புறநகர் ரயில் சேவையில் மாற்றம் – பொதுமக்களின் கவனத்திற்கு!

புறநகர் ரயில் சேவையில் மாற்றம் - பொதுமக்களின் கவனத்திற்கு!

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில் தாம்பரம் யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் இன்று (08.09.2021) பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. தாம்பரம் மார்க்கத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறுவதால் சில ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, கும்மிடிப்பூண்டி- செங்கல்பட்டுக்கு காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. அதேபோல் சென்னை கடற்கரை -செங்கல்பட்டுக்கு காலை 9.32, 10.10, 10.56, முற்பகல் 11.50, நண்பகல் 12.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார … Read more

அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்கள்,ஆசிரியர்களுக்கான டிஏபி உயர்வு! தமிழக முதல்வர் அறிவிப்பு!

அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்கள்,ஆசிரியர்களுக்கான டிஏபி உயர்வு! தமிழக முதல்வர் அறிவிப்பு!

அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்கள்,ஆசிரியர்களுக்கான டிஏபி உயர்வு! தமிழக முதல்வர் அறிவிப்பு! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஆரம்பகால டிஏ உயர்வு உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அறிவித்தார்.அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தனது அரசு படிப்படியாக நிறைவேற்றும் என்றும் அவர் உறுதியளித்தார். டிஏ உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஓய்வூதியர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.மாநில சட்டசபையில் விதி 110ன் கீழ் ஒரு அறிக்கையை … Read more

மீனவர்களே ஜாக்கிரதை! வானிலை ஆய்வு மையம் விடுத்த மிகக் கடுமையான எச்சரிக்கை!

மீனவர்களே ஜாக்கிரதை! வானிலை ஆய்வு மையம் விடுத்த மிகக் கடுமையான எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை … Read more

பள்ளிகள் மூடப்படுமா : மாணவர்களுக்கு தொடரும் கொரோனா பாதிப்பு!

பள்ளிகள் மூடப்படுமா : மாணவர்களுக்கு தொடரும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கோயம்பத்தூர், புதுக்கோட்டை, கரூர், திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் காரண மாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 1-ஆம் தேதி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. இந்நிலையில், கோவை சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி … Read more

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் 

Salem West MLA Arul Ramadass

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவின் சார்பாக சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருள்.இவர் தான் சார்ந்த தொகுதி மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் முழுவதுமே பொதுமக்களிடம் அன்பாக பழக கூடியவர்.குறிப்பாக பதவியில் இல்லாத போதே மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் களத்திற்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுப்பவர் என தொகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் … Read more

இவர்களுக்கெல்லாம் ஊதியத்தில் 10% அதிகரிப்பு! அகவிலை 10% அதிகரிப்பு! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

10% pay increase for all of them! 10% increase in internal price! Good news from the Minister!

இவர்களுக்கெல்லாம் ஊதியத்தில் 10% அதிகரிப்பு! அகவிலை 10% அதிகரிப்பு! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! சட்டசபையில் இன்றும் அனைத்து கட்சி கூட்டம் காலை 10 மணி முதல் கேள்வி நேரத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றது. அப்போது சட்டசபையில் கைத்தறி அமைச்சர் … Read more

கொடநாட்டில் பறந்ததாக கூறப்பட்ட ட்ரோன் கேமரா! போலீசாருக்கு கிடைத்த திடீர் தகவல்!

Drone camera allegedly flown in Kodanad! Sudden information received by the police!

கொடநாட்டில் பறந்ததாக கூறப்பட்ட ட்ரோன் கேமரா! போலீசாருக்கு கிடைத்த திடீர் தகவல்! நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில், காவலாளி கோயம்புத்தூரில் கொலை செய்யப் பட்டதோடு, அந்த பங்களாவில் இருந்த பல பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சயான், மனோஜ் என  10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் முன்னாள் முதல்வர் இறந்த பிறகு நடந்தேறியது. இந்த வழக்கு விசாரணை பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு … Read more

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

It is only free in Tamil Nadu! Former Opposition Minister attacked

தமிழ்நாட்டில் அது மட்டும் தான் இலவசம்! எதிர்கட்சி முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு! தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மாதம் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து … Read more

தமிழ்நாட்டில் கடைகளில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்! அரசு அதிரடி முடிவு!

Workers must sit on the working time tamilnadu govt announced

தமிழ்நாட்டில் கடைகளில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்! அரசு அதிரடி முடிவு! தமிழ்நாட்டில் அனைத்துக் கடைகளிலும் நிறுவனங்களிலும் இனிமேல் அனைத்து ஊழியர்களுக்கும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது கட்டாயமாகிறது.இந்த சட்டதிருத்தம் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.இந்த முடிவை தமிழக அரசு தற்போது எடுத்துள்ளது.தமிழகத்தின் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன் இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நின்றுகொண்டே பணிபுரிவதால் அவர்களது உடல்நிலை … Read more

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் போட்ட காதலன்! தர்ம அடி கொடுத்த உறவுகள்! தீவிர சிகிச்சையில் அனுமதி!

The boyfriend who posted photos of his girlfriend on the internet! Relationships that gave Dharma feet! Admission to intensive care!

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் போட்ட காதலன்! தர்ம அடி கொடுத்த உறவுகள்! தீவிர சிகிச்சையில் அனுமதி! காதல் என்னவெல்லாம் செய்ய தோன்றுகிறது. காதலித்த இருவரில் பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ததன் காரணமாக, ஆத்திரமடைந்த காதலன் அவருடன் எடுத்த அந்தரங்கப் படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக அவரை வெளுத்து வாங்கிய உறவினர்கள். படுகாயம் அடைந்த காதலன் மருத்துவமனையில் அனுமதி. திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அடுத்த கருத்தும்பட்டியை சேர்ந்தவர் 22 வயது பெண். கொடைக்கானலில் … Read more