நீலகிரியில் நாளை முதல் சுற்றுலாத்தலங்கள் திறப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

நீலகிரியில் நாளை முதல் சுற்றுலாத்தலங்கள் திறப்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாத காலமாக சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. சுற்றுலா நடவடிக்கைகள் முழுவதுமாக முடக்கப்பட்டதால் சுற்றுலாவை நம்பியிருந்த கடை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் என பலரும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிகழ்ச்சிகளும் ரத்து … Read more

கடனை திருப்பி செலுத்தக் கோரி துன்புறுத்தும் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்:! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு!

கடனை திருப்பி செலுத்தக் கோரி துன்புறுத்தும் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்:! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு!

வங்கி கடன் பெற்றவர்களிடம் கடனை திருப்பி தரச்சொல்லி,அவர்களை துன்புறுத்தும் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்:! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு! வங்கிகளில் வாங்கிய கடனை வசூலிக்க கடன் பெற்றவர் வீட்டிற்கு குண்டர்களை அனுப்பி மிரட்டினாலோ அல்லது அவர்களை அவமானப் படுத்தினாலோ வங்கிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பொது முடக்கத்தால் நடுத்தர ஏழை மக்கள் பொருளாதார ரீதியாக,கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களில் கடன் … Read more

அரியர் மாணவர்கள் தேர்ச்சி கட்டாயமா? இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி விளக்கம்

அரியர் மாணவர்கள் தேர்ச்சி கட்டாயமா? இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி விளக்கம்

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்த விவகாரம் தொடர்பாக ஏஐசிடி இடமிருந்து எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை என மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிர்ணையிக்கப்படாத கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன.   இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற … Read more

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை:! லாக்டவுன் தளர்வுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா?

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை:! லாக்டவுன் தளர்வுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா?

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை:! லாக்டவுன் தளர்வுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா? தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை எட்டு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம்கட்ட ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில்,செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை எட்டாம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு எட்டாம் கட்ட ஊரடங்கில் தமிழக முதல்வரால்,பொது போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டு தளங்கள் திறப்பு,மால்கள் திறப்பு,போன்ற பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

இணையவழி படிப்பு – செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை ஐஐடி அறிவிப்பு!!

இணையவழி படிப்பு - செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை ஐஐடி அறிவிப்பு!!

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள இணையவழி பி.எஸ்சி. பட்டப்படிப்புக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள ஆன்லைன் புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் இளநிலை இணையவழிப் படிப்பை 2020-2021ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் படிப்பதற்கு ஜேஇஇ என்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இணையவழி இளநிலைப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை. இந்த இணையவழிப் படிப்பு அடிப்படைப் … Read more

அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டு திட்டம் மறுக்கப்படுவது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிக்கை

அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டு திட்டம் மறுக்கப்படுவது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிக்கை

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சிகிச்சைக்கான கட்டணங்களை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தச் சூழலில் கட்டாயமாக வழங்க வேண்டும்.   மேலும், அதை வழங்க மறுக்கும் நிறுவனங்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு முக.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக்கான கட்டணங்களை ஏற்க மறுப்பதாக வரும் செய்திகள் மிகுந்த … Read more

சென்னையில் சில முக்கிய இடங்களில் இன்று மின்தடை!

சென்னையில் சில முக்கிய இடங்களில் இன்று மின்தடை!

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை நகரின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள், திருவாய்கண்டிகை பகுதி: திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர் கண்டிகை, கன்னக்கோட்டை, போலனூர், பெரியபுலியூர். திருமுல்லைவாயில் பகுதி: வள்ளிவேலன் நகர், ஜெயலட்சமி நகர், பொத்தூர் கிராமம், கன்னடபாளையம், உப்பரபாளையம். சைதாப்பேட்டை பகுதி:    வேளச்சேரி ரோடு, வெங்கடபுரம். அடையார் பகுதி: சாஸ்திரி நகர் முதல் அவென்யு, சாஸ்திரி நகர் … Read more

தமிழகத்தில் புதிதாக 5776 பேருக்கு கொரோனா; 89 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் புதிதாக 5776 பேருக்கு கொரோனா; 89 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 89 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,925 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,930 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

ஆன்லைனில் கண் தானத்திற்க்கு பதிவு செய்யலாம்! முதல்வர் எடப்பாடி அதிரடி!

ஆன்லைனில் கண் தானத்திற்க்கு பதிவு செய்யலாம்! முதல்வர் எடப்பாடி அதிரடி!

ஆன்லைனில் கண் தானத்திற்க்கு பதிவு செய்யலாம்! முதல்வர் எடப்பாடி அதிரடி! தேசிய கண்தான தினம் நாளை அனுசரிக்க உள்ள நிலையில் தனது கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண் தான படிவத்தில் கையெழுத்திட்டார். கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் தனது கண்களை தானம் செய்துள்ளதாகவும், இதேபோல் பொதுமக்கள் கண் தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரைக்கும் இரண்டு வாரங்கள் கண் … Read more

குடும்ப பிரச்சினைக் காரணமாக தாயும் சேயும் எடுத்த விபரீத முடிவு!

குடும்ப பிரச்சினைக் காரணமாக தாயும் சேயும் எடுத்த விபரீத முடிவு!

குடும்ப பிரச்சினைக் காரணமாக தாயும் சேயும் எடுத்த விபரீத முடிவு! விழுப்புரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக,தாயும் சேயும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆனந்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கன்னியப்பன் புஷ்பா தம்பதி.இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.கன்னியப்பன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்,கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று அக்கம் பக்கத்தினரால் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கன்னியப்பன் மது அருந்துவிட்டு வீட்டிற்கு சென்று புஷ்பாவிடம் … Read more