மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்..!

0
154
#image_title

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்..!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். இந்த தேவையற்ற கழிவுகள் பெரும்பாலும் மலம் மூலம் தான் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் மலச்சிக்கல் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

காலையில் எழுந்த உடன் மலத்தை வெளியேற்றி விட வேண்டும். ஆனால் சிலர் மலத்தை கழிக்க சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு கழிக்காமல் அடக்கி வைத்து விடுவதால் அவை மலசிக்கலாக மாறி விடுகிறது. சிலருக்கு உடலில் நார்ச்சத்து குறைபாடு இருந்தால் இந்த பிரச்சனை ஏற்படும்.

ஜீரணக் கோளாறு, போதிய அளவு நீர் அருந்தாமை, அதிகளவு மைதா பொருட்களை உண்ணுவது போன்ற காரணங்களாலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.

மலச்சிக்கலை குணப்படுத்தும் இயற்கை வைத்தியம்:-

1)தினமும் காலையில் வெந்நீரில் சிறிது எலுமிச்சை சாறு, கல் உப்பு சேர்த்து அருந்தினால் அடைபட்டு கிடந்த மலம் வெளியேறும்.

2)நார்ச்சத்துக்கள் அடங்கிய கீரை, பழங்களை உண்பதால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.

3)வெந்நீரில் சிறிதளவு விளக்கெண்ணெய் கலந்து குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு சரியாகும்.

4)வெந்தயம், ஓமம், சோம்பு உள்ளிட்டவைகளை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி அருந்தி வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

5)தினமும் காலையில் எழுந்ததும் 1/2 லிட்டர் தண்ணீர் அருந்துவதால் மலம் உடனடியாக வெளியேறத் தொடங்கும்.