4 வயது குழந்தை மரணம்!! முதல்வர் ஸ்டாலின் 3 லட்சம் நிதி உதவி!!
விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், 4 வயது சிறுமி லியா லட்சுமி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பள்ளி நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியத்தின் விளைவாக நடந்ததாக கூறப்படுகிறது. தகர ஷீட் சிதிலமடைந்து அதன் வழியாக சிறுமி கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெற்றோரிடையே கடும் கோபத்தைத் தூண்டி, மக்கள் கண்டனங்களையும் ஏற்படுத்தியது. … Read more