நீண்ட நாட்களாக பாடாய் படுத்தி எடுக்கும் சளி தொல்லை நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!! 1 மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும்!!

0
40
#image_title

நீண்ட நாட்களாக பாடாய் படுத்தி எடுக்கும் சளி தொல்லை நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!! 1 மணி நேரத்தில் தீர்வு கிடைக்கும்!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக சளி,இருமல் பாதிப்பு இருக்கிறது.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப்படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது.

அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு இயற்கை வழிகளில் தீர்வு காண முயற்ச்சித்தால் உடனடி பலனை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கருந்துளசி – 8 இலைகள்

*வெற்றிலை – 1(காம்பு நீக்கியது)

*கற்பூரவள்ளி – 3 இலைகள்

*இஞ்சி – 1 (சிறு துண்டு)

*தேயிலை தூள் – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 1/2 தேக்கரண்டி

*தேன் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 8 கருந்துளசி இலைகள்,3 கற்பூரவள்ளி இலைகள்,1 வெற்றிலை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்.பின்னர் நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் 1 துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.பின்னர் அதில் 1 தேக்கரண்டி தேயிலை தூள் சேர்க்கவும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள கற்பூரவள்ளி,கருந்துளசி,வெற்றிலை உள்ளிட்ட இலைகளை சேர்த்துக் கொள்ளவும்.அதோடு துருவி வைத்துள்ள இஞ்சி சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

டீ நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.பின்னர் அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேவையான அளவு தூயத் தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.இவ்வாறு செய்து பருகினால் நாள்பட்ட சளி மற்றும் இருமல் பாதிப்பு உடனடியாக நீங்கி விடும்.