OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்த விவகாரம்:? இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு 2 வார கெடு?

OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்த விவகாரம்:? இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு 2 வார கெடு?

மருத்துவ படிப்புக்காக தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீடு அளிக்க கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரம குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசின் உயர் கல்வித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு முடிவெடுக்கவும், அடுத்த கல்வியாண்டிலிருந்து 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கினை … Read more

இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! அனைவருக்கும் இ-பாஸ்! தமிழக அரசு அதிரடி!

இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! அனைவருக்கும் இ-பாஸ்! தமிழக அரசு அதிரடி!

தவிர்க்க முடியாத பணிகள் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.மேலும் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றில் தொலைபேசி எண்களை இணைத்தால் இ-பாஸ் நிச்சயமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.தமிழகத்தில் இ-பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களை பாதுகாக்கவும், சிகிச்சை அளித்தும், நோய் தொற்று பரவாமல் கண்காணித்தும் , நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், பொது மக்களின் ஒத்துழைப்பு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு … Read more

குறைந்தபட்ச மின்கட்டணம் தான் வசூலிக்க வேண்டும்!! மின்சார வாரியத்தின் உத்தரவு ரத்து..

குறைந்தபட்ச மின்கட்டணம் தான் வசூலிக்க வேண்டும்!! மின்சார வாரியத்தின் உத்தரவு ரத்து..

கொரோனா பாதிப்பின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பல இடங்களில் இதே சூழல் தான் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கிடையே மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஊரடங்கு காலத்திலும் 90% மின்கட்டணம் செலுத்த வேண்டும் என தொழிற்சாலைகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. … Read more

“2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அதிமுகவின் இலக்கு”:! ஓ.பி.எஸ் அதிமுக உறுப்பினர்களுக்கு அறிவுரை?

"2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அதிமுகவின் இலக்கு":! ஓ.பி.எஸ் அதிமுக உறுப்பினர்களுக்கு அறிவுரை?

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்க்கு அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். அடுத்த முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் கூடி தேர்வு செய்வார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜ் கூறுகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்’ என்பது போல் பதிவிட்டார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல என்று … Read more

தமிழகத்தில் இன்று (14.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

தமிழகத்தில் இன்று (14.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (14.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பங்குச் சந்தையின் விற்பனை கேட்ப ஏற்ற இறக்கத்துடன் அமைகிறது. தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி இன்று (14.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 31ஆகவும் விற்கப்படுகிறது. கோவையில் இன்று லிட்டருக்கு பெட்ரோலின் விலை ரூ.84.08ஆகவும், டீசலின் விலை ரூ.79.31 … Read more

தேமுதிக-வின் அடுத்த கூட்டணி யார்? திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தேமுதிக-வின் அடுத்த கூட்டணி யார்? திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றது.இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளரும்,விஜயகாந்த் மனைவியுமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் தமது கட்சி கூட்டணி அமைப்பது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவை பொதுத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தயாராகி வரும் நிலையில்,தேமுதிக, சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளி … Read more

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறாது? தமிழக அரசு உத்தரவு!

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறாது? தமிழக அரசு உத்தரவு!

ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம்,போன்ற நாட்களில் கிராம ஊராட்சிகளில்,கிராமசபை நடைபெறும்.அந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு,திட்ட பணிகள், மற்றும் மக்களின் கோரிக்கைகள்,போன்றவை கலந்தாலோசித்து ஒப்புதல் பெறப்படும். கொரோனாத் தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பின்பற்றப்படுகின்றது.சமூக இடைவெளி பின்பற்றுவதன் காரணமாக,சுதந்திர தினத்தன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் யாரும் கூட்டம் கூட கூடாது என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது பொது கிராமசபை கூட்டம் நடத்தினால் அந்த … Read more

தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம்.. அமைச்சர் தகவல்!

தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம்.. அமைச்சர் தகவல்!

கடந்த 5 ஆண்டுகளாக உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற உடல் உறுப்பு தான தின நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்று ‘டிரான்ஸ்டான்’ ஆண்டு அறிக்கையை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப், ‘டிரான்ஸ்டான்’ உறுப்பினர் செயலாளர் டாக்டர் … Read more

இந்த டிகிரி படித்தால் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை பெறலாம்!

இந்த டிகிரி படித்தால் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை பெறலாம்!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிவடைகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆண்டுதோறும் பட்டப்படிப்புக்கான எம். ஏ தமிழ், எம்.ஃபில் தமிழ், ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் (5yr. Integ. P.G Tamil) ஆகிய பட்டப் படிப்புகளுக்கான உப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்த 2020-2021ஆம் வருட கல்வியாண்டில் இந்த பாடப்பிரிவுகளுக்கான … Read more

ஆசிரியர்களுக்கு குற்றவியல் பின்னணி உள்ளதா என ஆய்வு செய்ய மத்திய மாநில அரசு உத்தரவு?

ஆசிரியர்களுக்கு குற்றவியல் பின்னணி உள்ளதா என ஆய்வு செய்ய மத்திய மாநில அரசு உத்தரவு?

நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுடைய ஆசிரியர்களுக்கு குற்றவியல் பின்னணி உள்ளதா? என ஆய்வு செய்ய தமிழக அரசு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது. அந்நாளில்,ஆசிரியர்கள் கற்பித்தல் மட்டுமின்றி, மாணவர்கள் நலனுக்காக மற்றும் பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு,இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களை தேர்வு செய்து மத்திய மாநில அரசு சார்பில் நல்லாசிரியர் விருது மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவற்றை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் … Read more