Friday, September 20, 2024
Home Blog Page 4958

28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை

0

28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை

1989-ல் நடிக்க ஆரம்பித்த ராஜ்கிரண், இதுவரை தமிழ் தவிர வேறு மொழிப் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இவருக்கு தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளில் இருந்தும் அழைப்பு வந்தது ஆனால் அவர் அவை எதையையும் ஏற்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்முட்டி நாயகனாக நடிக்கும் ‘ஷைலாக்’ என்ற மலையாளப் படத்தில் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ‘ராஜாதி ராஜா’, ‘மாஸ்டர் பீஸ்’ படங்களுக்குப் பிறகு அஜய்யின் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் மூன்றாவது படம் இது. இதில் நடிகர் ராஜ்கிரண் மலையாளத்தில் அறிமுகமாகவிருக்கிறார்.

இதில் மம்முட்டியுடன் நடிகை மீனாவும் நடிக்கிறார். 1991-ல் வெளியான நாயகனாக ராஜ்கிரணின் முதல் படமான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனா. படம் வந்தபோது அந்த ஜோடி பெரிதளவில் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவேயில்லை.

இந்நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணையவிருக்கிறது. தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் உருவாகும் என்று தெரிகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

அதே சமயம் சத்தமே இல்லாமல் படத்தின் துவக்க விழாவை சமீபத்தில் நடத்தியிருக்கிறது படக்குழு. இந்நிலையில் இந்தப் படம் குறித்த தகவலை ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க : மலேசியாவில் வசமாக மாட்டிக்கொண்ட சீயான் விக்ரம்! சிக்கலில் கடாரம் கொண்டான்

இந்தப் படத்தில் ராஜ்கிரண் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மம்முட்டி, “ராஜ்கிரண் மிகவும் யோசித்து தேர்வு செய்யும் நடிகர். அவருக்கு இந்தப் படத்தில் வலிமையான கதாபாத்திரம் உள்ளது” என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க : தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்! பாடல் வெளியாகும் முன்பே இப்படியா?

எது எப்படியோ சேட்டன்களின் எலும்பு பத்திரம்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த திட்டத்தை நிறுத்த முடிவா?

0

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த திட்டத்தை நிறுத்த முடிவா?

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய நிதி வழங்கப்படாததால், இந்த திட்டம் இத்துடன் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2017-18ம் நிதியாண்டில் ரூ.16 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 11, 12வது வகுப்பு பயிலும் மாணவிகள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக விலையில்லா மிதிவண்டி திட்டத்தை 2001ல் தொடங்கி வைத்தார். பின்பு இந்த திட்டம் அனைத்து தரப்பினருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. மாணவிகள் பயன் பெறுவதற்காக திமுக ஆட்சி காலத்திலும் விலையில்லா மிதிவண்டி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 2013-14ம் ஆண்டு 217 கோடி ரூபாயும், 2014-15ம் ஆண்டு 218 கோடியும், 2015-16ம் ஆண்டு 235 கோடியும், 2016-17ம் ஆண்டு 250 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 2017-18ம் நிதியாண்டில் வெறும் 16 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டு கொள்கை விளக்க குறிப்பிலும் இந்த திட்டம் குறித்தே குறிப்பிடப்படவில்லை.

மேலும் 2019-20ம் ஆண்டிற்கான பள்ளிகல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில், விலையில்லா மிதிவண்டி திட்டத்தின் மூலம் 2017-18 மற்றும் 2018-19ம் கல்வியாண்டில் 11.56 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2019-20ல் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றோ, நடப்பு ஆண்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு எனவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே 2016-17ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தொடர்ந்து இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் 90 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுகிறத என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் முறையாக செயல்படுத்தபடவில்லை என்று கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் எதிர்ப்பு கிளம்பும் என்பதால், தமிழக அரசு மறைமுகமாக இந்த திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

பாட்டாளி மக்கள் கட்சி ok! இனி No பிஜேபி! அதிமுக அதிரடி!

0

நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நிறுத்திவைக்க பட்டது. திமுக வேட்பாளர் வீட்டில் பணம் பட்டுவாடா செய்ய கட்டு கட்டாக பணம் இருந்ததை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனால் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது.

வேலூர் மாவட்டம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் போட்டி இடுகின்றனர். அதிமுக உடன் பாமக, பிஜேபி, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளது. வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பாஜகவினரை தேர்தல் பணியில் பயன்படுத்த அதிமுக தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலூரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தீவிரமாக தேர்தல் பணியாற்றிவருகிறார். புதிய நீதிக் கட்சியினரை மட்டுமல்லாமல் அதிமுகவினரும் தேர்தல் வேலையில் பிஸியாக உள்ளனர்.

ஏ.சி. சண்முகம் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக கட்சிகளைச் சேர்ந்தவர்களும் முன்கூட்டியே அழைக்கப்பட்டுவிடுகிறார்கள். அந்தந்தப் பகுதிகளில் கூட்டணி கட்சியினரை அழைத்து அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், வேலூரில் அதிமுக – பாஜக கூட்டணியில் மட்டும் நல்ல புரிதல் இல்லாமல் போய்க்கொண்டிருப்பதாக வேலூரிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலூரில் இஸ்லாமியர்கள் அதிகம் என்பதால், அந்தப் பகுதிகளில் பாஜகவினரை தேர்தல் பிரசாரத்துக்கு அதிமுகவினர் அழைப்பதில்லை என்று கூறப்படுகிறது. மோடி எதிர்ப்பு தமிழகத்தில் இருப்பதால், பாஜகவினரை பயன்படுத்த அதிமுகவினர் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால், தேர்தல் பிரசாரத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வேட்பாளார் ஏ.சி. சண்முகம் விரும்புகிறார். அவருடைய விருப்பத்துக்கு மாறாக வேலூரில் பிரசாரத்துக்கு பாஜகவினரை அதிமுகவினர் கழற்றிவிடுவதால் ஏ.சி. சண்முகம் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த முறை நன்றாக தேர்தல் செலவு செய்தும் தேர்தல் ரத்தால் எல்லாம் வீணாகிவிட்டது என்ற வருத்தத்தில் இருந்தார் ஏ.சி. சண்முகம். இந்த முறை கூட்டணி கட்சிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாமல் போய்விடக் கூடாது என்ற வருத்தத்தில் ஏ.சி. சண்முகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

பிஜேபி இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்பது போல பிம்பம் உருவாகி உள்ளதாக இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். ஆனால் பிஜேபி தரப்பில் இருந்து கூறுவது யாதெனில் பிஜேபி எந்த மதத்திற்கு எதிரான கட்சி அல்ல என கூறியுள்ளது. மக்களவையில் திரு அமித்ஷா அவர்கள் நாட்டிற்க்கு எதிராக செயல்படும் அனைவரையும் கட்டு படுத்த என். ஐ.ஏ அமைப்பை ஏற்படுத்த ஆதரவு கோரினார். இதற்கு திமுகவும் ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

மலேசியாவில் வசமாக மாட்டிக்கொண்ட சீயான் விக்ரம்! சிக்கலில் கடாரம் கொண்டான்

0

மலேசியாவில் வசமாக மாட்டிக்கொண்ட சீயான் விக்ரம்! சிக்கலில் கடாரம் கொண்டான்

கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவான ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் காற்று வாங்கிக்கொண்டிருக்கிறது.

இதற்கு காரணமாக படத்தில் விக்ரமுக்கு மிகவும் குறைவான காட்சிகளே உள்ளன என்றும் அதிலும் அவர் நடந்துக்கொண்டே இருக்கிறார் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படம் மலேசியாவில் ரிலீஸ் ஆகவில்லை.

இதற்கு காரணம் என்னவென்றால் மலேசிய அரசு இந்த படத்திற்கு சென்சார் சான்று தரவில்லையாம். ‘கடாரம் கொண்டான்’ படத்தின் கதைப்படி மலேசியாவில் திருடனாக இருக்கும் விக்ரம், மலேசியா போலீசார்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பித்து செல்வது போல் இருக்கும்.

இந்திய அரசு போல் இல்லாமல் இவ்வாறு தங்கள் நாட்டு போலீஸை தவறாக இந்த படத்தில் சித்தரிப்பதாக கூறி மலேசிய சென்சார் போர்டு இந்த படத்தை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டதாம்.

இதை சரிசெய்ய ‘கடாரம் கொண்டான்’ படக்குழு எவ்வளவோ முயன்றும் மலேசியா சென்சார் போர்டு இறங்கி வரவே இல்லையாம். இதனால் விக்ரம் உள்ளிட்ட ‘கடாரம் கொண்டான்’ படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இதனையடுத்து இந்தப் படத்துக்காக நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மலேசியாவில் உள்ள விக்ரம் ரசிகர்கள் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தை சிங்கப்பூர் சென்று பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மலேசியாவில் இந்த படம் வெளியாகாததால் இந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க : தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்! பாடல் வெளியாகும் முன்பே இப்படியா?

அது சரி இந்தப் படத்தை எதுக்கு ஊர் ஊராப் போய் பார்க்கணும்..?

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம்! முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்!

0

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒகேனக்கலில் திங்கள் கிழமை நடைபெற்றது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலை சந்தித்தது. தர்மபுரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. இத்தொகுதியில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். இவர் தோல்வியை தழுவியது குறிப்பிட தக்கது.

இதை கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி தோல்வியை தவிர்க்கும் விதத்தில் மேலும் கட்சியை பலம் படுத்தும் விதத்தில் ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் ஆலோசனை கூட்டங்கள் நடத்திய வண்ணம் உள்ளது. இதை தொடர்ந்து தர்மபுரியில் ஒகெனக்கலில் கூட்டத் தொடர் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.அரசாங்கம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்டச் செயலாளர் இல.வேலுசாமி, மாநில துணைத் தலைவர் பெ.சாந்தமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

இதில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதற்காக நடைபெறும் கூட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

மாணவ-மாணவியருக்கு இலவச நோட்டுகள், மரக் கன்றுகள் நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு, புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர். கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் தேவேந்திரன்,இளைஞர் சங்க மாநிலச் செயலாளர் முருகசாமி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

ஆந்திர மாநில மக்களுக்காக வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை இயற்றினார் ஜெகன்மோகன் ரெட்டி

0

ஆந்திர மாநில மக்களுக்காக வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை இயற்றினார் ஜெகன்மோகன் ரெட்டி

மாநில மக்களுக்கு தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் உள்ளூர் தொழிற்துறை/ஆலை தொழிலாளர் சட்டம் 2019 ஆந்திர சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 22) நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் மாநில மக்களுக்கு 75 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தில் போதிய திறன்களுடன் தொழிலாளர்கள் இல்லாவிடில், மாநில அரசுடன் இணைந்து தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு பயிற்சியளித்து பின்னர் வேலை கொடுக்க வேண்டுமென்றும் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளில் அனைத்து நிறுவனங்களும் இந்த சட்டத்திற்கு ஏற்ப அமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு காலாண்டிலும் எவ்வளவு உள்மாநில மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது பற்றிய விவரங்களையும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்காக புதிய இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்பது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் முக்கிய தேர்தல் உறுதிமொழிகளில் ஒன்றாகும். இச்சட்டத்துடன், நிரந்த ஓபிசி ஆணையம் அமைப்பதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அரசு நியமன பதவிகளிலும், அரசு நியமன பணிகளிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கும், மகளிருக்கும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.

நிரந்தர ஓபிசி ஆணையம் அமைக்கப்பட்டு அதன் வாயிலாக பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைய விரும்பும் பிரிவினர், சேர்க்கப்பட்ட, சேர்க்கப்படாத பிரிவினர் பற்றிய புகார்களையும், கோரிக்கைகளையும் விசாரித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்கள் தொடர்பான விவகாரங்களில் அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதும் இந்த ஆணையத்தின் முக்கிய பொறுப்பாகும்.

மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்துவரும் இந்நிலையில் ஆந்திர அரசின் இந்த முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா!கேன்சருக்குமா!

கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா! கேன்சருக்குமா!

குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி உண்ணும் போது கருவேப்பிலையை உண்ணாமல் எடுத்து வைத்து விடுகிறோம். ஏதோ வெண்டாதது பொல கரு வேப்பிலையை ஒதுக்கி விடுகிறோம். ஆனால் கருவேப்பிலை எவ்வளவு மருத்துவ குணம் கொண்டது தெரியுமா?

உணவின் வாசனையை  அதிகரிக்கத் தான் கறிவேப்பிலை பயன்படுகிறது  என்று பலர் கருதுகின்றனர்.  இதனால் தான் சாப்பிடும் போது  உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால்  இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள்  இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம்  தெரியவந்துள்ளது.

   கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன.மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான்சொரின், ஆஸ்பார்டிக்  அமிலம், அயாமைன், புரோலைன்  போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. 

இவைகள் தான் கறிவேப்பிலைக்கு  இனிய மணத்தை தருகிறது.  பல மருத்துவ குணங்களையும்  வெளிப்படுத்துகிறது.இந்திய  சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும்  ஆற்றல் உடையது என்பதை அண்மையில் உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது புற்றுநோய்,இதய  நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர். 

கறிவேப்பிலையிலிருந்து  எண்ணை எடுத்து அதை  நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு  தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என வேளாண்  மருத்துவ ஆராய்ச்சி  நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம்  கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100  கிராம்தேங்காய் எண்ணையில்  கலந்து இதமானசூட்டில் ஈரப்பதம்  நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து  வந்தால் உடல்உஷ்ணம் மங்கும்.  பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. 

இது தவிர நீரிழிவு நோயாளிகள்  காலையில் 10 கறிவேப்பிலை  இலையையும், மாலையில் 10  இலையையும் பறித்த உடனேயே  வாயில் போட்டு மென்று சாற்றை  விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை  பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

மேலும் படிக்க : இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3  மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால்  உடல் கனமாவது குறைக்கப்படும்.  சிறுநீரில் சர்க்கரை  வெளியேறுவதும் முற்றிலும்  தடைசெய்யப்படும். கறிவேப்பிலை  ரத்தத்தில் இருக்கும்  கொழுப்பை குறைக்கவும்,  அறிவை பெருக்கவும் உதவுகிறது.  கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும்  குறையும் என்கிறார்கள்  மருத்துவர்கள். இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட  சிபாரிசு செய்கிறது. 

மேலும் படிக்க : பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

75 – 125 கிராம் கீரைகளையும்  சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை  சாப்பிட முக்கியமான 10  காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று  கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, தோல்நோய் போன்றவற்றிக்கு எளிதில் கிடைக்கும் இந்த பழம் அருமருந்தாகும்!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்! பாடல் வெளியாகும் முன்பே இப்படியா?

பிகில் படத்தின் பாடல் இன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேரம் சொல்லாததால் ரசிகர்கள் நேரத்தை கேட்டு மீம்ஸ்களை பறக்கவிட்டுள்ளனர். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் முறையாக இணைந்துள்ள படம் பிகில்.

அட்லீ இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். 

விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. டிவிட்டர் பக்கத்தில் இந்திய அளவில் பிரபலம் அடைந்தது.

இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் 23-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்து இருந்தார்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தப் பாடல் நாட்டின் அனைத்து மகள்களுக்கும் சமர்ப்பணம்’ என்றும் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது.

மேலும் படிக்க : 28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை

பிகில் படத்தின் பாடல் இன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேரம் சொல்லாததால் ரசிகர்கள் நேரத்தை கேட்டு மீம்ஸ்களை பறக்கவிட்டுள்ளனர்.
சர்கார் படம் போலவே இப்படமும் வெற்றி அடைய வேண்டும். வாழ்த்துக்கள்.இன்று ரசிகர்களுக்கு விருந்து தான்.

மேலும் படிக்க : மலேசியாவில் வசமாக மாட்டிக்கொண்ட சீயான் விக்ரம்! சிக்கலில் கடாரம் கொண்டான்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

கூலிங் கிளாஸ், ஹேர் ஸ்டைல், டிரஸ் நம்பி லிவிங் டூ கெதர் !மாணவி பரிதாபம்! கலாச்சார சீரழிவு!

0

இன்றைய நவீன சூழலில் திருமணம், காதல் என்பது ரொம்பவும் சாதாரண விசியமாக மாறிவிட்டது. காதல் என்பது ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து காதல் செய்வது மாறி இன்று முகமே பார்க்காமல் முன்பின் தெரியாமல் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் காதல் கொள்கின்றனர். திருமணம் என்பது ஆண் பெண் இருபாலரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். இதற்கு லிவ்விங் டூ கெதர் என்று பெயர்.

நம் சமுதாய கலாச்சாரம் இது அல்லவே இது போல கலாச்சாரம் அழிவையே தரும் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முகநூல் காதலனை நம்பி தனியாக வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடித்திவந்த மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். குடிகார காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்கையில் இணைந்த மாணவிக்கு நேர்ந்த சோக முடிவு குறித்து விவரிக்கிறது நமது செய்தி தொகுப்பு.

ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகள் இந்துமதி. 20 வயதான இவர் தஞ்சை மாவட்டதிலுள்ள உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்துமதி, ஒரத்தநாடு கால் நடை மருத்துவ மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் ஒரத்த நாடு எழுத்துக்கார தெருவில் உள்ள ஒரு வீட்டில் இந்துமதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.
அந்த வீட்டில் அவரது சடலத்துக்கு அருகே குடி போதையில் சதீஷ்குமார் என்ற இளைஞர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணையை இறங்கினர்.
மாணவி இந்துமதி, இந்த வீட்டிற்கு வந்து உயிரிழந்தது எப்படி ? என்று போதையில் படுத்திருந்த சதீஷ் குமார் தலையில் தண்ணீரை ஊற்றி விசாரித்த போது இந்துமதி முகநூல் காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்த திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

எப்போதும் செல்போன் கையுமாக வலம் வரும் இந்துமதி முகநூல் காதலில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகின்றது. அப்போது இந்துமதிக்கு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த டி.புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் முகநூலில் நட்பு கிடைத்துள்ளது.
தலையில் வித்தியாசமான முடிவெட்டு..! முகத்தில் கூலிங்கிளாஸ்..! என வித விதமான புகைபடங்களை முக நூலில் பதிவிட்ட சதீஷ்குமார் தன்னை ஒரு பொறியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்துமதியை காதல் வலையில் விழவைத்துள்ளர்.

இருவரும் 2 ஆண்டுகளாக முகநூலில் காதலித்ததோடு, அவ்வப்போது நேரில் சந்தித்தும் காதலை வளர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் லிவிங் டு கெதர் போல அவ்வப்போது வெளியில் அறை எடுத்து தங்கியும் வாழ தொடங்கி உள்ளனர்.
இவர்களின் காதல் பிணைப்பு அதிகமானதால் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கியிருப்பதாக பெற்றோரிடம் பொய் சொன்ன இந்துமதி, கணவர் சதீஷ்குமாருடன் தனியாக ஒரத்தநாடு எழுத்துக்கார தெருவில் வாடகைக்கு வீடு பார்த்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார். அங்கிருந்தபடியே கல்லூரிக்கும் சென்று வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சதீஷ்குமார் தன்னை ஏமாற்றிதிருமணம் செய்துள்ளார் என தெரிய வருகிறது. சதீஷ் பொறியாளர் அல்ல வெறும் எலக்ட்ரீசியன் என்பதும், அவன் ஒரு குடிக்காரன் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. தினமும் இரவு குடி போதையில் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததால் இருவருக்கும் அடிக்கடை சண்டை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி

பெற்றோர் தங்கள் மகள் கல்லூரியில் படித்து வருகிறாள் என்று மாத, மாதம் செலவுக்கு பணம் அனுப்பி வைக்க, இந்துமதி திருமணம் செய்துகொண்டு கணவருடன் தனியாக வாழ்ந்து வந்தது அவரது பெற்றோருக்கு தெரியவில்லை என்றே கூறப்படுகின்றது. விடுதியில் தங்கி கல்லூரியில் படிப்பது போன்றே வீட்டில் காட்டிக்கொண்ட இந்துமதி அவ்வப்போது ஊருக்கு சென்றுவந்ததால் பெற்றோருக்கும் சந்தேகம் வரவில்லை.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை போதையில் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார், இந்துமதியை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது. தானே தேடிக் கொண்ட வாழ்க்கை என்று எண்ணி விரக்தியில் இந்துமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்துமதியின் பெற்றோரோ தங்கள் மகளை அடித்து கொலை செய்து சதீஷ்குமார் தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதனால் மருத்துவ மாணவி இந்துமதி தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா ? என்ற நிலையில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க : அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்

மேலும் இது போன்ற சம்பவங்கள் அவ்வபோது நடந்த வண்ணம் உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும். தன் மகள் எங்கு செல்கிறாள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என அனைத்தையும் கவனிக்க வேண்டும். இது பெற்றோரின் கடமை இன்றைய நவீன உலகில் பெண்ணோ ஆணோ வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவிட செல்கின்றனர். இதனால் முன் பின் தெரியாத நபரிடம் வெறும் வெளித்தோற்றத்தை மட்டுமே நம்பி ஏமாருகின்றனர். இது கலாச்சார சீரழிவு ஆகும்.

மேலும் படிக்க : யார் இந்த பையன்? இவருக்கு இப்படி ஒரு பையனா? ஆச்சரியத்தில் திரையுலகினர்!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

பாட்டாளி மக்கள் கட்சியா? மத்திய அரசா? 8 வழிசாலை உச்சநீதி மன்றம் அதிரடி!

0

தமிழகத்தில் எட்டு வழி சாலை அமைக்கும் பணி மத்திய அரசு கடந்த வருடம் உத்தரவிட்டது. இதை அடுத்து மாநில அரசு அதை நடைமுறை படுத்த எட்டு வழி சாலை செல்லும் இடத்தில் அளவீடு செய்து ஆங்காங்கே கற்களை ஊன்றியது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் அழிந்து விடும் என பாட்டாளி மக்கள் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதன் பிறகு எட்டு வழி சாலை தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக எட்டு வழி சாலை திட்டத்தை தொடங்கும் விதத்தை சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஒப்புதல் பெற்று உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்க கட்டளை இட்டது. 8 வழிச்சாலை திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த எதிர்ப்பு இருப்பதால் வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

சேலம்- சென்னை இடையே காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலத்திற்கு புதிய 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நிலத்தை அளவெடுக்கும் பணி கடந்த ஆண்டு நடந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கோரி, பல்வேறு போராட்டங்களை விவசாயிகளும், பொதுமக்களும் நடத்தி வருகிறார்கள்.

ஐகோர்ட்டில் வழக்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடரப்பட்டது.இந்நிலையில் 8 வழிச்சாலைக்கு எதிராக வழக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 8வழிச்சாலை திட்டத்துக்காக அழிக்கப்படுவதா என கூறி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் வழக்கு வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் திமுக, பாமக, நாம்தமிழர் இயக்கத்தினரும் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி

தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு பொதுமக்களிடம் கருத்துகேட்பு நடத்த வில்லை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என் றுகூறி திட்டத்தை செயல்படுத்த தடை விதித்ததோடு, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்தது. பறிமுதல் செய்த நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து தமிழக அரசு மேல் முறையீடு உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் கடந்த மார்ச் 31ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 8வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.

மேலும் படிக்க : அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்

இதனிடையே சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 8வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.தொடர்ந்து சென்னை -சேலம் எட்டுவழிச்சாலை நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஜூலை31ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க : யார் இந்த பையன்? இவருக்கு இப்படி ஒரு பையனா? ஆச்சரியத்தில் திரையுலகினர்!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.