மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி – செய்வது எப்படி?

0
43
#image_title

மூலநோயை குணமாக்கும் எள்ளுப்பொடி – செய்வது எப்படி?

எள்ளில் 20 விழுக்காடு புரதமும், 50விழுக்காடு எண்ணெ உள்ளது. மேலும், 16 விழுக்காடு மாவுச்சத்தும் அடங்கியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சியில் எள்ளு விதையில், சர்க்கரை நோயை குணப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதை சாப்பிட்டு வந்தால் குடல் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும். மேலும், குடலில் உள்ள கழிவுகளை நீக்கிவிடும். எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.

சரி… எள்ளு பொடி எப்படி செய்வது என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

எள் – 200 கிராம்

உளுத்தம்பருப்பு – 100 கிராம்

காய்ந்த மிளகாய் – 4

உப்பு – தேவையான அளவு

செய்முறை

எள்ளை தனியாக வெறும் வாணலியில் வறுக்க வேண்டும்.

உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயையும் தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும்.

பின்னர், இவை எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் எள்ளுப்பொடி ரெடி.

author avatar
Gayathri