Saturday, October 19, 2024
Home Blog Page 5001

காசநோயை கட்டுபடுத்த மத்திய அரசு முக்கிய திட்டம்!

காசநோயை கட்டுபடுத்த மத்திய அரசு முக்கிய திட்டம்!

காசநோய் மிகப்பெரிய உயிர் கொல்லி நோய் ஆகும். இது ஒரு பாக்டீரியா நோய் ஆகும். உலக மக்களில் பெரும்பாலானோர் இந்நோயால் பாதிக்க பட்டுள்ளன.

இதனால் இந்திய அரசாங்கம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது 2025 குள் காசநோய் இல்லா நாடாக உருவாக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

இதனால் 2025 க்குள் #EndTB காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய உத்திகளில் ஒன்று ‘மல்டிசெக்டரல் ஆக்சன்’ மேம்பட்ட ஒத்துழைப்புக்காக சுகாதார அமைச்சகம் மூன்று அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியான இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசநோய்க்கு வழிவகுக்கும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புதிய நபர் ஒவ்வொரு நொடியும் பாக்டீரியாவால் பாதிக்கப்படுகிறார். 5% முதல் 10% வரை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் காசநோயால் பாதிக்கப்படுவார்கள் அல்லது அவர்களின் வாழ்நாளில் தொற்றுநோயாகி விடுவார்கள்.

உலக சுகாதார அமைப்பு (WHO) புள்ளிவிவரங்களுடன் 2011 ஆம் ஆண்டிற்கான அதிக காசநோய் சுமை கொண்ட நாடு இந்தியா ஆகும், இது உலகளவில் 9.6 மில்லியன் வழக்குகளில் இந்தியாவுக்கு 2.2 மில்லியன் காசநோய் வழக்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை கனடாவுடன் ஒப்பிடுங்கள், அங்கு காசநோய் ஆண்டு சுமார் 1,600 புதிய வழக்குகள் உள்ளன.

இதனால் காசநோய் இல்லா நாட்டை உருவாக்குவோம். பான், புகையிலை, குட்கா, கஞ்சா, சிகரெட் போன்ற தீயபழக்கதிலிருந்து விடுபடுவோம்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

நேர்கொண்ட பார்வை வெற்றி அடைய புதிய வியூகம் அமைக்கும் தயாரிப்பாளர் தரப்பு!

0

நேர்கொண்ட பார்வை வெற்றி அடைய புதிய வியூகம் அமைக்கும் தயாரிப்பாளர் தரப்பு!

தமிழ் திரையுலகின் வசூல் மன்னர்கள் என்றால் அது ரஜினி, அஜித், விஜய், ஆகும். அவர்களின் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் வசூல் சாதனைகள் படைக்கும். படம் வெளிவரும் நாள் திருவிழா போல காணப்படும்.

அப்படி அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் அதிக வசூல் பெற்று ரூ 100 கோடி கிடப்பில் இணைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் அஜித்தின் நடிப்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது, நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து பரபரப்பான வெற்றியைப் பெற்ற பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது. இதில் அஜித் கருப்பு கோட் அணிந்து வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தமிழில் ரீமேக் படமாக உருவாகி உள்ளது.சதுரங்கவேட்டை’, ‘தீரன்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில், ஷ்ரத்தா ஶ்ரீநாத், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், அஜித்தின் முந்தைய படமான `விஸ்வாசம்’ நல்ல வசூலைக் குவித்ததால், இந்தத் திரைப்படத்தை நல்ல விலைக்கு விநியோகஸ்தர்களிடம் விற்கலாம் எனத் திட்டமிட்டது படக்குழு.

ஆனால், தயாரிப்பு தரப்பில் எதிர்பார்த்த விலைக்கு விநியோகஸ்தர்கள் வாங்குவதற்குத் தயக்கம் காட்டவே, தயாரிப்பு நிறுவனமே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. தமிழகம் முழுக்க ஒருவருக்கே படத்தை விற்காமல், ஏரியா வாரியாகப் பிரித்து விற்கலாம் என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அப்படி விற்பனை செய்யும் பட்சத்தில் `விஸ்வாசம்’ படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தைவிட, நல்ல விலைக்குப் படம் விற்பனையாகும் எனத் திட்டமிட்டுள்ளனர். அமிதாப் ரோலில் அஜித் நடிக்கும் இப்படத்துக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் ரசிகர்களுடன் சேர்ந்து படக்குழுவும் காத்திருக்கிறது.

விஸ்வாசம் போல் நேர்கொண்ட பார்வையும் 100 கோடி கிடப்பில் இணைய வாழ்த்துவோம்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, தோல்நோய் போன்றவற்றிக்கு எளிதில் கிடைக்கும் இந்த பழம் அருமருந்தாகும்!

0

அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பழம் வாழை பழம். எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. செவ்வாழை, கற்பூரவள்ளி வாழைப்பழம், நேந்திரம் வாழைப்பழம், ஏலக்கி வாழை பழம், இது போல் எண்ணற்ற வகை உண்டு. அவற்றில் உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. செவ்வாழை பழம் தவிர மற்ற அனைத்து வகை வாழை பழங்களும் அனைவரும் உண்ணுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல நோய்களை தீர்க்கவள்ளது. பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

இன்று அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது வாழை பழம் குறிப்பாக செவ்வாழை அமெரிக்க, கியூபா, செவ்வாழையின் தாயகம் எனக் கூறப்படுகிறது.

  1. பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும்.
  2. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.
  3. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
  4. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.
  5. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது.
  6. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய்:

இன்றைய காலங்களில் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு உணவிற்கு பின்னர் தொடர்ந்து ஒரு மாதம் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும்:

இன்றைய நாகரீக உலகில் உபயோகிக்கும் பல் துலக்கும் பேஸ்டுகளில் உப்பு இருக்க என்று தான் விளம்பரம் செய்கின்றனர். அப்படி இருக்க கால்சியம், புளோரைடு குறைபாட்டினால் பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து ஒரு மாதம் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்:

உடலில் தோல் வறட்சி வியர்வை படிவதால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும் இதற்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்:

சத்தற்ற உணவை சாப்பிட நரம்பு தளர்ச்சி ஏற்படும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும்.ஆண்மை பெறுகும்.

குழந்தை இன்மை:


திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ சந்திப்பார். அவர்களுக்கு செவ்வாழை மருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் படிக்க : இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

தொற்றுநோய் தடுக்கப்படும்:

நவீன உலகில் பலறும் பணத்தை தேடி அங்கும் இங்கும் அழைக்கின்றனர்.இதனால் பல இடங்களில் தொற்று நோய் கிருமிகள் தாக்குகின்றனர். தொற்று கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

மேலும் படிக்க : கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா!கேன்சருக்குமா!

இவ்வாறு பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட செவ்வாழை பழத்தை தவறாது சாப்பிட்டு பயனடைய வேண்டும்.

மேலும் படிக்க : பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

திமுக உதவியுடன் அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி மக்கள் அதிர்ச்சி!

0

திமுக உதவியுடன் அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி மக்கள் அதிர்ச்சி!

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் திமுக பிரமுகர் மூலம் அனுமதி சீட்டு இல்லாமல் சிறப்பு தரிசனத்தில் , அத்திவரதரை தரிசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து நம் அனைவராலும் அறியப்பட்ட விசயம் அத்திவரதர் திருக்கோயில். ஆம் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு எனும் இடத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அத்திவரதர் கோவில் உள்ளது.

இந்த அத்திவரதரை காண்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதாவது 40 வருடங்களுக்கு ஒரு முறைதான் காண இயலும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் அத்திவரதர் 40 வருடங்கள் அந்த கோவிலில் உள்ள குளத்தில் முழுவதுமாக மூழ்கிய நிலையில் இருக்கும். 40 வருடம் முடிந்த பிறகு 48 நாட்களுக்கு குளத்தை விட்டு எடுத்து மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். இந்த 48 நாட்கள் காஞ்சிபுரம் மாவட்டமே திருவிழா போல் காணப்படும். இதற்காக லட்சம் கணக்கில் மக்கள் கூட்டம் அத்திவரதரை காண அலைமோதும்

ஜூலை 1 ,2019 அன்று அத்திவரதறை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அத்திவரதரை காண பெரும் மக்கள் கூட்டங்களுடன் அலைமோதுகிறது. தரிசனம் செய்ய குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

இவ்வளவு சிறப்பு மிக்க அத்திவரதரை நமது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பெரும்பாலோனோர் தரிசித்தனர். இவற்றில் குறிப்பாக மூட நம்பிக்கைகளை எதிர்த்த பெரியார் கொள்கையை பின் பற்றுவதாக கூறி அரசியல் செய்யும் திமுக தலைவரின் ஸ்டாலினின் மனைவி துர்கா,பாஜக தலைவர் H. ராஜா,பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் தரிசனம் செய்தார்கள். இதற்கு முன்னதாக 1979 ஆம் ஆண்டு இது பொல் அத்திவரதர் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது அறிந்ததே. மீண்டு 2059 லில் தான் தரிசிக்க முடியும் என்பதை அறிந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அத்திவரதரை தரிசிக்க மக்கள் இவ்வளவு நேரம் காத்திருக்கும் இந்நிலையில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு விஐபி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு தரிசன டிக்கெட் இல்லாமல் எப்படி தரிசித்தார் என்பது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்திவரதரை காண வந்த பக்தர்கள் பெரும் கோபமடைந்தனர்.

இதை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது. வரிச்சியூர் செல்வத்திற்கு விஐபி தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தது எப்படி?,அவரை யார் கூட்டிக்கொண்டு வந்தது என்பதை சிசிடிவி கேமராவில் கண்டோம். மதுரையை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் திமுக பிரமுகர் ஒருவருடன் விஐபி தரிசனம் செய்தார் என்பது இதில் தெரிய வந்துள்ளது.

இதை பற்றி மேலும் விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மக்கள் கூட்டத்தில் கஷ்ட பட்டு தரிசிக்கும் பொழுது பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விஐபி தரிசனம் செய்தது பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு திமுக அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவரே உதவி செய்ததால் மக்கள் உச்ச கட்ட கோபத்தில் உள்ளனர்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்கள் உதயமாகிறது! எந்த மாவட்டம் தெரியுமா?

0

தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்கள்,

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட நிலையில் தற்போது மேலும் இரண்டு மாவட்டங்கள் அறிவிக்க படும் என அறிவித்தார்.

அதாவது செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் புதிய மாவட்டங்கள் ஆகும். என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்காசி நெல்லையில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், இரண்டு புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்கள் உதயமாகியுள்ளன.

மக்களின் எண்ணிக்கையும் அதன் பரப்பளவும் அதன் வளர்ச்சியும் பொறுத்து அப்பகுதியை முன்னேற்ற இது போல தனி மாவட்டங்கள் உருவாக்க படும். தற்போது அந்த வகையில் தென்காசி, செங்கல்பட்டு மாவட்டமாக உதயமாக உள்ளது.

எனில் பிரிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி சேர்த்து 35 மாவட்டங்கள் இருக்கப்பெரும். இதனால் செங்கல்பட்டு, தென்காசி சேர்ந்த மக்களுக்கு ரொம்ப நாள் கனவு நிறைவேறும்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது? திமுக எம்.பி ராசாவுக்கு அமித்ஷா கொடுத்த பதிலடி

0

தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது? திமுக எம்.பி ராசாவுக்கு அமித்ஷா கொடுத்த பதிலடி

தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதன் மூலமாக இந்தியாவில் நடைபெறவிருந்த பெரும் அசம்பாவிதங்களை தடுத்து வருகிறது.

இதுகுறித்த தகவல்கள் தேசிய ஊடகங்களில் விவாத பொருளாக மாறி வருகிறது. ஆனால் தமிழக ஊடகங்களோ இது போன்ற தேச பாதுகாப்பு குறித்த செய்தியை மக்களிடம் செல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை மட்டுமே காட்டி இதை மூடி மறைத்து வருவதாக பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் தான் மத்திய அரசு NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது. அது குறித்த விவாதத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, தற்போதைய நிலையில் NIA – விற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதற்கான நோக்கம் என்ன என்றும், இது ஒரு சமுதாய மக்களின் மீது தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என்றும் இந்த சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதனை முழுவதும் பொறுமையாக கவனித்து கொண்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா திமுக எம்.பி ராசாவிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சபைக்கும் பதிலளித்ததாவது.

இந்த மசோதா நாட்டின் நலன் தொடர்பானது. நாட்டில் வளர்ந்து வரும் தேச விரோத பயங்கரவாதிகளை கட்டுப்டுத்த தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரம் சீர்திருத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

நேற்று கூட தேசிய மாநாட்டு கட்சி நிர்வாகிகளில் ஒருவரான செய்யது தாக்கீர் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு நான் உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன். இது போன்ற பயங்கர வாத செயல்கள் வேரோடு களையப்பட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

பயங்கரவாதத்தில் எந்த பயங்கரவாதி எந்த மதம் என்பது முக்கியமல்ல. யாரையும் குறி வைத்தோ ,யாரையும் காயப்படுத்தவோ அரசுக்கு நோக்கமல்ல. இதற்கு அனைத்து எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். என்றார் அமித்ஷாவின் இந்த பதிலிற்கு பிறகு திமுக எம்.பி ராசா வாயை திறக்காமல் அமைதியாகிவிட்டார்.

மேலும் ராசாவின் இந்த தேச பாதுகாப்பிற்கு எதிரான கேள்விக்கு பொதுமக்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக தற்போது தீவிரவாதிகளால் இலங்கையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் எத்தனை குடும்பங்கள் அழிந்து போயுள்ளன என்பதையெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இதற்காக தமிழகத்தில் திட்டம் செயல்படுத்த போவதாக கூறப்படுகிறது, இந்த சூழலில் இதில் கூட மத அரசியலை திமுக செய்யவேண்டுமா என்றும், நாளை தமிழகத்தில் தீவிரவாத தாக்குதலால் யாராவது உயிர் இழந்தால் அந்த இழப்பிற்கு திமுக பொறுப்பு ஏற்குமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

மேலும் தேச பாதுகாப்பிற்காக தீவிரவாதிகளை ஒடுக்க அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது என்றும் மக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு தான் சாதியாலும்,மதத்தாலும் இந்திய மக்களை பிரித்து வைத்து அரசியல் செய்வார்களோ?

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

கர்நாடகா குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? இன்று வாக்கெடுப்பு!

0

கர்நாடகா குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? இன்று வாக்கெடுப்பு!

கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 16 MLA கள் பதவியை விட்டு விலகியதால் ஆளும் குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல் நிலவி வருகிறது. இதை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி குன்ஹா சபநயரக்கு தகுதி நீக்கம் பற்றி உத்தரவு இட முடியாது. என கூறினார் .

அதாவது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம், அரசுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கச் செய்ய சபாநாயகர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நேற்று காலை 10.30 மணிக்கு சபாநாயகருக்கு உத்தரவு இட முடியாது என கூறினார்.

அதனைத்தொடர்ந்து இன்று குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், இன்று காலை 11 மணி அளவில் சட்டசபையில் வாக்கெடுப்பு நடைபெறும் .இதனால் கர்நாடகாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் ஆளும் அரசின் பலம் 101ஆக குறையும். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சி கவிழும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பெங்களூருவில் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர் எடியூரப்பா சட்ட மன்ற உறுப்பினர் விவாதம் செய்தனர்.

இன்று காலை 11 மணி அளவில் கர்நாடக சட்டமன்றத்தில் ஆளும் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடைபெறும். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

நீங்கள் வாங்கிய ஆன்லைன் பொருள் தரமானதா? அப்படி சந்தேகம் என்றால் இதை படியுங்கள்!

0

நீங்கள் வாங்கிய ஆன்லைன் பொருள் தரமானதா? அப்படி சந்தேகம் என்றால் இதை படியுங்கள்!

இன்றைய உலகில் அனைவரும் பொருட்களை ஆன்லைனில் வாங்கி கொண்டு இருக்கிறோம். ஆன்லைனில் இல்லை என்ற நிலை வந்து விட்டது. அனைத்து பொருட்களும் கிடைக்கும். இன்றைய ஐடி ஊழியர்கள் மட்டும் அல்லாது அனைவரும் ஆன்லைன் பொருகளையே விரும்பி வாங்குகி்றனர். முன்னொரு காலத்தில் சந்தைக்கு சென்று பொருளின் தரத்தை ஆராய்ந்து பின்னரே பொருளை வாங்குவோம்.

ஆனால் இன்று பல ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் இருக்கும் ஒரு பொருளின் தரம் அறியாமல் வாங்குகிறோம். அப்பொருளின் தரம் உபகோகித்த பின்னரே தரம் அறிய படுகிறது. அது உண்மையானதா? போலியானதா? உண்மையெனில் மகிழ்ச்சி அடைகிறோம். போலி எனில் அதை நினைத்து வருந்துகிறோம்.

அப்படி இருக்கும் நிலையில் அதுக்கு ஏற்றார் போல் நாமும் நம்மை மாற்றி கொள்ள வேண்டும் அல்லவா? பொருளின் தரத்தை அறிய வேண்டும் அதற்கும் ஒரு சில அப்பிளிக்கேஷன் வசதி வந்து விட்டது.அதை பற்றி காண்போம்

இன்றைய காலங்களில் அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், போன்ற வலைதளங்கள் இருக்கிறது. இதன் பொருளின் தரத்தை இவ்வாறு தெரிந்து கொள்ளுவது.

அமேசானில் பொருட்களை வாங்கும்போது, நாம் பலவிதமான எண்ணங்களுக்கு ஆளாவோம். பலர் ஏமாறவும் செய்வார்கள். பலவிதமான பொருட்கள் ஒரேமாதிரி தெரியும். விலைகளும் ஒரேமாதிரி இருக்கும்.
எனவே, எந்தப் பொருள் சிறப்பான விலையையும், தகுதியும், தரமும், பயன்பாட்டையும் கொண்டிருக்கும் என்பதை மதிப்பிடுவது கடினம்.

எனவே, இந்த சிக்கலைத் தவிர்க்க, இரண்டு குறிப்பிட்ட அப்பிளிக்கேஷன் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதன் வாயிலாக, பொருளின் விலையில் தரமான பொருளை வாங்க இயலும்.

அவை, CamelCamelCamel.com என்ற தளம் பொருட்களின் சரியான விலையைக் கண்டறிய உதவுகிறது. ஒரு பொருளின் விலை விற்பனையைப் பொறுத்து மாறுபடும். எனவே, குறைந்த விலை பொருட்களை, குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கு இந்த தளம் பயன்படும்.

பொருளின் தரத்தை அறிய ஒரு தளம் உள்ளது.

அவை, Fakespot என்ற தளம் ஒரு பொருளின் தர ஆய்வைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. ஒரு பொருள் தள்ளுபடி விலையில் 2999 ரூபாய் மதிப்புள்ள பொருள் வெறும் 50%,60%,70%, ஏன் 90% வரை தள்ளுபடி செய்து வெறும் 499, 399 ரூபாய் என விற்கப்படுகின்றன. இதனால் நமக்கு சந்தேகம் எழும் ஏன் இவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டது என்று எனவே குழப்பத்தில் ஆலாவோம். பொருளை எப்படி மதிப்பிடுவது என்று எனவே நீங்கள் தள்ளுபடி விலையில் ஒரு பொருளை வாங்கும்போது இந்த தளம் மிகவும் முக்கியமாக பயன்படுகிறது.

எனவே இன்றைய நவீன உலகில் ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நம்மை காக்க இந்த இரண்டு தலங்கள் நம்மை காக்கும் இதை பயன் படுத்தி பயனாளர்கள் பொருளின் விலை மற்றும் தரம் அறிய பயன் படுத்தி கொள்ளவும்.

தேங்காய் சுடும் திருவிழா மூலம் ஆடி மாதத்தை வரவேற்கும் சேலம் பகுதி மக்கள்

0

தேங்காய் சுடும் திருவிழா மூலம் ஆடி மாதத்தை வரவேற்கும் சேலம் பகுதி மக்கள்

ஆடி மாதம் துவங்கியதையடுத்து இதை வரவேற்கும் வகையில், சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழாவின் மூலம் பொதுமக்கள் கோலாகலமாக இதை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் ஆகிய காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் ஆடி மாதம் முதல் நாளை, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் தேங்காய் சுடும் பண்டிகையாக கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

இதற்கு புராண கதையின் வரலாற்றை அடிப்படையாக கூறுவார்கள் அதாவது ஆடி மாதத்தில் துவங்கிய மகாபாரத போர் 18 நாட்கள் நடைபெற்று, ஆடி 18ம் தேதி முடிவுக்கு வந்தது. இதை நினைவு கூறும் வகையில், இப்பகுதி மக்கள் ஆடி 1ம் தேதியை தேங்காய் சுடும் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

அதாவது அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று, ஆடி18 அன்று முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளன்று, பாண்டவர் படையை சேர்ந்தவர்கள்,  விநாயகர் மற்றும்  அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்து தர்மம் ஜெயிக்க வேண்டுமென வேண்டிக்கொண்டார்களாம்.

அப்போது போர்க்களத்தில் பாத்திரம் கிடைக்குமா?! அல்லது காய்கள்தான் கிடைக்குமா?! அதனால் கிடைப்பதை வைத்து  தேங்கய்க்குள் அரிசி, வெல்லம், எள், ஏலக்காய் போன்ற பொருட்களை சேர்த்து சுட்டு படைச்சு, போரில் வென்றதால் அன்றிலிருந்து ஆடி 1 அன்று இந்த தேங்காய் சுடும் பூஜை உண்டானதாக செவி வழிச் செய்திகள் கூறப்படுகின்றன.

இதன்படி சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் வீடுகள் முன்பாக இனிப்பு பொருட்கள் அடங்கிய தேங்காயினை குச்சியில் சொருகி அதை தீயில் சுட்டு, பிள்ளையாருக்கு வைத்து பூஜை செய்த பின்னர் தங்களுடைய உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். 

தேங்காயை ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் சுட்டதற்கு பிறகு  அதை அருகில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்து வழிபட்டனர். அதன் பின்னர் அந்த தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து, அதை உடைத்து உள்ளே இருந்த இனிப்புடன் கலந்த தேங்காயை  உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். 
 
இவ்வாறு நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் இனிப்பு பொருட்களும் மிகவும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

ஆதரவளித்த கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் சூர்யா!

0

ஆதரவளித்த கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் சூர்யா!

கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் என்று கல்விக்கொள்கை சர்ச்சையில் நடிகர் சூர்யாவிற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். இதை அடுத்து இதற்கு நடிகர் சூர்யா அவர்கள் நன்றி தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை சென்னையில் சிவக்குமார் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், 20 வருடங்களாக நான் நடித்துக்கொண்டிருப்பதால் நான் பேசினால் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதால் சொல்கிறேன். எல்லோருடைய கோபம், அச்சம் என்னவென்றால் மீண்டும் மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம் சமமான, தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதில் செய்யப்படவில்லை என்பது.

சமமான, தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
நாங்கள் 10 வருடங்களாக மாணவர்களைப் பார்த்து வருகிறோம்.

10 வருடங்களாக 30% மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 30% +2 மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்? எல்லாத் தேர்வுகளையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு வரும். அதை எழுதினால் தான் எந்த டிகிரியாக இருந்தாலும் போகமுடியும்.

நீட் தேர்வு சமூகத்தின் சமநிலையை மாற்றுகிறது. தேர்வுப் பயிற்சி மையங்களின் ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி. எட்டாவதிலிருந்து தேர்வுகளை எழுத பயிற்சி மையங்கள் தேவைப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படிப் படிப்பான்? இவ்வளவு நுழைத்தேர்வுகள் இருந்தால் எங்குச் சென்று படிப்பார்கள்?

Suriya Thanks to Kamalhasan-News4 Tamil Online Tamil News Channel
Suriya Thanks to Kamalhasan-News4 Tamil Online Tamil News Channel

எல்லோரும் தயவு செய்து விழிப்புணர்வுடன் இருங்கள். கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்காகப் போராடும் சங்கங்கள் என அத்தனை பேரும் விழித்துக்கொள்ளவேண்டும் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் என்று கல்விக்கொள்கை சர்ச்சையில் நடிகர் சூர்யாவிற்கு அன்புமணி இராமதாசு, சீமானை தொடர்ந்து கமலும் ஆதரவு தெரிவித்தார்.

இதற்கு சூர்யா கூறியதாவது என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமலுக்கு நன்றி. என்னுடைய கருத்துக்கு எதிர்வினை கூறியவர்களுக் எதிர்ப்பு தெரிவித்து உங்களுடைய கட்சி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கண்டு பெருமை படுகிறேன் என்று நடிகர் சூர்யா கூறினார்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.