#breaking news: முக்கிய அறிவிப்பு 30 மணிநேரம் தளர்வுகள் இன்றி முழுஊரடங்கு? மீறுவோருக்கு கடுமையான தண்டனை!

#breaking news: முக்கிய அறிவிப்பு 30 மணிநேரம் தளர்வுகள் இன்றி முழுஊரடங்கு? மீறுவோருக்கு கடுமையான தண்டனை!

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமலாகிறது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியவாறு: சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை 6 மணி வரை எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.இதன்படி நாளை,பால் வினியோகம்,மெடிக்கல் … Read more

தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்கிற எண்ணத்தை விட்டு விடுங்கள்:? ரஜினிகாந்தை சீண்டிப் பார்க்கும் மீராமிதுன்?

தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்கிற எண்ணத்தை விட்டு விடுங்கள்:? ரஜினிகாந்தை சீண்டிப் பார்க்கும் மீராமிதுன்?

சமீபகாலமாக மீராமிதுன் சர்ச்சைக்குரிய பல காரியங்களை செய்துவருகின்றார்.குறிப்பாக சினிமா துறையில் நல்ல பிரபலம் அடைந்த நடிகர்களையே குறிவைத்து வம்புக்கு இழுத்து வருகின்றார். குறிப்பாக சொல்லப்போனால் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரின் குடும்பங்களையும் வம்புக்கு இழுத்து, அவர்களை இழிவாக பேசி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் மீரா மிதுன். இதனையடுத்து தற்போது ரஜினிகாந்தை வம்புக்கு இழுத்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி 45 ஆண்டுகள் ஆகியுள்ளதை அவருடைய ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். … Read more

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 127 பேர் பலி.. மேலும் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 127 பேர் பலி.. மேலும் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,860 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 127 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5, 641 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இன்று மட்டும் 5,236 … Read more

திமுகவில் இணைந்தார் ! அதிமுக வின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் !

திமுகவில் இணைந்தார் ! அதிமுக வின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் !

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய வி.எஸ்.விஜய் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். வேலூர் மாவட்டத்தை சார்ந்த இவர் 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார் அப்போது திடீரென அமைசசர் பதவி பறிக்கப்பட்டது மேலும் வேலூர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது இதன் பின் எந்தவொரு பதவியும் வகிக்காமல் இருந்த இவருக்கு ஜெயலலிதா இறப்பிற்கு பின் அதிமுக வின் மருத்துவ அணியின் … Read more

அதிமுக கட்சித் தலைமை குறித்து இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை!

அதிமுக கட்சித் தலைமை குறித்து இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை!

சமீப நாட்களாக அதிமுக கட்சியில், வரும் தேர்தலில் தலைமைப் பொறுப்புக்கும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ், ஓபிஎஸ் யாரை நியமிப்பது போன்ற கருத்துக்கள் வியூகங்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், இது குறித்து தற்போது அதிமுக தலைமைப் பொறுப்புகள் பற்றி இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதல் இல்லாமல் தலைமைப் பொறுப்பினை அறிவிக்க கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர். இதில், “நாம் அனைவரும் … Read more

வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள்: சென்னை மாநகராட்சி!

வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள்: சென்னை மாநகராட்சி!

சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. தினமும் 3 முறை கிருமிநாசினி தெளித்து வழிகாட்டு தலங்களை சுத்தப்படுத்த வேண்டும். வழிபாட்டு தலங்கள் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரம் பிற்றிய விவரங்களை பக்தர்கள் கண்களில் படுமாறு நுழைவாயிலில் வைக்க வேண்டும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு எதை சாப்பிட வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்!

பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு எதை சாப்பிட வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்!

பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு எதை சாப்பிட வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்! ராமநாதபுரம் மாவட்டத்தில் எலி மருந்தை பல் துலக்கும் பேஸ்ட் என நினைத்து 5 சிறுமிகள் பல் துலக்கி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநாழியை அடுத்து கட்டாலங்குளம் கிராமத்தை சார்ந்தவர் செல்லத்துரை. இவரது மகள்கள் ஆர்த்தி மற்றும் கீர்த்தி. இதே பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மகள் சுபிக்ஷா. உடையப்பன் என்பவரின் மகள் முத்துபாண்டீஸ்வரி , ராமதாஸ் என்பவரின் … Read more

ஒரே நாளில் ரூ.248 கோடி வசூல்!! தமிழகத்தில் அமோகமான விற்பனை!

ஒரே நாளில் ரூ.248 கோடி வசூல்!! தமிழகத்தில் அமோகமான விற்பனை!

தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இன்று சுதந்திர தினம் மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் 2 நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் தேவையான மதுப்பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் நேற்று டாஸ்மாக் கடைகளின் முன் குவிந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் மட்டும் மதுபான விற்பனை அதிகரித்துள்ளது. இரண்டு நாள் விடுமுறை என்பதால் ரூ.250 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் … Read more

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர் ! அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்படுமா ?

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர் ! அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்படுமா ?

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சார்பாக யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என ஆலோசனை நடத்தி வருகின்றது. திமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்ற நிலையில் அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது காரணம் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறி வந்தனர் அதே நேரம் செல்லூர் ராஜு, … Read more

3 பேர்க்கு கல்பனா சாவ்லா விருது ! தமிழக அரசை வலியுறுத்தியவன் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! மரு.ராமதாஸ் !

3 பேர்க்கு கல்பனா சாவ்லா விருது ! தமிழக அரசை வலியுறுத்தியவன் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! மரு.ராமதாஸ் !

வீர தீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது பெற்ற துணிச்சல் மங்கையர் மூவருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துகள் தெரிவித்தார். இன்று அவர் வெளியுட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாளில் வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருது இந்த ஆண்டு அதைப் பார்த்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியவன் என்ற வகையில் நான் … Read more