நடிகைக்கு மருத்துவ பரிசோதனை!! கருக்கலைப்பு விவகாரத்தில் சீமான் மீதான புகார் தொடர்பான நடவடிக்கை!! 

0
62
Medical examination for the actress!! Action related to the complaint against Seeman in the abortion issue!!
Medical examination for the actress!! Action related to the complaint against Seeman in the abortion issue!!

நடிகைக்கு மருத்துவ பரிசோதனை!! கருக்கலைப்பு விவகாரத்தில் சீமான் மீதான புகார் தொடர்பான நடவடிக்கை!! 

சீமான் மீது புகார் தெரிவித்த நடிகர் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக  என தகவல் வெளியானது.

இளைய தளபதி விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011- ஆம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஏராளமான கருத்துக்கள் மற்றும் புகார்கள், வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி சென்னையில் உள்ள ராமாபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நிலவையில் உள்ள வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும் படியும் புகார் கொடுத்தார்.

இந்த புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் சுமார்  6 மணி நேரம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தி பல்வேறு விவரங்களை பெற்றுள்ளதாக கூறப்பட்டது.

அதுமட்டும் இல்லாமல்  திருவள்ளுவர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில், நீதிபதி பவித்ரா முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகை விஜயலட்சுமி கடந்த வாரம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதுமட்டுமில்லாமல் வழக்கிற்கு தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் நீதிபதியிடம் விஜயலட்சுமி சமர்பித்ததாக தகவல் வெளியானது.

சீமானால் பலமுறை கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி புகார் தெரிவித்ததால் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்து அதன்படி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இன்று காலை விஜயலட்சுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவர்கள் அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு அது தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவர்களின் அறிக்கையின் அடிப்படையில் சீமான் மீதான புகாரில் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த சம்பவம் சூடு பிடித்து வருவதால் விஜயலட்சுமி தெரிவித்த பாலியல் புகாரில் போலீசார் அடுத்து மேற்கொள்ள உள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்து பலத்த எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.