் அமைக்கும் திட்டத்திற்கு தேவையான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், சீனாவின் ஃபியூஜியான் மாநிலத்திற்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்துவது என்று மாமல்லபுரத்தில் இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடங்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கட்சியை பலப்படுத்த கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்

0

கட்சியை பலப்படுத்த கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வகையில் புதியதாக 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களை நியமிக்க கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார். கட்சி கட்டமைப்பு, பிரசார வியூகம் போன்ற வி‌ஷயங்களில் அவரது ஆலோசனைப்படி தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கமலஹாசன் வருகிற 7 ஆம் தேதி தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடயிருக்கிறார். வழக்கமாக தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமலஹாசன் இந்த முறை மிகப்பெரிய விழாவுக்கு திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் 7, 8, 9 என மூன்று நாட்கள் தொடர்ந்து கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பிறந்தநாள் அன்று 7 ஆம் தேதி காலை நடிகர் கமலின் தந்தைக்கு சொந்த ஊரான பரமக்குடியில் சிலை திறக்கப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

இதனையடுத்து பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர்திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட உள்ளது. 8 ஆம் தேதி சென்னையில் தனியார் திரையரங்கில் காந்தியின் 150-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஹே ராம் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் 14 ஆயிரம் இளைஞர்களுக்கு பதவி - கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்

இந்த கலந்துரையாடலில் கமலஹாசனும் பங்கேற்கிறார். இவருடன் ஹே ராம் படக்குழுவினரும் கலந்து கொள்வார்கள். அன்றைய தினமே கமலின் அலுவலகத்தில் மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு சிலை திறக்கப்படுகிறது.

அடுத்த நாள் 9 ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் உங்கள் நான் என்ற பிரபலமான கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட தமிழ், இந்தி, தெலுங்கு திரை பிரபலங்களும் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கமலஹாசன் பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்துகொண்டு இருந்தாலும் மறுபுறம் கட்சி கட்டமைப்பில் மேற்கொண்டு வரும் மாற்றங்களும் வேகம் எடுத்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சிக்கு புதிய பொதுசெயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் போது கமல்ஹாசனுக்கு நெருக்கமான கவிஞர் சினேகன், கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அதில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். தற்போது அவருக்கு கமல்ஹாசன் புதிய பதவி ஒன்றையும் அளித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள்‌ நீதி மய்யம் கட்சி

நமது மக்கள்‌ நீதி மய்யம் கட்சியின்‌ புதிதாக விரிவாக்கம்‌ செய்திருக்கும்‌ கட்டமைப்பில்‌, கட்சியின்‌ அனைத்து நிலைகளிலும்‌ பொறுப்பாளர்களை நியமிக்கும்‌ திட்டத்தின்‌படி ஏற்கனவே சில பொறுப்புகளுக்கான நியமனங்களை அறிவித்துள்ளேன். அதை‌ தொடர்ந்து, மேலும்‌ கீழ்கண்ட சில பொறுப்புகளுக்கான நியமனங்களை இப்போது அறிவிக்கிறேன்‌.

நான்‌ ஏற்கனவே குறிப்பிட்டபடி வரும்‌ 2021-ல்‌ தமிழகத்தின்‌ அரசியலை மாற்றியமைக்கும்‌ லட்சியத்தை வலுப்படுத்த கட்சி தொண்டர்களும்‌, என் அன்பிற்குரிய நற்பணி இயக்கத்தினரும்‌ தற்போது நியமிக்கப்படும்‌ பொறுப்பாளர்களோடு இணைந்து செயல்பட்டு, மக்களுக்கான நல்லாட்சி கனவை நிறைவேற்றிட உழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்‌.

கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்திருக்கும், விண்ணப்பங்களில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தொடர்ந்து அறிவிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டு மாநில செயலாளர் சார்பு அணி என்ற அணியை அறிவித்து அதில் கவிஞர் சினேகனுக்கு இளைஞரணி பொறுப்பை கமல்ஹாசன் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:

பிறந்தநாள் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் கமலுக்கு சில கட்சி பணிகள் இருக்கின்றன. புதிய பொறுப்பு நியமனங்கள் தொடர்ந்து நடைபெறும். அவற்றையும் முடித்த பின்னர் ஜனவரி, பிப்ரவரியில் தான் தேர்தல் பிரசாரம், சுற்றுப்பயணம் போன்றவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

கட்சி கட்டமைப்பில் நடக்கும் மாற்றங்கள் என்பது பணிகளை அனைவருக்கும் பிரித்து சமமாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் நடைபெறுகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பொறுப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலான பொறுப்புகள் அறிவிக்கப்பட இருக்கிறது. டிசம்பர் இறுதிக்குள் அனைத்து பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டு விடும்.

மேலும் இதில் கிராமப்புற இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். கல்லூரி மாணவர்கள் கூட நிறுத்தப்படலாம். கட்சி கட்டமைப்பில் உருவாக்கப்படும் மாற்றங்கள் அடுத்து கமலஹாசன் முதலமைச்சர் ஆவதற்கான அடித்தளமாக அமையும் என்றும் அவர்கள் கூறினர்.

தமிழகத்திற்கு 1600 கோடி ஒதுக்கீடு! ஜெர்மனி பிரதமர் அறிவிப்பால் எடப்பாடிக்கு ஜாக்பாட்

0

தமிழகத்திற்கு 1600 கோடி ஒதுக்கீடு! ஜெர்மனி பிரதமர் அறிவிப்பால் எடப்பாடிக்கு ஜாக்பாட்

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.

அவருக்கு டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை குடியரசு தலைவர் இராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பின்பு இந்தியா,ஜெர்மனி அரசுகளுக்கு இடையே உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

இரு நாட்டு பிரதமர்களும் இதில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு நாடுகளுக்கு இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தானது. மேலும் இரு நாட்டு தலைவர்களின் சார்பில் 5 கூட்டு பிரகடனங்களும் வெளியிடப்பட்டன.

ஜெர்மனி நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இன்று காலை டெல்லியில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்,.

இருநாடுகளுக்கிடையான கூட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பசுமை நகர்ப்புற இயக்கத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மேலும் தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையை சீரமைக்க ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். டெல்லியில் காற்று மாசுபாட்டால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை பயன்படுத்தினால் பாதிப்பை ‌கட்டுப்படத்தலாம் என்று ‌தெரிவித்தார்.

ஏற்கனவே கடும் நஷ்டத்தை சந்தித்து வரும் தமிழக போக்குவரத்துதுறை, ஜெர்மனி பிரதமரின் இந்த அறிவிப்பு தமிழக அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்.ராஜா மற்றும் ஸ்டாலின் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? பாஜக திமுக கூட்டணியா?

0

ஹெச்.ராஜா மற்றும் ஸ்டாலின் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? பாஜக திமுக கூட்டணியா?

தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசியச்செயலாளருமான ஹெச்.ராஜா திடீரென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவருக்குமிடையே நடந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்றது.

முன்னதாக அரசியல் ரீதியாக இருவருக்குமிடையே தொடர்ந்து பல நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்ட நிலையில் இந்த சந்திப்பு இரு கட்சியினரின் இடையே இணக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக மற்றும் தேசிய அரசியலில் தொடர்ந்து அதிரடியான கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர் தான் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. அதிலும், திமுகவுக்கு எதிராக என்றால் விளாசி எடுப்பார். அந்தளவுக்கு திமுக மீது தனது கடுமையான விமர்சனத்தை ஒவ்வொரு நிகழ்விலும் பதிவு செய்வார். இவ்வாறு எதிரும்-புதிருமாக இருக்கும் திமுகவினரும் ஹெச்.ராஜாவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மோதிக்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு இம்மாதம் திருமணம் வைத்துள்ள ஹெச்.ராஜா திருமண அழைப்பிதழ் வழங்க அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதல் அளித்து வருகிறார். ஏற்கனவே பிரதமர் மோடி, விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பிதல் வழங்குவதற்காக ஹெச்.ராஜா தரப்பு சார்பாக நேரம் கேட்கப்பட்டுள்ளது. இதனிடையே அவருக்கு இன்று நன்பகல் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரை சந்திப்பதற்கு நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அண்ணா அறிவாலயம் சென்ற ஹெச்.ராஜாவை, பூச்சி முருகன், தலைமை நிலைய நிர்வாகி காஜா போன்றோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து ஸ்டாலினை சந்தித்த ஹெச்.ராஜா பொன்னாடை போர்த்தி தனது மகள் திருமண அழைப்பிதழை அவர் கையில் வழங்கியுள்ளார். அதை வாங்கி ஸ்டாலின் முகப்பு பக்கத்தை படித்து பார்த்துக் கொண்டிருந்த போதே, நீங்க அவசியம் மகளின் திருமணத்தில் கலந்துக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஹெச்.ராஜா. அவரது அழைப்பை புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் திருமண விவரத்தை தவிர அரசியல் சம்பந்தபட்ட வேறு எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு முன் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பிதல் கொடுக்க சென்ற போது தனது மனைவி மற்றும் உறவினருடன் ஹெச்.ராஜா சென்றிருந்தார். பின்னர் விஜயகாந்த்துக்கு அழைப்பிதழ் அளிக்க சென்ற போதும் தன்னுடன் உறவினர் ஒருவரையும் அழைத்துச் சென்றிருந்தார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சென்ற போது மட்டும் தனி நபராக தான் மட்டும் சென்றுள்ளார் என்பது தான் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பாஜகவிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்டது.இதையெல்லாம் கருத்தில் கொண்டு அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அணி மாறுவதற்கான ஆரம்பகட்ட முயற்சியாக கூட இந்த சந்திப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த காலங்களில் தமிழக அரசியலில் உருவான ஒவ்வொரு கூட்டணிக்கும் இது போன்ற ஏதாவது ஒரு திருமண நிகழ்வு,அதற்கான சந்திப்பு தான் காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஹெச்.ராஜா மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையே நடைபெற்ற சந்திப்பு பாஜக மற்றும் திமுக கூட்டணி பேச்சு வார்த்தைக்கு ஆரம்பமாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: களத்தில் குதிக்கும் சோனியா

0

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: களத்தில் குதிக்கும் சோனியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டியை பெற்றுள்ளது

ஆனால் எந்த கட்சிக்கு முதல்வர் பதவி என்பதில் நடந்து வரும் அதிகார போட்டி காரணமாக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் அம்மாநிலத்தில் இன்னும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது

இந்த நிலையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா இணைந்து அமைக்கும் ஆட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறின

இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க சோனியா காந்தியை சரத்பவார் சந்திக்கவிருப்பதாகவும் சோனியா காந்தி இதற்கு சம்மதித்தால் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஹுசைன் தல்வாய் என்பவர், சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், ‘பல சந்தர்ப்பங்களில் காங்கிரசுக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளதாகவும், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பாஜக ஆட்சி அமையாமல் இருப்பதை விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சோனியா காந்தி என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்