ஒரே நாளில் மொத்த சிறுநீரக கற்களை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை பருகுங்கள்!! 100% அனுபவ உண்மை!

0
85
#image_title

ஒரே நாளில் மொத்த சிறுநீரக கற்களை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை பருகுங்கள்!! 100% அனுபவ உண்மை!

சிறுநீரகம் நம் உடலின் ஒரு முக்கிய உள் உறுப்பாகும். இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இதில் தேங்கி இருக்கும் சிறுநீரக கற்களால் அவை ஆரோக்கியத்தை இழப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம்.

சிறு நீரக கல் எவ்வாறு உருவாகிறது?

*சிறுநீரில் அதிகமான யூரிக் அமிலம் இருந்தால் உருவாகிறது.

*சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கும் சிட்ரேட் குறைவாக இருந்தால் உருவாகிறது.

*சிறுநீரில் அதிகமான கால்சியம் இருந்தால் உருவாகிறது.

*மரபு வழி

*உணவுப் பழக்கம்

*தண்ணீர் குறைவாகக் குடிப்பது

சிறுநீராக கல்லின் வகைகள்:-

1.யூரிக் அமிலக் கற்கள்

2.சல்பேட் கற்கள்

3.மும்மைக் கற்கள்

4.சிஸ்டீன் கற்கள்

சிறுநீரகக் கல் இருப்பதற்கான அறிகுறிகள்:-

*சிறுநீர் வெளியாகும் போது அதில் கல்லும் வெளியேறும்

*சிறுநீர் வெளியாகும் போது ரத்தமும் வெளியேறலாம்.

சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற வீட்டு வைத்தியம்:-

சிறுநீரக கற்களை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் கரைத்து வெளியேற்றி விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம் – 2

*கருப்பு மிளகு – 7

*எலுமிச்சம் பழச்சாறு – 1 தேக்கரண்டி

*தூயத் தேன் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி கொள்ளவும். அதில் பாதி எடுத்து ஒரு பவுலில் சாறு பிழிந்து கொள்ளவும். எலுமிச்சம் பழ விதைகளை நீக்கி விடுவது நல்லது. 1 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு இருந்தால் போதுமானது.

பின்னர் தூயத் தேன் 2 தேக்கரண்டி எடுத்து எலுமிச்சை சாற்றில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து சின்ன வெங்காயம் 1 அல்லது 2 எடுத்து தோல்களை நீக்கி தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் ஒரு உரலில் போட்டுக்கொள்ளவும். அதனோடு கருப்பு மிளகு 6 முதல் 7 வரை சேர்த்து இடித்து கொள்ளவும். இதையும் எலுமிச்சை சாறு + தேன் இருக்கும் பவுலில் சேர்க்கவும்.

அடுத்து 200 மில்லி அளவு சுத்தமான தண்ணீர் எடுத்து அந்த பவுலில் ஊற்றிக்கொள்ளவும்.
இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து பருகி வந்தோம் என்றால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும். இதனால் விரைவில் சிறுநீரகம் சுறு சுறுப்பாக வேலை செய்ய தொடங்கி விடும்.