நிமிடத்தில் சளி தொல்லை நீங்க இந்த மூலிகை கஷாயத்தை தயார் செய்து பருகுங்கள்!!

0
45
#image_title

நிமிடத்தில் சளி தொல்லை நீங்க இந்த மூலிகை கஷாயத்தை தயார் செய்து பருகுங்கள்!!

தமிழக்த்தில் தற்பொழுது மழைக்காலம் என்பதினால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:-

*மூக்கு ஒழுகுதல்

*மூக்கடைப்பு

*மூச்சு விடுதலில் சிரமம்

*தொண்டை வலி

*தொண்டை புண்

*நீஞ்சு அனத்தம்

*தலைவலி

*வறட்டு இருமல்

*உடல் சோர்வு

நமக்கு சளி பிடித்து விட்டால் எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது. அதனோடு இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும். இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில் துளசி, மிளகு, தூதுவளை, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வைத்து கஷாயம் செய்து பருகினால் நம்மை ஆட்டி படைத்து வந்த சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக உடனடியாக வெளியேறி விடும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த மூலிகை கஷாயத்தை பருகலாம்.

சளி தொல்லை நீங்க கஷாயம் செய்யும் முறை…

தேவையான பொருட்கள்:-

*கரு மிளகு – 5

*இஞ்சி – சிறு துண்டு

*தூதுவளை – 10

*துளசி – 20 இலைகள்

*கற்பூரவல்லி – 1

*மஞ்சள் – சிட்டிகை அளவு

*தண்ணீர் – 3 டம்ளர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பின்னர் அதில் தூதுவளை, கற்பூரவல்லி, துளசி ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின்னர் கரு மிளகு விதையை ஒரு உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ளவும். இதை கொதிக்கும் கலவையில் சேர்க்கவும்.

அதேபோல் இஞ்சி சிறு துண்டு எடுத்து உரலில் போட்டு இடித்து பொடி செய்து கொள்ளவும். அதையும் கொதிக்கும் நீரில் போட்டுக் கொள்ளவும். பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் 3 டம்ளரில் இருந்து 1 1/2 டம்ளராக சுண்டி வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும். பிறகு அந்த கஷாயத்தை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருக வேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கு இந்த மூலிகை கஷாயம் சிறந்த தீர்வாக இருக்கும்.