அசராத பெட்ரோல் டீசல் விலை!

அசராத பெட்ரோல் டீசல் விலை!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் நிர்ணயம் செய்யப்படுகின்றன. நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு கடுமையாக அமல் படுத்தப்பட்டது. இதன் காரணமாக, மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் … Read more

ஆப்கனில் ஜெயிலை கைப்பற்றி தாலிபன் செய்த செயல்! மேலும் 3 மாகானங்களை இழந்ததால் அரசு அதிர்ச்சி!

Taliban

ஆப்கானிஸ்தானில் அரச படைக்கும், ஆயுதம் தாங்கி போராடும் தாலிபன் படைக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக தாலிபன்களுக்கு எதிராக போரிட்டு வந்தனர். தற்போது அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட்டு வருகிறது. அதே போன்று நேட்டோ படைகளும் திரும்பப் பெறுவதால், அவைகள் போரில் பங்கேற்கவில்லை. இது தாலிபன்களுக்கு சாதகமாக மாறியதால், புது உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளை முதலில் கைப்பற்றினர். தொடர்ந்து அரசப் … Read more

அடுத்த ஒலிம்பிக் திருவிழா எங்கு தெரியுமா? இப்போதே தயாராகும் நாடு எது!

Olympic Flag Handover to France

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. எனினும், கொரோனா தொற்று குறைந்த்தால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் பெருந்தொற்று காலத்திலும் ஜப்பான் அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கிய போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதன் கண்கவர் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில், கண்கவர் வாண வேடிக்கைகளுடன், வண்ண வண்ண மின் விளக்குகளால் மிளரச் செய்து காண்போரை வியக்க வைத்தனர். இப்படியெல்லாம் படத்தில் … Read more

கடைசி நேரத்தில் போரில் சீனாவை பின்னுக்குத் தள்ளிய அமெரிக்கா! அதிர்ச்சியில் சீனர்கள்!

USA

உலக நாடுகளுக்கு இடையே போர்கள் என்றால், எல்லைப் பகுதிகளை விரிவுபடுத்துவதற்காகத் தான் பெரும்பாலும் இருக்கும். அப்படித்தான் இதுவரை நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உலகப்போர், உள்நாட்டுப் போர், பனிப்போர் என பல வழிகளில் அப்பாவி மக்களின் உயிர்களை பறிப்பதாகத்தான் போர்கள் இருந்து வருகின்றன. ஆனால், நூற்றாண்டுக்கும் மேலாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்  ஒலிம்பிக் போட்டியை போர் என்றே அழைக்க வேண்டும் அந்த அளவுக்கு நாடுகளுக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது. ஆனால், இந்த போரில் உயிர்கள் பறிக்கப்படுவதில்லை. … Read more

பள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை!

One day school the next day holiday! This is the next update of the Department of Education!

பள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை! கொரோனா தொற்றானது கடந்து ஓராண்டு காலம் ஆகியும் இன்றளவும் அதன் தாக்கம் குறியாமல் உள்ளது.முதல்,இரண்டாம் என ஆரம்பித்து முடிவில்லாமல் மூன்றாம் அலையை நோக்கி தொடர்ந்து செல்கிறது.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் அத்தொற்று பரவலை முழுவதுமாக சரி செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மேலும் அந்த தொற்று நமக்கு பரவாமல் இருக்க அந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏனென்றால் அத்தடுப்பூசியானது நமது உடலில் … Read more

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு மழை!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே இந்திய வீராங்கனை மீராபாய் சானு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதே போன்று, கடைசியாக நேற்று பங்கேற்ற வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையுடன் நாட்டை உயர்த்தினார். இதனால், பதக்கப்பட்டியலில் 68வது இடத்தில் இருந்த இந்தியா, 47வது இடத்திற்கு முன்னேறியது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்று இந்திய … Read more

ராகுல்காந்தி டிவிட்டர் கணக்கு முடக்கம்!

Rahul Gandhi

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, ஆளும்  பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும், கருத்து மோதல்களையும் ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக தற்போது பெகாசஸ் விவகாரத்தை அனைத்து எதிர்க்கட்சி பிரிதிநிதிகளுடன் பேசி, நாடாளுமன்றத்தில் திரம்பட எடுத்துச் சென்று, நாடாளுமன்றத்தையே முடக்கி வைத்துள்ளார். அதே நேரத்தில், டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தனது தலைமையில் … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு அரியானா அறிவித்த பரிசு என்ன தெரியுமா?

Neeraj Chopra

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி இந்தியராக ஈட்டி எறிதலில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரும், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் பாராட்டு மழையை பொழிந்து தள்ளினர். நூற்றாண்டு சாதனை என்றால் சும்மாவா? நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பதை கொண்டாடாமல் இருக்கலாமா? பல்வேறு தரப்பினர் … Read more

ஒலிம்பிக்கில் நூறாண்டு சாதனையை நிகழ்த்திய இந்திய வீரர்! தங்கம் வென்று அசத்தல்!

Neeraj Chopra

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று ஈட்டி எறிதலுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் கடந்த போட்டியில் முதல் சுற்றிலேயே 88 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை ஏறிந்ததால், நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவராவார். நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா, ஜெர்மணி, செக் குடியரசு, பாகிஸ்தான் வீரர் உட்பட 12 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் முதலிடத்தில் இருந்த நீரஜ் சோப்ரா முதலில் ஈட்டி எறிந்த போது 87.03 மீட்டர் தொலைவு … Read more

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையை இல்லையாம்! சொல்வது யார் தெரியுமா?

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையை இல்லையாம்! சொல்வது யார் தெரியுமா?

சென்னையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அவை அந்தந்த மின் நிலையங்களை பொறுத்து வெவ்வேறு தினங்களில் தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார். பராமரிப்பு பணி மின் நிறுத்தத்தை வைத்து தமிழகத்தில் மின் வெட்டு என்று தெரிவித்தால் அதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்த அவர், பராமரிப்பு பணிகள் முடிவுற்ற பின் உடனடியாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை இருப்பதாக ஒரு சிலர் புரளியைக் … Read more