Friday, September 20, 2024
Home Blog Page 4959

இவர் நினைத்தால் திமுக பஸ்பம் ! மோடி இஸ் ஹவர் டாடி! அமைச்சர் பேச்சு!

0

மோடி நினைத்தால் திமுக இருக்காது. என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவை யார் வழிநடத்த போகிறார் என்ற ஐயம் அனைத்து அதிமுக தொண்டரிடத்தில் இருந்த எண்ணம். பின்பு பன்னீர்செல்வம் முதல்வராக ஆனார். பின்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பில் உள்ளார்.

ராஜேந்திர பாலாஜி பேசியதாவது அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடிதான் எங்கள் டாடி. இந்தியாவின் டாடி என சொன்ன பிஜேபியின் தீவிர விசுவாசியை ஓரங்கட்டிவிட்டு மோடியின் முரட்டு பக்தனாக இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மோடி நெனச்சால் திமுக பஸ்பம் ஆகிவிடும். நாங்க நெனச்சா திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என செம தில்லா சவால் விட்டுள்ளார்.

நேற்று தேனியில் வீரபாண்டி என்னும் இடத்தில் தினகரன் கட்சியிலிருந்து திமுகவுக்கு தங்க தமிழ்செல்வன் தலைமையில் அமமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இங்கு வந்து சேர்ந்து இருக்கக்கூடிய தங்க தமிழ்ச்செல்வனை மட்டுமல்ல, உங்களை மட்டுமல்ல உண்மையாக அதிமுகவிற்காக இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த உண்மை விசுவாசிகள் தொண்டர்கள் அதிமுகவில் இருப்பது நியாயமல்ல, நீங்க இருக்கவேண்டிய இடம், உங்களுடைய இயக்கம் தாய்க்கழகம் திராவிட இயக்கமாக இருக்கக்கூடிய திமுக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதிலடியாக ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்க சொல்லுகிறோம். ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக தொண்டர்கள் அத்தனை பேரும் அதிமுகவில் வந்து இணைய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

எனவே அண்ணா தலைமையில் இருந்த திமுகவில் பணியாற்றிய, அண்ணா தலைமையை ஏற்றுக்கொண்ட திமுக தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் மொத்தமா அதிமுகவுக்கு வரணும். அதிமுக தொண்டர்கள் ஒருத்தவங்க கூட அங்கே போகமாட்டாங்க. ஆண்டிபட்டி தங்க தமிழ்செல்வன், கரூர் செந்தில் பாலாஜி போனா எல்லோரும் போய் விட மாட்டார்கள்… என்னமோ சொன்னாரு டெல்லிக்கு 37 எம்.பி.க்கள் போகிறோம்… பார்லிமெண்டையே முடக்கிவிடு விடுவோம். மோடியை தடுத்துவிடுவோம்ன்னு. இந்த ஆட்சியை உண்டு இல்லை என ஆக்கிடுவோம்ன்னு சொன்னாரு திமுக தலைவர் ஸ்டாலின்.

மேலும் பேசிய ராஜேந்திர பாலாஜி மோடி நெனச்சா திமுக பஸ்பம் ஆகிடும். நாங்க நெனச்சா திமுக என்கிற கட்சியே இருக்காது. அந்த அளவுக்கு வலு இருக்கிறது. இந்த நாட்டினுடைய பிரதமரை முன் மொழியக் கூடிய இடத்தில் முதல்வர் பழனிசாமி இருக்கிறார். ஜனாதிபதியிடம் பிரதமர் வேட்பாளர் யார் என்று பட்டியல் கொடுத்ததில் ஒருவராக சென்றவர் அண்ணன் பழனிசாமி என பேசினார்.

நேற்றைய முன்தினம் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கோவை விமான நிலையத்தில் திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்றது என்றார். இதற்கு பதிலடியாக திமுக தலைவர் ஸ்டாலின் தேனியில் உறுப்பினர் சேர்க்கை விழாவின் போது நாங்கள் பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி வெற்றி பெற்றோம் என்றால் அதிமுக என்ன அல்வா கொடுத்தா வெற்றி பெற்றது என்றார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்கள் நினைத்தால் திமுக இல்லாமல் போகும். மோடி நினைத்தால் திமுக பஸ்பம் ஆகி விடும் என்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

“எல்லாம் வேஷம்! வெறும் வெற்று கோஷம்” திமுக பகுத்தறிவு பல்லிளிக்கிறதா ?

0

சில நாட்களுக்கு முன்பு திராவிடம் பேசும் கி.வீரமணி அவர்கள் அத்திவரதர் எந்திரித்து நிற்க முடியுமா என்று கேலியும் கிண்டலும் செய்து விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பல பேர் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பிஜேபி சேர்ந்த நாராயணன் வீரமணி விமர்சித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். அதாவது, பகுத்தறிவு பேசும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மகனின் திருமணம் 35 ஆண்டுகளுக்கு முன் விநாயகர் கோவிலில் நடந்ததாக பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி அதிர்ச்சி செய்தியை பதிவிட்டுள்ளார்.

இது குறித்த நாராயணசாமி திருப்பதி முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது யாதெனில், ”திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் மகனும், மருமகளும் அத்திவரதர் தரிசனத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது என்ற என் பதிவினையடுத்து, சமூக வலைதளங்களில் அதை மறுத்து வருகிறார்கள் பகுத்தறிவு பகலவன்கள்(?).
சரி, இதோ இதையும் மறுப்பீர்களா? சுமார் 35 வருடங்களுக்கு முன், கி.வீரமணியின் மகன் அன்புராஜ் அவர்களுக்கு கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தின் எதிரில் உள்ள ‘வினை தீர்த்த விநாயகர் கோவிலில்’ திருமணம் நடந்ததை மறுக்க முடியுமா?

அதன் பின் அந்த திருமணத்தை அதே சார்பதிவாளர் அலுவலகத்தில், வினை தீர்த்த விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற்றதாக பதிவு செய்ததை மறுக்க முடியுமா?

அதற்கு உதவி புரிந்தது தியாகராய நகரை சேர்ந்த இரு பிராமணர்கள் என்பதை மறுக்க முடியுமா? அதில் ஒருவர் தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ள என் நண்பர் வேதசுப்ரமணியம் என்பதை மறுக்க முடியுமா? அந்த திருமணத்திற்கு தலைமை தாங்கியது, என் நண்பரும், முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் தான் என்பதை மறுக்க முடியுமா? வினை தீர்த்த விநாயகரின் அருள் பெற்று வாழ்க்கையில் இணைந்த அந்த தம்பதியினர் தான் இன்று கி.வீரமணிக்கு பக்க பலம் என்பதை மறுக்க முடியுமா?

அத்திவரதர் எழுந்து நடப்பாரா என்று கேட்ட கி.வீரமணி குணமடைந்து எழுந்து நடப்பதற்கு அத்திவரதரின் ஆசி பெற வினை தீர்த்த விநாயகரின் அருள் பெற்ற தம்பதியினர் சென்றிருந்தாலும் தவறில்லை. அவர்களின் பக்தி கி.வீரமணி அவர்களை நலமடைய செய்யும்.
எல்லாம் வேஷம்! வெறும் வெற்று கோஷம்” என அவர் தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பகுத்தறிவு பேசும் திராவிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பலர் தங்களின் குடும்பத்தினர் அத்திவரதரை தரிசிக்க சிறப்பு சலுகை வேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியது அனைவரும் அறிந்ததே.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்

0

அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்

நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து அளித்த கருத்து மற்றும் அதனால் உருவான சர்ச்சை குறித்து அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த விவகாரத்தில் இயக்குனர் ஷங்கரை இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்காக நடக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.இந்த தேர்தலுக்கான முடிவுகள் நேற்று மாலையே அறிவிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 1,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 

இயக்குனர் சங்க தலைவர், 2 துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடைபெற்றுள்ளது. செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி ஆர்.வி.உதயகுமார் மற்றும் பேரரசு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

நேற்று நடைபெற்று முடிந்த இந்த இயக்குனர் சங்க தேர்தலில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா போன்ற பல்வேறு இயக்குநர்கள் வாக்களித்தனர். பின்பு ஒவ்வொருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியும் அளித்தனர்.

அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் வாக்களித்து விட்டுப் பேட்டியளிக்கும் போது ‘புதிய கல்விக் கொள்கைக்கு சூர்யா எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து உங்கள் கருத்து’ என்ன என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்கு ஷங்கர், “எனக்குத் தெரியாது. அதை நான் பார்க்கவில்லை” என்று பதிலளித்தார். ஷங்கரின் இந்தப் பதில் அங்கிருந்த இயக்குனர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

இதனையடுத்து இயக்குனர் ஷங்கர் சென்ற பிறகு இயக்குநர் சீமான் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது இயக்குநர் சங்கத் தேர்தல், பாரதிராஜா போட்டியிடாதது குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். உடனே சூர்யா குறித்த கேள்விக்கு ஷங்கர் அளித்த பதில் தொடர்பாக சீமானிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சீமான், “அவருடைய சமூகப் பொறுப்பு அவ்வளவு தான். பாரதிராஜா மீதிருக்கும் பாசம் அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதற்காக மட்டுமல்ல. அவருக்கு 78 வயதாகிறது. இன்றைக்கும் ஒரு சமூகப் பிரச்சினை என்றால் ஓடி வந்து போராட்டக் களத்தில் நிற்பது, போராடுவதால் மட்டுமே அவர் மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது.

கஜா புயலில் தஞ்சாவூரின் பாதிப் பகுதிகள் அழிந்துவிட்டன. அவர்கள் படம் பார்க்க கொடுத்த பணத்தில் தான் உயர்நிலை இயக்குநர்கள் 30 கோடி, 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள். அவர்களுக்கு ஏன் ஒரு சிறுதொகை கூட கொடுக்கவில்லை. இவர்களது சமூகப் பொறுப்பு எல்லாம் அவ்வளவு தான். இங்கு ‘மது குடிப்பது உடல்நிலைக்கு கேடு. புகைப் பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ என்று போட்டுவிட்டால் சமூகப் பொறுப்பு முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள். 

காலத்தைப் பதிவு செய்பவன் தான் படைப்பாளி. சமகாலத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பது எப்படி எனத் தெரியவில்லை. படங்களில் மட்டும் சமூகக் கருத்துகள், புரட்சிகரமான கருத்துகள் சொல்வது எல்லாம் ஏமாற்று வேலை” என்று கடுமையாகச் சாடினார் சீமான்.

மேலும் படிக்க : பாஜக தலைவர்களின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் சூர்யா!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

சர்ச்சையான சூழ்நிலையில் பாஜக நபருடன் இணைந்த நடிகர் சூர்யா!

0

சர்ச்சையான சூழ்நிலையில் பாஜக நபருடன் இணைந்த நடிகர் சூர்யா!

கடந்த சில நாட்களாக மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூர்யா நடித்து முடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்நிலையில் அவர் தற்போது ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதாகொங்காரா இந்த படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரும், தேசிய விருது பெற்றவரும், முன்னாள் எம்பியுமான பரேஷ் ராவல் என்பவர் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் ஏர்லைன்ஸ் உரிமையாளராக நடிக்க இருப்பதாக தெரிகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பரேஷ் ராவல் சுமார் 6 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான பரேஷ் ராவல் வில்லன், காமெடியன், குணசித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்தவர். மேலும் நடிப்பிற்காக அதிகமான விருதுகளை பெற்றவர். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ள இவர் தற்போது அலகாபாத் கிழக்கு தொகுதி எம்.பியாக உள்ளார்.

இந்நிலையில் பரேஷ் ராவல் முதன் முறையாக தமிழில் நடிக்கிறார். அதுவும் சூர்யா நடிக்கும் இந்த சூரறை போற்று படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். இதில் அபர்னா பாலமுரளி தான் ஹீரோயின். படம் தமிழ், இந்தியில் தயாராகிறது. பரேஷ் ராவல் நடிப்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அவர் பிஜேபியைச் சேர்ந்த நபருடன் இணைந்து நடிக்கவிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது

அப்புறம் என்ன சீக்கிரம் இந்த பஞ்சாயத்தை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டியது தான்..!

மேலும் படிக்க : பாஜக தலைவர்களின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் சூர்யா!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

சாலை அமைக்க தமிழக மக்கள் தானாக மனமுவந்து நிலத்தை அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் வேண்டுகோள்

0

சாலை அமைக்க தமிழக மக்கள் தானாக மனமுவந்து நிலத்தை அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் வேண்டுகோள்

தரமான சாலை திட்டங்களுக்காக மக்கள் தானாக மனம் உவந்து அவர்களது நிலத்தை அளிக்க முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ரூ.24 கோடி மதிப்பில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்திருந்த விழாவில் பேசிய முதல்வர், இந்திய அளவில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளன. நாட்டிலேயே உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. மேலும் தொழில் சிறக்கவும் சாலை மேம்பாடு மிகவும் முக்கியம் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தேவைப்படும் இடங்களில் பாலங்கள், புறவழிச் சாலைகள் அமைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக முதலமைச்சர் கூறினார். மேலும் தமிழகத்தில் குடிமராத்துப் பணிகள் விவசாயிகளின் உதவியுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.

மக்கள் தானாக மனமுவந்து இடம் தந்ததால் தான் சிறப்பான சாலைகளை அமைக்க முடியும். மேலும் ஓமலூர் – மேட்டூர் இடையேயான ரயில்வே மேம்பாலங்கள் விரைவில் கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், சேலம் உருக்காலை வளாகத்தில், ராணுவ தளவாட உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களும் எதிர்க்கட்சிகளும் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும்,போராட்டங்கள் நடத்தினாலும் சென்னை சேலம் இடையேயான எட்டு வழிச் சாலையை அமைப்பதை உறுதி செய்வது போல அமைந்துள்ளது என்று முதலமைச்சரின் பேச்சு குறித்து கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அதிமுக கோமா ஸ்டேஜ்! அதிமுக ஆட்சி கவிழ்க்க சதியா?

0

நேற்று தேனியில் தங்க தமிழ்செல்வன் அவர்களுடன் பல்லாயிரக்கணக்கான அதிமுக, அமமுக தொண்டர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஸ்டாலின் பேசியதாவது, அதிமுக ஆட்சிைய கவிழ்க்க கனவு காண்பதாக கூறுகிறார்கள், கனவு காணவில்லை, அது விரைவில் நனவாக நடக்கத்தான் போகிறது என்று தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.

தேனி அருகே வீரபாண்டியில் அமமுக கட்சியினர் தங்க தமிழ்செல்வன் அவர்களுடன் திமுகவில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆண்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் அக்கட்சியினர் இணைந்தனர். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தாய் கழகமான திமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கானோரை வருக, என வரவேற்கிறேன்.

இன்னும் தாய் கழகத்தில் இருந்து பிரிந்து சென்ற அங்குள்ள உண்மையான விசுவாசிகளை தாய் கழகமான திமுகவுக்கு அழைக்கிறேன் என்றார். தங்க தமிழ்ச்செல்வன் ஒன்றும் அறியாதவர். பலமுறை அவருக்கு, நாங்கள் தூது அனுப்பினோம். இன்றைக்கு வந்து மீண்டும் தாய் கழகத்தில் இணைத்து கொண்டார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் படத்தை சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறார்கள். அது உள்ளன்புடன் இல்லை. லஞ்சம் வாங்கி, கொள்ளை அடிக்கவும், பதவி சுகத்திற்காகவும்தான்.

ஜெயலலிதா மறைந்த பிறகு ஓபிஎஸ் தான் முதலமைச்சரானார். பின்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார். ஓ பி எஸ் யிடம் இருந்து பதவியை பறித்ததும் தர்மயுத்தம் என்றார். ஜெயலலிதா ஆவியுடன் பேசினேன் என்றார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று முதன்முதலில் புரளியை கிளப்பியதே ஓபிஎஸ் தான். ஆனால், அதுபற்றி விசாரிக்க ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டு, 6 முறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. ஏன் ஆஜராக வில்லை என்ன காரணம். ஏனால் கூறியது தர்ம யுத்தம் அனைத்தும் மக்களை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு நாடகம்.

கடந்த மக்களவை தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி விட்டது என்று கூறுகிறார்கள். நான் கேள்வி கேக்குறேன் அதிமுக 9 சட்டமன்ற தொகுதிகளில் அல்வா கொடுத்து ஏமாற்றியது அனைவரும் அறிவர்? ஓட்டு போட்ட தமிழக மக்களை கொச்சைப்படுத்துகிறார்கள். அதிமுக ஆட்சி கவிழ்ந்து அடுத்து விரைவில் தேர்தல் வரும். திமுக அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியில் இடம் பிடிக்கும். இப்போதுள்ள அதிமுக ஆட்சி ‘கோமா’ நிலையில் உள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் திமுக பெற்ற வெற்றி, தமிழக மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.முயல் பிடிக்கிறவன் முகத்தை பார்த்தால் தெரியும் என்பார்கள். அப்படித்தான், திமுகவை பார்த்து, தேர்தலில் வெற்றியை தந்தார்கள். நாங்கள் சொன்னதை செய்வோம் என்று மக்கள் நம்புகிறார்கள். அடுத்து திமுக தான் ஆட்சி அமைக்கப்போகிறது. அந்த தேர்தலிலும் நாங்கள் வாக்குறுதிகள் கொடுப்போம். இதையும், மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி காட்டுவோம்.

இதற்கு முன் அதிமுக எம்பிக்கள் 37 பேர் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள். தமிழக நலனுக்காக மத்திய அரசை கண்டித்து, அவர்கள் பேசியது உண்டா? குரல் எழுப்பியது உண்டா? தீர்மானம் கொண்டு வந்தது உண்டா? எதுவும் கிடையாது.தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் 37 பேர் வெற்றி பெற்று, என்ன செய்ய முடியும்? மத்தியில் பிஜேபி ஆட்சி. தமிழகத்தில் அதிமுக ஆட்சி. நாடாளுமன்றத்தில் திமுக 3வது பெரிய கட்சியாக இருந்தாலும், என்ன சாதிக்க போகிறார்கள் என்று தொடர்ந்து கேட்கிறார்கள். திமுக எம்பிக்கள் கடந்த ஒரு மாதத்தில் என்ன சாதித்தார்கள் என்பதை பட்டியல் போட்டு சொல்ல முடியும். பள்ளிக்கூடத்தில் இந்தி கட்டாயமாக்கியதை திரும்ப பெற வைத்தது திமுக. ரயில்வே துறையில் இந்தி பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை ஒரு மணிநேரத்தில் திரும்ப பெற வைத்தது திமுக எம்பிக்கள்.

தபால்துறையில் இந்தியில் தேர்வு நடந்ததை ரத்து செய்ய வைத்து, தமிழிலும் தேர்வு எழுதலாம் என உத்தரவாதம் அளிக்க வைத்தது திமுக. ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டத்தை தொடர்ந்து திமுக எதிர்த்து வருகிறது. நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த தொகுதியில் தான் அமைக்கிறது. அவருக்கு தைரியம், தெம்பு, திராணி, துணிச்சல் இருந்தால் அதை எதிர்த்து வாதிட தயாரா?காவிரி நீர் பிரச்னை, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக நலன் காக்க தொடர்ந்து திமுக குரல் கொடுக்கிறது. மக்களவை தேர்தலில் திமுக பெரிய வெற்றியை பெற்றது.

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இது, ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என்று சொன்னோம். இந்த ஆட்சியை கவிழ்க்க கனவு காண்பதாக கூறுகிறார்கள். கனவு காணவில்லை. அது, விரைவில் நனவாகி நடக்கத்தான் போகிறது. அதற்கு அனைவரும் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது,ரூ.550 கோடி செலவு செய்து, அதிமுக ஒரு எம்பி பதவியை பெற்றுள்ளது. அமைச்சர் ஒருவர் ரூ.3 லட்சம் கோடி பதுக்கியுள்ளார். மற்றவர்கள் தலா ரூ.1 லட்சம் கோடி வரை பதுக்கி வைத்துள்ளனர். அவர்கள் எங்கு வைத்துள்ளனர் என எனக்கு தெரியும். அவற்றை வெளியே கொண்டு வருவேன் என்றார்.

இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் தேனியில் பேசினார். விரைவில் ஆட்சி மாற்றம் வருமா? அதிமுக கோமா நிலையில் தான் இருக்கிறதா தர்ம யுத்தம் அனைத்தும் பொய்யா? என்பதை அடுத்த தேர்தலில் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

நடிகர் சூர்யாவிற்கு இவரே ஆதரவு தெரிவித்து விட்டாரா?

0

புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னாள் சென்னையில் நடந்த அகரம் அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா கூறியதாவது,
ஆசிரியர்களோ, மாணவர்களோ புதிய கல்விக் கொள்கை குறித்து ஏன் கண்டு கொள்ளவில்லை. இது நம் வீட்டு குழந்தைகளின் கல்வியை மாற்றப் போகிறது.

இந்த புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களும் உள்ளது, அச்சம் தரக்கூடிய விஷயங்களும் உள்ளது.
குறைவான ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று அரசின் குழு பரிந்துரை செய்திருப்பது சரி இல்லை. அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்காமல் நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினார் சூர்யா.

இதை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சூர்யா எதுவும் தெரியாமல், புரியாமல் பேசுவதாக பாஜக மற்றும் அதிமுகவினர் தெரிவித்தனர்.

இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் மட்டும் அல்ல அஜித், விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சிம்பு ரசிகர்களும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எதையும் தெரியாமல் பேசவில்லை என்று சூர்யாவும் பதில் அளித்தார்.
சூர்யாவுக்கு உலக நாயகன் கமல் ஹாஸன் ஆதரவு தெரிவித்தார். மேலும் திரையுலகினர் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

நல்ல கருத்துகளை பேசக் கூடாது. சுதந்திர நாட்டில் சுதந்திரம் இல்லாமல் உள்ளோம். சூர்யா விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது. இருப்பினும் சூர்யா போன்று அனைவரும் நல்ல கருத்துகளை பேச வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

வருமைகொட்டிர்க்கு கீழ் உள்ள பெற்றோர் இல்லாத படிக்க வசதி இல்லாத 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்து படிக்க முடியாத எளிய மாணவ, மாணவிகளை அகரம் பவுண்டேஷன் மூலம் படிக்க வைக்கும் சூர்யாவுக்கு புதிய கல்விக் கொள்கை பற்றி பேச முழு உரிமை உள்ளது. அவரை கேள்வி கேட்கும் சிலருக்கு தான் தாங்கள் எதை பற்றி பேசுகிறோம் என்றே தெரியவில்லை என சூர்யா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு, மும்மொழி கொள்கை பற்றி பேசிய சூர்யாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விஜய்யின் அப்பா சந்திரசேகர் ஆதரவு அளித்தது சூர்யாவிற்கு மேலும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

திமுகவின் ஸ்லீப்பர் செல் ஜால்ரா வைகோ! கிழித்து தொங்கவிட்ட அதிமுக ஜெய்குமார் !

0

திமுகவுக்கு வைகோ ஜால்ரா கிழித்து தொங்கவிட்ட அதிமுக ஜெய்குமார். நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் மறு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதிமுக பிஜேபி மற்றும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வேலூர் தேர்தலை சந்திக்கும் என கூறினார்.

நிருபர்களிடம் கூறியதாவது வேலூர் மக்களவை தேர்தலில், பாஜகவோடு கூட்டணி தொடரும் எனவும் அதிமுக அமோக வெற்றி பெறும் எனவும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில், மீனவர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதாவின் கனவை நினைவாக்கும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய இருப்பதாகவும் கூறினார். எய்ம்ஸ்
மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். அது இந்த அம்மாவின் அரசால் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 37 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வெற்றி பெற்றது. அத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றதாகவும், இனி அதுபோன்ற வெற்றி அக்கட்சிக்கு கிடைக்காது எனவும் ஜெயகுமார் விமர்சித்தார்.

வைகோ சொல்வது எல்லாம் உண்மையாகி விடாது. அவர் முந்தைய தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்று ஒரு கூட்டணியை உருவாக்கி திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். திமுக ஒரு கொலைகார கட்சி ஏமாற்று கட்சி என விமர்சித்தார். ஆனால் இன்று திமுகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். வைகோ மீது தான் அதிக மரியாதை வைத்துள்ளதாகவும், ஒரு எம்.பி. சீட் கொடுக்கப்பட்டதால் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதாகவும் கூறினார்.

யார் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் கருத்து சுதந்திரம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் மேடை பேச்சுக்காக நடிகர் அஜித்குமார் விமர்சனத்துக்கு உள்ளானார் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு அதிமுக ஜெய்குமார் திமுகவையும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் விமர்சனம் செய்தார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமானநிலையத்தில் திமுகவை விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

மணிரத்னம் எடுத்த திடீர் முடிவு! ஏன் இந்த விபரீத முயற்சி? குழப்பத்தில் தமிழ் திரையுலகம்

0

மணிரத்னம் எடுத்த திடீர் முடிவு! ஏன் இந்த விபரீத முயற்சி? குழப்பத்தில் தமிழ் திரையுலகம்

நம்ம திரைக்கதை மன்னன் பாக்யராஜின் மகனா சாந்தணு வாழ்க்கையில எத்தனையோ பேர் ஒளியேத்திவைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் எதுவுமே கைகொடுக்கவில்லை. பார்த்திபன், தங்கர் பச்சான் போன்ற எத்தனையோ ஜாம்பாவான்கள் தலைகீழாக நின்று பார்த்தும் ஒன்றும் நடக்காத நிலையில், தற்போது அந்த ரிஸ்க் மணிரத்னம் கைக்கு வந்திருக்கிறது.

எஸ்! மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அவர் தற்போது ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தை தனது மெட்ராஸ் டாக்கீஸ் பேனரில் தயாரித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

‘வானம் கொட்டட்டும்’ படத்தை மணிரத்னம் அவர்களின் உதவியாளர் தனசேகரன் என்பவர் இயக்கவுள்ளார். விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் தற்போது புதியதாக சாந்தனு பாக்கியராஜ் இணைந்துள்ளார். இவருக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Director Maniratnam Sudden Decision-News4 Tamil News Online Cinema News in Tamil

மணிரத்னம் கதை திரைக்கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ’96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகும் இந்த படத்தில் ப்ரீத்தா என்பவர் ஒளிப்பதிவாளராக பணி செய்கிறார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சரத்குமார் – ராதிகா ஜோடி இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சும்மாவே அட்லீ இந்த விஷயத்துல கில்லி.. பிகில்ல இதெல்லாம் இருக்குன்னா கேக்கணுமா..?

இவர் எடுத்த இந்த திடீர் முடிவால் மணிரத்னம் படத்தில் சாந்தணுவா..??? சாந்தணு வளர்ந்துட்டாரா.. இல்லை மணிரத்னம் எதுவும் சறுக்கிட்டாரா..?? என்று திரையுலகினர் குழப்பத்தில் உள்ளனர்.

பார்த்து மணி சார்.. தம்பியோட பவர் அப்படி..!

மேலும் படிக்க : யார் இந்த பையன்? இவருக்கு இப்படி ஒரு பையனா? ஆச்சரியத்தில் திரையுலகினர்!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !!

0

அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !!

காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசிக்க வருவதை பொது மக்களின் பாதுகாப்பு கருதி முதியோர், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் தவிர்க்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தி வரதர் தரிசனத்திற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொது மக்கள் வந்து கொண்டிருப்பதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் தடுமாறி வருகிறது சில தினங்களுக்கு முன்பு தான் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, ‘முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் காஞ்சிக்கு வர வேண்டாம்  என்று காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியரே பத்திரிகைகள் மூலம் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு அந்நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

ஏறத்தாழ நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் நபர்களுக்கு மேல் வந்து கொண்டிருக்கும் இந்நிலையில் நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் காஞ்சியை அடையும் பக்தர்களின் எண்ணிக்கை விறுவிறுவென்று கூடிக் கொண்டிருக்கிறது. இதை கணக்கில் கொண்டே கலெக்டர் காஞ்சிபுரம் அத்தி வரதரை  தரிசிப்பதை  ‘முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என பத்திரிகைகள் மூலம் கேட்டுக் கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்புக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மாவட்ட ஆட்சியர் பொன்னையனை அழைத்து கண்டித்தாக கூறப்படுகிறது.

மேலும் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பை தருவதை விட்டு விட்டு தவிர்க்க வேண்டும் என அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது என கூறிய முதலமைச்சர், இதனையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று அத்திவரதரை தரிசிக்க வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அத்திவரதரை தரிசிப்பதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பதற்கு கடும் கண்டணம் தெரிவித்தார்.

“தமிழ்நாட்ல ஒரு ஆன்மிக விழா நடக்குது. 45 நாள் பாதுகாப்பு தர உங்களால் முடியாதா…மக்களை காஞ்சிபுரத்துக்கு வரவேணாம்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருக்கீங்க. அதைவிட உங்களுக்கு என்ன வேலை என்று பொங்கித் தீர்த்து விட்டார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.