Saturday, October 19, 2024
Home Blog Page 5000

கொடுத்த வாக்குறுதியில் உறுதியாக இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ்! ஆளுங்கட்சியினர் பெருமிதம்! எதிர்கட்சியினருக்கு ஏமாற்றம்

0

கொடுத்த வாக்குறுதியில் உறுதியாக இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ்! ஆளுங்கட்சியினர் பெருமிதம்! எதிர்கட்சியினருக்கு ஏமாற்றம்

விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக உள்ளாட்சித் துறையின் முன்னாள் அமைச்சரும், நலிந்த பிரிவு மக்களுக்காக குரல் கொடுத்தவருமான மறைந்த எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப் படத்தினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (19/07/2019) திறந்து வைத்தார்.

இந்த விழாவில், சபாநாயகர் தனபால், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்திரசேகரன் , அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே .மூர்த்தி , முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர்  உள்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. 

ஆளும் கட்சியின் கூட்டணி தலைவரான மருத்துவர் ராமதாசின் வருகையை தமிழக முதல்வர் உள்பட பலரும் எதிர்பார்த்தனர்.இந்நிலையில் இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பதை ஆளுங்கட்சியினரை விட மற்ற கட்சிகளும் தமிழக ஊடகங்களும் தான் அதிகமாக எதிர்பார்த்திருந்தார்கள். ஏனெனில் பாமகவை தொடங்கிய பொழுது மருத்துவர் ராமதாஸ் எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ படாது என ஒரு வாக்குறுதி அளித்திருந்தார். இந்த விழாவில் பங்கேற்பதன் மூலம் அந்த வாக்குறுதியை இன்று மருத்துவர் மீறுவாரா? என பல ஊடகங்களும் கடுமையாக விமர்சனம் செய்து எழுதி எதிர்பார்த்து காத்திருந்தனர். 

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் இணையதள தொண்டர்களும் நிர்வாகிகளும் அதை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக டாக்டர் ராமதாஸ் தன்னுடைய வாக்குறுதியில் உறுதியாக இருப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார். இவ்வாறு மருத்துவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாமக சார்பில் தலைவர் ஜிகே மணி, எம்பி அன்புமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி போன்றவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கம்!

உழவர் உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை சட்டப் பேரவை மண்டபத்தில் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு திறக்கும் விழாவிற்கான சட்டப் பேரவைச் செயலாளரின் அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க நன்றி! 

வாழ்நாளில் சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்தில் ஓர் அடி எடுத்து வைக்க மாட்டேன் என்று உறுதி ஏற்று, அதை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமசாமி படையாட்சியார் உரிமைகள் அற்று கிடந்த ஊமை ஜனங்களுக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்தவர், போராடியவர். அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் சட்ட பேரவை மண்டபத்தில் அவரது உருவப்படத்தை திறப்பது அவருக்கு செய்யப்படும் சரியான அங்கீகாரம் ஆகும். இதற்காக தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தாங்கள் தான் அறிவித்து அரசாணை வெளியிட்டு இருந்தீர்கள். அதுமட்டுமின்றி கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அவரது உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அதற்கான அடிக்கல்லையும் கடந்த ஆண்டு நட்டு வைத்தீர்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பெரியவர் ராமசாமி படையாச்சியார் நினைவைப் போற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தொடர்ச்சியாக அவரது திருவுருவ படமும் சட்டப் பேரவை மண்டபத்தில் திறக்கப்படுவது அவருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. திரு ராமசாமி படையாச்சியார் உருவ படம் திறப்பு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என டாக்டர் ராமதாஸ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பிக்கும் போது எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ படாது என்று கட்சியினருக்கு அளித்த வாக்குறுதியானது தேர்தல் அரசியல் மூலமோ அல்லது வேறு வகையிலோ பதவி பெற்று அங்கு செல்ல மாட்டேன் என்பதை தான் குறிப்பிட்டார் என்றாலும் தான் கொடுத்த வாக்குறுதியில் மருத்துவர் ராமதாஸ் உறுதியாக இருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதை வைத்து அரசியல் செய்ய காத்திருந்த எதிர்க்கட்சியினருக்கு இவரின் இந்த முடிவு ஏமாற்றத்தை தந்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

0

பப்பாளி பழம் அனைவரும் அறிந்ததே மிகவும் எளிமையாக கிடைக்க கூடிய ஒரு பழம் ஆகும். இப்படி எளிமையாக கிடைப்பது நாம் அனைவரும் அதிகமாக உண்பதில்லை. பப்பாளி மரத்தில் அதனுடைய இலை, பழம், விதை இப்படி அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தவை ஆகும்.

பப்பாளி பழத்தில் அதிக அளவு விட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் போன்ற உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் ஊட்டச்சத்துக்கள்  அடங்கியுள்ளன. இது அனைவரும் உண்ணும் பழம் ஆகும்.

பப்பாளி பழத்தை தொடர்ந்து உண்ணுவந்தால் மலச்சிக்கல் குணமாகும். பப்பாளி பழத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வரும்போது நமது சீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் சருமத்தின் நிறத்திற்கு மற்றும் வடிவத்திற்கு உதவுகிறது. முடி வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.

பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது. எனவே இதனால் நாம் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது  தவிர்க்கப்படுகிறது. நொறுக்கு தீனியை விட மிகவும் விலை குறைவு.

பப்பாளி பழத்தில் கரோட்டீனாய்டுகள், பிலேவனாயிடுகள், வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதனால் நமது நோய்  எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். பப்பாளி வயிற்று பொருமலை ஏற்படாமல் தடுக்கும்.

பப்பாளிபழத்தில் கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் ஏ உள்ளது. இவை கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் பழத்தை கண் மற்றும் சருமத்தின் மேல் பற்றுபொடுவதால் சருமம் பொலிவோடு காணப்படும்.

மேலும் படிக்க : இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் எலும்பு தேய்மானம் அடைந்து அவதிப்படுபவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள்  எலும்புகளில் ஏற்படும் அழற்சியை போக்க வல்லது. 

மேலும் படிக்க : கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா!கேன்சருக்குமா!

பப்பாளி பழம் அனைத்து பகுதிகளிலும் விலையகூடிய ஒன்றாகும். இதை நம் தோட்டத்திலேயே விளைவித்து பயனடையலாம்.

மேலும் படிக்க : நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, தோல்நோய் போன்றவற்றிக்கு எளிதில் கிடைக்கும் இந்த பழம் அருமருந்தாகும்!

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி

0

சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி

நடிகர் சூர்யாவிற்கு சொந்தமான வீடு சென்னை தி.நகரில் உள்ளது. இந்த வீடு ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து கட்டப்பட்ட 7 நட்சத்திர ஹோட்டலை போன்று மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. இதற்கான நிதியை நடிகர் சூர்யா எவ்வாறு திரட்டினார் என்று கூற முடியுமா? என பாஜக தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர். நிர்மல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’’30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வி கொள்கைக்கு ஏன் அவசரம் என்று கேட்டுள்ளார் சூர்யா. 2015 ஆண்டு முதல் டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கமிட்டி அனைத்து மாநில பிரதிநிதி மற்றும் வல்லுனர்களுடன் பல கட்ட ஆலோசனைக்கு பிறகுதான் இதை பரிந்துரை செய்துள்ளனர். 

அதனுடன் டாக்டர் அப்துல் கலாம் உதவியாளர் பொன்ராஜ் அவர்களின் அனைத்து பரிந்துரையும் எந்தவித திருத்தமும் இல்லாமல் அப்படியே ஏற்று கொண்டது இந்த கமிட்டி. இதில் எந்த வித அவசரமும் காட்டவில்லை. அடுத்ததாக 3 வயது குழந்தையால் மூன்று மொழி கற்க முடியுமா என கேட்டுள்ளார். இன்று சூர்யா போன்ற  வசதி படைத்தவர்கள் குழந்தைகள் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ சிலபஸில் தனியார் பள்ளிகளில் மூன்று மொழியை கற்கும் பொழுது, கிராமத்து குழந்தைகளால் கண்டிப்பாக கற்க முடியும். 

1848 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதே என குறிப்பிட்டுள்ளார் சூர்யா. நாம் நமது கல்வி கொள்கையில் எந்த வித மாறுதலும் செய்யாமல் இருந்தால் அனைவரும் தனியார் பள்ளிகளை தேடி செல்லும் நிலைதான் உருவாகும். இதே நிலை நீடித்தால் 1848 பள்ளிகள் மட்டுமல்ல, சில வருடங்களில் அனைத்து அரசு  பள்ளிகளும் மூடப்படலாம்.

நீட் தேர்வு அவசியமா என கேட்டுள்ளார். கண்டிப்பாக அவசியம்தான். ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தால் யார் வேண்டுமானாலும் மருத்துவராகலாம் என்ற நிலையை மாற்றி, கல்வி தகுதி உடையவர்கள் மட்டுமே இன்று நீட் தேர்வால் மருத்துவராக முடியும். தனியார் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற ஒரு தகுதி தேர்வு மிக அவசியம். மேலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிப்படை தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மருத்துவராகும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி கொள்கை தொடர்பாக, எந்தவித அடிப்படை அறிவும் இல்லாமல், யாரோ எழுதி கொடுத்ததை மேடையில் நடித்துவிட்டு சென்றுள்ளார். இனிவரும் காலங்களில் ஆண்டிற்கு 5 லட்சத்திற்கும் அதிகமாக கல்லூரியில் இருந்து வெளிவரும் மாணவர்களுக்கு, சிறந்த கல்வி கொள்கையால்தான் வேலை வாய்ப்பு அமையும். நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் தொடர்பாக ஏராளமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை தொடர்பாக நமது கேள்விகளுக்கு விளக்கம் தருவாரா அவர்?

1) நடிகர் சூர்யா, தான் நிர்வகிக்கும் அகரம் அறக்கட்டளைக்கு அவருடைய குடும்பம் சார்பில் எவ்வளவு நிதி இதுவரை  வழங்கபட்டுள்ளது என வெளியிட முடியுமா?

2) அகரம் அறக்கட்டளைகாக பல வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு பின்னர் மூடியுள்ளனர். இது எதனால் என தெரிவிக்க முடியுமா சூர்யா?

3) நடிகர் சூர்யா, வரி ஏய்ப்பிற்காக தனது சம்பளத்தை அகரம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு, துபாயை சேர்ந்த ஸ்டார் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சினி கேலக்சி போன்ற நிறுவனங்களில் இருந்து வாங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகர் சூர்யா எப்போது பதில் சொல்லப் போகிறார்?

4) நடிகர் சூர்யாவின் தி.நகர் வீடு, ரூ.100 கோடிக்கும் மேல் கட்டப்பட்ட 7 நட்சத்திர ஹோட்டலை போன்று பிரம்மாண்டமாக உள்ளது. இதற்கான நிதியை நடிகர் சூர்யா எவ்வாறு திரட்டினார் என கூற முடியுமா?

5) பேங்க் ஆப் இந்தியா மற்றும் அகரம் அறக்கட்டளைக்கு உள்ள உறவை நடிகர் சூர்யா தெளிவு படுத்துவரா? மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்ட வரைவு தொடர்பான நடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நாம் விளக்கம் தந்துவிட்டோம். அதேபோல, அகரம் அறக்கட்டளை தொடர்பான நமது கேள்விக்கு சூர்யா விளக்கம் தர வேண்டும் என கேட்டு கொள்கிறோம்’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது! ராகுல் காந்தி கண்டனம்!

0

பிரியங்கா காந்தி கைது நடவடிக்கையை ராகுல் காந்தி கடுமையாக கண்டித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் நடந்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

சுட்டு கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்டு அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் உத்திரபிரதேச மாநில கிழக்கு பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி இன்று சோன்பத்ரா பகுதிக்கு வந்தார். 

பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேசத்தில் உள்ள நாராயண்பூர் எனும் பகுதியில் பிரியங்கா காந்தி வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இங்கு உங்களுக்கு வர அனுமதி இல்லை என கூறினர். இதனால் உடனடியாக பிரியங்கா காந்தி, அதே இடத்தில் பிரியங்கா காந்தி தொண்டர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி மற்றும் அவருடன் ஈடுபட்டவர்களை தொண்டர்களையும் போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதை அறிந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தாரை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை அனுமதிக்காமல் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை சட்டத்தை மீறி கைது செய்வதா இது சட்டத்திற்கு எதிரான செயல். என உத்திரபிரதேச அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டமீறலாக பிரியங்காவை போலீசார் கைது செய்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து வெளியேற மறுத்த சுட்டுக் கொல்லப்பட்ட 10 பழங்குடியினரின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற பிரியங்காவை தடுத்து நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேச அரசின் விதிமீறல் செயல் ஆகும். 

பிரியங்கா காந்தி கைது நடவடிக்கை மற்றும் தன் சொந்த நிலத்தை காப்பாற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்களை துப்பாக்கி சூடு நடத்தி 10 பேர் கொல்ல பட்டது. இதன் மூலம் அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதை அறியலாம் என்று தனது கண்டன செய்தியில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

தர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா? ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

0

தர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா? ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினிக்கு ஜோடி என்ற கேரக்டர் ஒன்றே படத்தில் இல்லையென்ற தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. படத்தில் சிங்கிள் மேனாகத்தான் ரஜினி நடிக்கிறாராம். இந்தப்படத்தில் நயன்தாரா நடித்துவருவதால், அவர்தான் ரஜினியின் ஜோடியாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், அந்த நினைப்பு தற்போது தவிடு பொடியாகியுள்ளது.

பல வருடங்களுக்குப் பிறகு, அதாவது தனது ஆரம்பக் காலக்கட்டப் படங்களுக்குப் பிறகு தற்போதுதான் ரஜினி இப்படியொரு ரோலில் நடிக்க சம்மதித்திருக்கிறார். அதற்கு காரணம், இயக்குநர் முருகதாஸ் சொல்லி அசத்தியிருக்கும் கதைதானாம்.

கதைப்படி ரஜினிக்கு ஜோடி இல்லாமல் இருந்தால்தான் திரைக்கதை இன்னும் வலுப்பெறும் என்பதாலயே முருகதாஸும் தீவிர ஆலோசனைக்குப் பிறகு இந்த ரிஸ்க்கான முடிவை எடுத்திருக்கிறாராம். மேலும் ரஜினியின் கேரியரில், காலம் கடந்து பேசப்படும் கேரக்டர்களில் ஒன்றாக இது இருக்குமென்றும் அவர் நம்புகிறாராம்.

அதேசமயம் படத்தில் நயனின் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்குமாம். போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினியின் விசாரணையில் ஒரு முக்கிய அங்கமாக வரும் கேரக்டரைதான் நயன் செய்திருக்கிறாராம். அதாவது ரஜினியின் விசாரணைக்கு உதவும் கேரக்டர்களில் நயன்தாராவின் பங்கு பெரிய அளவில் இருக்குமாம்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஏற்கெனவே முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கஜினி’யில் நயன்தாரா நடித்திருக்கும் ரோலைப்போல இந்தக் கேரக்டர் இருக்குமென யூகிக்கப்படுகிறது. அதனால், ரஜினியுடன் டூயட், ரொமான்ஸ் போன்ற சமாசாரங்கள் எல்லாம் எதுவும் ‘தர்பார்’ படத்தில் இல்லையாம்.

கேப்டன் விஜயகாந்த் பிஸி ஹீரோவாக இருந்த காலத்தில் அவரை வைத்து முருகதாஸ் இயக்கிய ‘ரமணா’ படத்தில் அவர் இறப்பதுபோல ஒரு ரிஸ்க்கான கிளைமேக்ஸை படமாக்கியிருந்தார். அந்த முடிவு விஜயகாந்தின் ரசிகர்களை கோபமூட்டாததோடு படத்தின் வெற்றிக்கும் பெரும் பங்காக அமைந்திருந்தது. அந்த மேஜிக்தான் மீண்டும் ‘தர்பார்’ படத்திலும் நிகழப்போகிறது என யூனிட் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

உலக கோப்பையா உள்ளூர் கோப்பையா? கலக்க போகிறது TNPL 2019 கிரிக்கெட் போட்டி!

0

உலககோப்பை கிரிக்கெட் முடிந்த பின்னர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது தமிழகத்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் TNPL ஆகும். இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போலவே TNPL வும் மிகவும் சிறப்பு பெற்றது. இது விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் ஒரு அமைப்பாகும். இதனால் கிராமப்புற பகுதிகளில் உள்ள திறமைமிக்க இளைஞர்களை கண்டறிவதற்கு அவர்களை மேம்படுத்தவும் பயன்படுகிறது.

அவ்வாறு இந்த ஆண்டும் தமிழ்நாடு பிரீமியர் லீக் நடைபெற இருக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த TNPL தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் தூத்துக்குடி பாட்ரியாஸ் மற்றும் சேபாக் கில்லிஸ் அணிகள் மிகவும் பிரசித்திபெற்ற அணிகள் ஆகும் இரண்டு அணிகள் முதலில் நடந்த இரண்டு தொடர்களில் இறுதி ஆட்டம் வரை சென்றது. இதில் 2016 இல் தூத்துக்குடி பாட்ரியஸ் அணியும், 2017 இல் சென்னை சேபாக் கில்லிஸ் அணியும் வெற்றி பெற்றது. 2018 இல் மதுரை பான்தர்ஸ் அணியும் வெற்றி பெற்றது.

எனவே 2019 இல் இந்த ஆண்டு நடக்க விருக்கும TNPL சீசன் 4 இல் அனைத்து அணிகளும் வெற்றியை ருசிக்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் போட்டியில் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் மோதுகிறது. இதனால் திண்டுக்கல் டிராகன் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் வெள்ளிக்கிழமை நத்தத்தில் உள்ள என்.பிஆர் கல்லூரி மைதானத்தில் துவக்கி வைக்கிறார்.

நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி. கடந்த மூன்று சீசன்களில் தமிழ்நாடு பிரீமியர் லீக் காரணமாக சிறப்பாக விளையாடி புகழ் பெற்ற அற்புதமான திறமைகளில் அவர்கள் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஏலத்தில் பிரபலமடைந்துள்ளனர். இந்த தொடர் TNPL சீசன் 4 யை சங்கர் சிமெண்ட் வழங்க இருக்கிறது. முதல் போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் N.P.R கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

மைதானம் சிறப்பாக அமைக்கப்பட்டு இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் தொடங்கி வைக்கிறார். இதனால் மக்கள் போட்டியை காண ஆவலாக உள்ளனர்.

மாவட்டங்களில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் அதன் விளைவாக, டி.என்.பி.எல் இந்த ஆண்டு நத்தம், மற்றும் திருநெல்வேலிக்கு தலா 15 போட்டிகளை ஒதுக்கியுள்ளது. இந்த மையங்களில் நடத்தப்படும்.
அடுத்த ஆண்டு முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடத்துவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடைசியாக நடந்த சீசனில் மதுரை அணி விசித்திரமாக வெற்றி பெற்றது.முதல் இரண்டு சீசனில் ஒரு வெற்றி கூட பதிவு செய்யாத மதுரை கடந்த சீசனில் அசாதாரண வெற்றி பெற்றது.இதற்கு முக்கிய காரணம் கட்டிட கலைஞர் கே.பி. அருண் கார்த்திக் ஆகும்.

மதுரை அணியில் சுழற்பந்து வீச்சாளர் வருண் இல்லாமல் இருப்பது கவலையை அளிக்கிறது. டி.என்.பி.எல் 2018 இன் நடந்த காயத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இது அணிக்கு ஒரு பெரிய இழப்பு. ஆனால் எங்களிடம் இன்னும் அந்த வேலையைச் செய்யக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள், என்று கார்த்திக் கூறினார். தொடக்க ஆட்டத்தில், சூப்பர் கில்லீஸ் கடந்த ஆண்டின் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்த திண்டுக்கல் டிராகன்களைப் எதிர்கொள்கிறது.

இந்தியா ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் கால் விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் மீளவில்லை என்பதால், சொந்த அணிக்கு நட்சத்திர ஆஃப் ஸ்பின்னர் ஆர்.அஷ்வின் தலைமை தாங்குவார். “அஸ்வின் அனுபவமும் தலைமைத்துவ குணங்களும் எங்கள் அணிக்கு ஒரு பெரிய நன்மை” என்று திண்டிகல் டிராகன்களின் தலைமை பயிற்சியாளர் எம். வெங்கடரமணர் கூறினார். அவர் முழு போட்டிகளிலும் விளையாடுவதால், பட்டத்தை வெல்வதற்கான எங்கள் இலக்கை அடைய இது உதவும் என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடையும். தொடக்க போட்டியில் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் நல்ல தொடக்கத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

TNPL 2019 கிரிக்கெட் போட்டி ஆரம்பம்! திண்டுக்கல் டிராகன் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இடையேயான முதல் ஆட்டத்தில் வெல்ல போவது யார்? Dream 11பரிந்துரைகள்

0

TNPL 2019 கிரிக்கெட் போட்டி ஆரம்பம்! திண்டுக்கல் டிராகன் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இடையேயான முதல் ஆட்டத்தில் வெல்ல போவது யார்? Dream 11பரிந்துரைகள்

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி.என்.பி.எல்.போட்டியில் முற்றிலும் எதிராக விளையாடி கொண்டிருந்த இரண்டு அணிகள் டிஎன்பிஎல் 2019 ஆம் ஆண்டிற்கான முதல் ஆட்டத்திற்கு மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றன. திண்டுக்கல் டிராகன்கள் லீக்கின் கடைசி ஆட்டத்தில் பயங்கரமாக இருந்தன மேலும் புள்ளிகள் அட்டவணையில் முதல் இடத்தைப் பிடித்தன. இருப்பினும், இறுதிப் போட்டியில் மோசமாக விளையாடியது அவர்கள் பட்டத்தை வெல்ல முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மறுபுறம், சேப்பாக் சூப்பர் கில்லீஸின் செயல்பாடு முற்றிலும் மாறுபட்டது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு ஆட்டத்தை மட்டுமே வென்றது அந்த அணிக்கு மறக்க ஒரு அனுபவம். இந்த இரு தரப்பினரும் போட்டித் துவக்கத்தில் விளையாடுவதால், அவர்கள் முன்கூட்டியே நுழைவதை விரும்புகிறார்கள். டிராகன்கள் கடந்த சீசனில் அவர்கள் விட்டுச்சென்ற இடத்திலிருந்து தொடர விரும்பினால், கில்லீஸ் அட்டவணையை தலைகீழாக மாற்றி வெற்றிகரமான வழிகளில் திரும்புவார்.

போட்டி விவரங்கள்:
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) 2019 இல் போட்டி 1 இல் திண்டுக்கல் டிராகன்களுக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கும் இடையில் திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.
இந்த போட்டியானது உள்ளூர் நேரப்படி இரவு 7:15 மணிக்கு தொடங்குகிறது (1:45 PM GMT).
இந்த போட்டியானது இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் இருக்கும். ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங்கிலும் கிடைக்கிறது.

மைதானம் எப்படியானது:
கடந்த ஆண்டு திண்டுக்கலில் பேட் செய்வது மிகவும் எளிதான ஆடுகளம் அல்ல. இதில் பெரும்பாலும் கடந்த முறை குறைந்த ஸ்கோர் எடுத்ததை பார்த்தோம், பந்துவீச்சாளர்கள் இங்கு பந்துவீச்சை ரசித்தனர். இந்த முறையும் இது போலவே இருக்கலாம். ஆனால் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் சிறிது நேரம் செலவழித்து நிலைமைகளை நன்கு புரிந்து கொண்டால், ஒரு பெரிய ஸ்கோர் எட்ட கூடியது தான்.
சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்:
166 (கடைசி ஐந்து இரவு டி.என்.எல்.பி போட்டிகள்)
போட்டி அணிகளின் பதிவு: வென்றது – 2, இழந்தது – 3 (கடைசி ஐந்து இரவு டி.என்.எல்.பி போட்டிகள்)

விளையாடும் வாய்ப்புள்ள வீரர்கள்:
திண்டிகல் டிராகன்கள்:
ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் (வார), என்.எஸ்.சதுர்வேத், வருண் தொட்டாத்ரி, மோகன் அபிநவ், ஆர் விவேக், ரவிச்சந்திரன் அஸ்வின் (இ), ராமலிங்கம் ரோஹித், எம் முகமது, எம் சிலம்பரசன், திரிலோக் நாக்.
பெஞ்ச்: ஆதித்யா அருண், ஜெகநாதன் க aus சிக், சுமந்த் ஜெயின், எம்.இ யஷ் அருண் மோஷி, எஸ் சுஜய்.
செபாக் சூப்பர் கில்லீஸ்:
எஸ் கார்த்திக் (வார), பாஸ்கரன் ராகுல், கோபிநாத் (இ), கங்கா ஸ்ரீதர் ராஜு, க aus சிக் காந்தி, உத்திரசாமி சசிதேவ், எம்.கே.சிவகுமார், முருகன் அஸ்வின், அருண்குமார், பி அருண், சம்ருத் பட்.
பெஞ்ச்: விஜய் சங்கர், ஏ ஆரிஃப், சன்னி குமார் சிங், எம் சித்தார்த், ஆர் அலெக்சாண்டர், எஸ் ஹரிஷ்குமார்.

இதர தகவல்கள்:
விஜய் சங்கர் இன்னும் என்.சி.ஏ-வில் இருக்கிறார், அவர் விளையாட மாட்டார். ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்து தொடக்க மோதலில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகம்.

பவர் பிக்ஸ்:
டி.என்.பி.எல் 2018 இல் ஆர் விவேக்:
இன்னிங்ஸ்: 7
ரன்கள்: 262
சராசரி: 52.40
எஸ் / ஆர்: 209.60
50 கள்: 3, 4 கள்: 17, 6 கள்: 22

கேப்டன் மற்றும் துணை கேப்டன் தேர்வு:
கேப்டன் தேர்வுகள்:
என் ஜெகதீசன், கௌசிக் காந்தி, ஆர் விவேக்
துணை கேப்டன் தேர்வு: ரவிச்சந்திரன் அஸ்வின், கே கோபிநாத், கங்கா ஸ்ரீதர் ராஜு
பரிந்துரைகள்:
கீப்பர் – எஸ் கார்த்திக், என் ஜெகதீசன்
பேட்ஸ்மேன்கள் – யு சசிதேவ், கே காந்தி, ஆர் விவேக்
ஆல்-ரவுண்டர்கள் – எம் அஸ்வின், ஆர் அஸ்வின் (விசி)
பந்து வீச்சாளர்கள் – எஸ் பட், பி அருண், ஒரு மோகன், டி நாக்

கிராண்ட் லீக்ஸ் / மெகா லீக்குகளுக்கான பரிந்துரைகள்:
கீப்பர் – கே கோபிநாத், என் ஜெகதீசன்
பேட்ஸ்மேன்கள் – ஜி ஸ்ரீதர் ராஜு (வி.சி), யு சசிதேவ், என் சதுர்வேத், ஆர் விவேக் (சி)
ஆல்-ரவுண்டர்கள் – எம் அஸ்வின், ஆர் அஸ்வின்
பந்து வீச்சாளர்கள் – எஸ் பட், அருண்குமார், எம் முகமது

வல்லுநர் அறிவுரை:
உங்கள் Dreams 11 பேண்டஸி அணியில் என் ஜெகதீசன் மற்றும் ஆர் விவேக் அவசியம், ஏனெனில் அவர்கள் கடந்த பருவத்தில் விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டனர். 10.5 வரவுகளில் வரும் கௌசிக் காந்தியை நீங்கள் தேர்வுசெய்தால், நீங்கள் வேறு சில தியாகங்களைச் செய்ய வேண்டும்.
சாத்தியமான வெற்றியாளர்கள்: திண்டிகல் டிராகன்கள் கடந்த கால செயல்பாடுகளின் படி மிகவும் வலுவாக இருப்பதால் அவர்கள் போட்டியில் வெல்லக்கூடும்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

தமிழகத்தில் மேலும் ஒரு புதிய மாநகராட்சி! அரசாணை வெளியீடு!

0

தமிழகத்தில் மக்கள்தொகை, வருவாய், வளர்ச்சி பொறுத்து மாநகராட்சி தரம் உயர்த்தப்படும். இதுபோன்ற 15 மாநகராட்சிகள் உள்ளன. ஆவடி மாநகராட்சி நிறுவனங்களாக ஜூன் 19, 2019 அன்று மேம்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் மொத்தம் 14 நகராட்சிகள் இருந்தன. கடைசியாக 2014 லில் தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. பின்பு 2019 லில் இந்த வருடம் நாகர்கோவில், ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு செய்தது. அதை தொடர்ந்து ஆவடி நகராட்சியாக உயர்த்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து அமைச்சர் வேலுமணி முன்னதாக அறிவித்தது போல இன்று சட்டசபை கூடியதும் அமைச்சர் வேலுமணி ஆவடி நகராட்சியாக உயர்த்த்படும் சட்ட மசோதாவை சட்ட சபையில் தாக்கல் செய்தார்.இதை பரிசீலித்த தமிழக அரசு ஆவடியை உடனடி மாநகராட்சி அறிவித்து அரசாணை வெளியீடு செய்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆவடி மிகவும் சிறிய பரப்பை கொண்டிருந்தாலும் அதன் அடர்த்தி மக்கள் நெருக்கடி மக்களின் முன்னேற்றம்,அரசின் வருவாய் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆவடி நகராட்சி அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தது போல ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

நாகர்கோவில் மற்றும் ஓசூர் தொடர்ந்து இன்று ஆவடி 15வது மாநகராட்சி அந்தஸ்தை பெற்றது.அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்து தமிழக அரசுபரிசீலித்து உடனே மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டது.

குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? 1.30 மணி வரை ஆளுநர் கெடு!

0

கர்நாடகாவில் தொடர்ந்து சில நாட்களாகவே அரசியலில் குழப்பம் நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆளும் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? நீடிக்கதா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். 16 MLA கல் தங்களின் பதவியை ராஜினாமா செய்தது மூலம் ஆளும் ஆட்சியில் பெருமான்மை இல்லா நிலைமை ஏற்பட்டுள்ளது.பெருமான்மையை நிரூபிக்க நேற்று சட்டசபை கூடியது. ஆனால் நேற்று காங்கிரஸ் MLA கல் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து இன்று அவை கூடுகிறது. கர்நாடகத்தில் ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அரசு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ், சங்கர் திரும்ப பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.


இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது நம்பிக்கை வாக்கெடுப்பை நேற்று என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள பாஜக சேர்ந்த 105 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்திருந்தனர்.அதே நேரத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 20 பேர் சட்டசபைக்கு வரவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை நேற்றே நடத்த வேண்டும் என்று பாஜக முயன்றும் ஆனால் முடியாமல் போனது.

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கும், சபாநாயகர் காலதாமதம் செய்யக்கூடாது என்று கூறியும், கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து பாஜகவினர் புகார் கொடுத்தனர். இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று மாலை 6 மணிக்கு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமிக்கு, கவர்னர் கெடு விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமிக்கு, கவர்னர் கெடு விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் கவர்னர் எழுதியுள்ள கடிதத்தில் கூட்டணி கட்சிகளோடு ஆட்சியில் இருந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
அவர்கள் ராஜினாமா செய்திருப்பதற்கான கடிதங்களை சபாநாயகரிடம் சமர்ப்பித்து இருப்பதுபோல, என்னிடமும் கொடுத்துள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்திருப்பதை திரும்ப பெற்றுள்ளனர்.


அதுதொடர்பான கடிதங்களையும் என்னிடம் கொடுத்துள்ளனர். இந்த தருணத்தில் பெரும்பான்மையை நிரூபித்த காட்ட வேண்டியது உங்களது கடமையாகும் என கூறினார்.

அதனால் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்

60 மாவட்டங்களா! தமிழகத்தில்! அன்புமணி ராமதாஸ் MP கூறுவது என்ன?

0

நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூடியது. அதை அடுத்து சட்டப்பேரவையில் பல விவாதங்கள் பல கோரிக்கைகள் முன்வைக்க பட்டன. அதன் பிறகு சட்டப்பேரவையில் தமிழக முதமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் ஆட்சி நலன் கருதி மேலும் இரண்டு மாவட்டங்கள் உதய மாகிறது என்று அறிவித்தார்.

முதலமைச்சர் பேசியதாவது விதி எண் 110 விதி படி இரண்டு மாவட்டங்கள் உதய மாகிறது என அறிவித்தார். அவை நெல்லையிலிருந்து தென்காசி தனி மாவட்டமாகயும் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாகயும் உருவாக்கப்படும் என அறிவித்தார். இதற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த செய்தியை படிக்க : தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்கள் உதயமாகிறது! எந்த மாவட்டம் தெரியுமா?

இதை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தற்போதைய ராஜ சபா MP யும் ஆன திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் சட்டப்பேரவையில் இரண்டு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டதை வரவேற்றார்.

மேலும் அவர் பேசியதாவது மக்களின் எண்ணிக்கையும் அதன் பரப்பளவும் அதன் வளர்ச்சியும் பொறுத்து அப்பகுதியை முன்னேற்ற இது போல தனி மாவட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். தற்போது அந்த வகையில் தென்காசி, செங்கல்பட்டு மாவட்டமாக உதயமாக உள்ளது.இப்படி தனி தனியாக பிரிபதர்க்கு பதிலாக மக்கள் தொகை அடர்த்தி கணக்கில் கொண்டு அவர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உடனடியாக 60 மாவட்டங்களாக பிரிக்கப் படவேண்டும் என்று கூறினார்.

தமிழகத்தில் பெரிய மாவட்டங்களைப் பிரித்து மொத்தம் 60 மாவட்டங்களாக உருவாக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் உதயமாகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. பெரிய மாவட்டங்களைப் பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கரூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்துமே பரப்பளவிலும் மக்கள்தொகையிலும் பெரியவையாகவே உள்ளன.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.