பாட்டி வைத்தியம்: இதய அடைப்பு தூக்கமின்மைக்கு இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது!!

0
107
#image_title

பாட்டி வைத்தியம்: இதய அடைப்பு தூக்கமின்மைக்கு இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது!!

உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் மூலிகை மருதம்பட்டை.இவை கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது.இதய அடைப்பை சரி செய்கிறது.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.

இந்த மருதம்பட்டையோடு சீரகத்தை ஊறவைத்து காய்ச்சி குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)மருதம்பட்டை
2)சீரகம்

மருதம்பட்டை அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.250 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு துண்டு மருதம்பட்டை மற்றும் 1 தேக்கரண்டி சீரகம் சேர்க்கவும்.பின்னர் அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

மறுநாள் காலையில் இந்த கிண்ணத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை உணவு எடுத்துக் கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருக வேண்டும்.