Friday, September 20, 2024
Home Blog Page 4910

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

0

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் திரையுலகில் கமல்ஹாசன் 60 ஆண்டுகள் பணிபுரிந்ததை அடுத்து நவம்பர் 7 முதல் 9 வரை மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் ஒருநாளில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து சற்றுமுன் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிக்கை ஒன்றின்மூலம் தனது கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாளை மறுநாள்‌ (07/11/2019) எனது பிறந்த நாள்‌ அன்று, பரமக்குடியில்‌ எனது தந்தையார்‌ அய்யா 0.சீனிவாசன்‌ அவர்களின்‌ திருவுருவச்சிலையினைத்‌ திறக்கவுள்ளோம்‌ என்பதை தாங்கள்‌ அனைவரும்‌ அறிவீர்கள்‌.அப்பொழுது என்னை வரவேற்க வருகின்ற நண்பர்கள்‌, தொண்டர்கள்‌ மற்றும்‌ ரசிகப்பெருமக்கள்‌ எவ்விதத்திலும்‌ பொதுமக்களுக்கு. ஊறு விளைவிக்கக்கூடிய வகையில்‌ பேனர்கள்‌, ஃப்ளெக்ஸ்‌ மற்றும்‌ கொடிகள்‌ போன்றவற்றை கட்டாயம்‌ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்‌.

இவ்விசயத்தில்‌ எவ்வித காரணங்களும்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, எந்நிலையிலும்‌ சமரசங்கள்‌ செய்து கொள்ளப்பட மாட்டாது என்பதை மிகவும்‌ கண்டிப்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்‌. இனி நிகழவிருக்கும்‌ அரசியல்‌ மற்றும்‌ ஆட்சி முறைகளில்‌, மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி கொண்டு வரவிருக்கும்‌ மாற்றங்களை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும்‌ என்பது எனது விருப்பம்‌.

உள்ளாட்சி தேர்தலில் திமுக-அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

0

உள்ளாட்சி தேர்தலில் திமுக-அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

தமிழகத்தில் ஒரு வழியாக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த தேர்தலுக்காக இப்பொழுதே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக, பாமக ஆகிய மூன்று முக்கிய கட்சிகள் தலா இரண்டு மாநகராட்சி தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சி தொகுதிகளில் சென்னை மற்றும் கோவை ஆகிய இரண்டு மாநகராட்சி தொகுதிகளை பாஜக கேட்பதாக தகவல்கள் கசிந்துள்ளது

இதனை உறுதி செய்யும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’உள்ளாட்சி தேர்தலில் பாஜக 2 தொகுதிகளை கேட்பதாகவும் இது குறித்து கட்சி மேலிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா இரண்டு மாநகராட்சி தொகுதிகளை கேட்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் முக்கியமான மாநகராட்சி தொகுதிகளை குறி வைத்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும்பாலான மாநகராட்சி தொகுதிகளை கைப்பற்ற ஆசையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொடங்கிவிடும் என்று தெரிகிறது

பாஜகவுக்கு தாவிய கமல் கட்சியின் மூன்று பிரபலங்கள்!

0

பாஜகவுக்கு தாவிய கமல் கட்சியின் மூன்று பிரபலங்கள்!

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும் என்று பொதுமக்கள் மற்றும் படித்த மாணவர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல அக்கட்சிக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பும் கிடைத்தது

கமல் பிரச்சாரத்துக்கு சென்ற இடமெல்லாம் இளைஞர்களின் கூட்டம் அதிக அளவில் கூடியதால் அக்கட்சிக்கு புதிய வாக்காளர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல் கட்சி கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் ஒரு சில தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்று டெபாசிட் இழந்தனர்

கமலுக்கு சென்ற இடமெல்லாம் கூடிய கூட்டம் வாக்குகளாக மாறவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் தனது கட்சியின் நிர்வாகிகளை மாற்றி கட்சிக்கு புத்துயிர் கொடுக்க முயற்சி செய்து வருகிறார்

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கமல் கட்சியில் இருந்து மூன்று பிரபலங்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் சார்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணகிரி காருண்யா, சிதம்பரம் ரவி மற்றும் அரக்கோணம் ராஜேந்திரன் ஆகியோர் சற்று முன்னர் பாஜகவின் முன்னணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதனை அடுத்து கமல் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் அட்டகாசமான புதிய அப்டேட்!

0

ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் அட்டகாசமான புதிய அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி விட்டதை அடுத்து முதல்கட்டமாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வரும் 7ம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்றும், இந்த படத்தின் போஸ்டர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகி இருப்பதாகவும், இந்த மொழிகளில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் அந்தந்த மொழிகளில் மோஷன் போஸ்டரை வெளியிடுவார்கள் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

ஒரு திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை ஒரே நேரத்தில் நான்கு பிரபல நட்சத்திரங்கள் வெளியிட இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

வரும் 2020ஆம் ஆண்டில் பொங்கல் தினத்தில் வெளியாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர்

அனிருத் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது

இந்தியா முழுவதும் பரவும் டெல்லி போலீஸ் போராட்டம்: பரபரப்பு தகவல்

0

இந்தியா முழுவதும் பரவும் டெல்லி போலீஸ் போராட்டம்: பரபரப்பு தகவல்

டெல்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் சமீபத்தில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே நடைபெற்ற மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதலை அடுத்து நேற்று வழக்கறிஞர்கள் தங்களுடைய உரிமைக்காக போராடிய நிலையில், இன்று காலை திடீரென போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் முதன்முதலாக போலீசார் போராட்டம் நடத்துவதால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்தன. மேலும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீஸ் உயரதிகாரிகள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது

இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு போலீசாரின் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் போராட்டத்தில் குதித்ததால் போராட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது. போலீசார் குடும்பங்களும் அவர்களுடைய உறவினர்களும் வீதியில் இறங்கி பதாதைகளை ஏந்தி ஊர்வலம் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

அது மட்டுமின்றி டெல்லி போலீசாருக்கு ஆதரவாக மற்ற மாநிலங்களில் உள்ள போலீசார் போராட்டத்தில் குதிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி வருகிறது. குறிப்பாக ஹரியானா, பீகார், தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் உள்ள போலீசார் போராட்டத்தில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த போராட்டம் இந்திய அளவில் பரவினால் பெரும் பதற்ற நிலை ஏற்படும் என்றும் சட்டம் ஒழுங்கில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் மத்திய மாநில அரசுகள் கருதுவதால் உடனடியாக இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர டெல்லி அரசும் மத்திய அரசும் தீவிரமாக முயற்சித்து வருகிறது

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் ஒரு சில மணி நேரத்தில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் என கருதப்படுகிறது

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் படம் படுதோல்வி: ரூ.700 கோடி நஷ்டம் என தகவல்

0

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் படம் படுதோல்வி: ரூ.700 கோடி நஷ்டம் என தகவல்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஒருவர் நடித்த திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.700 கோடி நஷ்டம் என தகவல் வெளியாகியுள்ளது

ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று டெர்மினேட்டர் சீரியஸ் படங்கள். இந்த படத்திற்கு என உலகம் முழுவதும் ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. ஏற்கனவே டெர்மினேட்டர் திரைப்படத்தின் ஐந்து பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆறாவது பாகம் டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’என்ற பெயரில் கடந்த வாரம் வெளியானது

அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ஆக்சன் நடிப்பு, ஜேம்ஸ் கேமரூனின் கதை, டெட்பூல் இயக்குநர் டிம் மில்லரின் இயக்கம் என்று ஹாலிவுட்டின் ஜாம்பவான்கள் இணைந்த இந்த படம் வெளியான முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. தொய்வான திரைக்கதை, வலுவில்லாத காட்சியமைப்புகள் என உலகம் முழுவதும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றதால் இந்த திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

இந்தப் படத்தின் மொத்த தயாரிப்பு செலவு சுமார் 185 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மேலும் இந்த படத்தின் விளம்பர செலவு மட்டும் 100 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. ஆனால் படத்துக்குக் கிடைத்துள்ள எதிர்மறை விமர்சனங்களால் இந்தப் படத்தைத் தயாரித்த பாரமவுண்ட், ஸ்கைடான்ஸ், டிஸ்னி ஆகிய நிறுவனங்களுக்கு சுமார் 100 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.700 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை உலக அளவில் இந்த படம் 180 முதல் 200 மில்லியன் டாலர்களே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய், கமல், கார்த்தி என அடுக்கடுக்காக படங்களுக்கு புக் ஆகும் இளம் இயக்குனர்

0

விஜய், கமல், கார்த்தி என அடுக்கடுக்காக படங்களுக்கு புக் ஆகும் இளம் இயக்குனர்

மாநகரம் என்ற ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படம் ஏற்படுத்திய பரபரப்பை அடுத்து கார்த்தியின் ’கைதி’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் விஜய்யின் பிகில் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்டமான படத்துடன் வெளியானது. இருப்பினும் பிகில் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களை விட அதிகமான பாசிட்டிவ் விமர்சனங்களை ’கைதி திரைப்படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் ’தளபதி 64 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் பலர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா, தனுஷ் ஆகியோர் லோகேஷ் கனகராஜை அழைத்து கதை கேட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கைதி 2’ திரைப்படத்தில் தான் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக சமீபத்தில் கார்த்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கமல், கார்த்தி, விஜய், சூர்யா, தனுஷ் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

’தளபதி 64’ வதந்தியை உண்மையாக்கிய விஜய்!

0

’தளபதி 64’ வதந்தியை உண்மையாக்கிய விஜய்!

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நடித்துவரும் அடுத்த படமான ‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு தற்போது கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு 21 நாட்கள் நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் உள்ள ஒரு முக்கிய பொறியியல் கல்லூரியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் முன்னாள் மாணவர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் காட்சியை படமாக்கி வருவதாகவும் தெரிகிறது. மேலும் டெல்லியில் இந்த படத்தின் படப்பிடிப்பை மொத்தம் 25 நாட்கள் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

bigil audio launch vijay speech problem
bigil audio launch vijay speech problem

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’தளபதி 64’ படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட உள்ளதாக ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால் இந்த வதந்தியை தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ என்பவர் தனது டுவிட்டர் தளத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த வதந்தி முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட்து

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய பணி ஒன்றை செய்து கொண்டிருக்கும் லலித் என்பவர் இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக மாறி உள்ளதாகவும், அவருடைய சிறந்த பணியை பாராட்டி விஜய்யே அவரை இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக சேர்த்து கொண்டதாகும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து தளபதி 64 படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்த வதந்தியை விஜய்யே உண்மையாக்கிவிட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை

0

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை.

இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெங்காய விளைச்சல் பகுதிகளில் வானிலை மாற்றங்கள் மாற்றங்கள் மற்றும் தொடர் மழை காரணமாகவும் ஏற்பட்டுள்ள வெங்காய விலை உயர்வு குறித்து தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தல்கள் படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையில் உயரதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தாலும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் சென்னையில் உள்ள நுகர்பொருள் வழங்கல்துறை உதவி ஆணையர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும் எனவும்,.

இதனை தொடர்ந்து,. வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு மகாராஷ்டிர மாநிலத்தில உள்ள நாசிக் பகுதியில் இருக்கும் வெங்காய மொத்த விற்பனை நிலையங்களில் தரமான வெங்காயத்தினை கொள்முதல் செய்திட தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக்கு சென்றுள்ளனர்.

நாசிக் பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தினை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம் வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? ஆளுநருடனான முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன?

0

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? ஆளுநருடனான முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திடீரென்று நேற்று மாலை சென்னை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசிள்ளார். இந்த சந்திப்பின் போது அவரோடு தலைமைச் செயலாளர் சண்முகமும் டிஜிபி திரிபாதியும் இருந்துள்ளனர். நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதிற்கு பிறகு நடைபெறும் இந்த ஆளுநர் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வர இருக்கும் சூழ்நிலையில், தமிழகத்தில் அந்த தீர்ப்பின் எதிரொலியாக அசம்பாவிதங்கள் எதாவது நடந்து விடக்கூடாது என்ற வகையில் மத்திய அரசிடமிருந்து எச்சரிக்கை வந்திருப்பதாகவும்,அதுபற்றி விவாதிக்கவே ஆளுனரை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஆளும் அதிமுக தரப்பு அயோத்தி வழக்கு தீர்ப்பு வருவது பற்றிய விவாதம் என்று கூறினாலும், அரசியல் ஆர்வலர்கள் இதை அதையும் தாண்டிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக தான் பார்க்கிறார்கள். கடந்த காலங்களில் முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா ஆட்சி செய்த போது பல முறை தமிழக அமைச்சரவையை மாற்றி அமைப்பார்.

இதன் மூலமாக அமைச்சர்களும் தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுமாறு பார்த்து கொள்வார். ஆனால் அவரது மறைவிற்கு பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி தன் தலைமையிலான அரசை காப்பாற்றி கொள்ளவே இவ்வளவு நாட்கள் சென்றுள்ள நிலையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் அவருக்கு ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது.

அந்த வகையில் பார்க்கும் போது தமிழக அமைச்சரவையை எடப்பாடி பழனிச்சாமி விரைவில் மாற்றி அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தேர்தல்களில் ஆளும் அதிமுக பெற்ற அமோக வெற்றி மூலம் ஆட்சியின் உறுதித்தன்மை கூடியிருக்கிறது. திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் இந்த ஆட்சி விரைவில் கலைந்து விடும் என்று சில வருடங்களாகவே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் அப்படி எதுவும் நடக்காமல் அதற்கு எதிராக தற்போது பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்களை விட அதிகமாக பெற்று ஆட்சி மேலும் வலிமையானதாக மாறியுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த அமைச்சர் மணிகண்டன் நீக்கத்தை தவிர வேறு எந்த மாற்றத்தையும் பெரிய அளவில் தமிழக அமைச்சரவையில் செய்யாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதன் முறையாக தனது விருப்பப்படி தமிழக அமைச்சரவையை மாற்றியமைக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி மதுரையைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா, கொங்கு பகுதியை சேர்ந்த தோப்பு வெங்கடாசலம், தனது சொந்த மாவட்டமான சேலத்தை சேர்ந்த செம்மலை, தென் மாவட்டத்தைச் சேர்ந்த சதன் பிரபாகர் உள்ளிட்ட சிலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. மேலும் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் தமிழக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

இது தவிர மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றியமைக்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக வேலுமணி, தங்கமணி, வீரமணி ஆகியோரிடம் பல முக்கியமான துறைகள் இருப்பதால் அவர்களிடம் இருந்து சில துறைகளை பிரித்து பிற அமைச்சர்களுக்கு கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறபடுகிறது. இந்த மூன்று அமைச்சர்களும் தமிழக அமைச்சரவையில் மிக முக்கியமான துறைகளை தங்கள் வசம் வைத்திருக்கும் சூழ்நிலையில் கட்சிக்கென நிதி தரும் விவகாரங்களில் இவர்களுக்கும் முதல்வர் எடப்பாடிக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் சில அமைச்சர்களை நீக்கவும் திட்டம் உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அது போன்ற நடவடிக்கை தேவையா என்ற எச்சரிக்கை உணர்வும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் இருக்கிறது என்கிறார்கள்.

வெளிநாட்டு பயணம் செல்ல திட்டமிட்டுள்ள துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வரும் நவம்பர் 7 ஆம் தேதி மாலை டெல்லி சென்று அங்கிருந்து அமெரிக்கா புறப்படுகிறார். அதற்கு முன் ஆறாம் தேதி அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. துணை முதல்வரின் பயண தேதிக்கு முன்பாகவே தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்து அதற்கான பட்டியலை வெளியிட்டு தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கலாம் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்கிறார்கள்.

எனவே தமிழக அமைச்சரவை மாற்றம் எந்த நேரமும் நிகழலாம் என்பதே இப்போதைய நிலைமை என்று ஆளும் தரப்பில் எதிர்பார்க்கபடுகிறது. இதன் மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் அமைச்சர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது. இது எந்த அளவிற்கு அவருக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.