காவிரி ஆற்றில் நீந்தி வந்த ராட்சத மீன்!

காவிரி ஆற்றில் நீந்தி வந்த ராட்சத மீன்!

காவிரி ஆற்றில் நீந்தி வந்த ராட்சத மீன்! காவிரி டெல்டா பகுதிகளில் அதிகமான மழை பொழிந்து வருகிறது. அதனால் காவிரி அணை தேக்கங்களில் நீர் நிரம்பி வந்த நிலையில் தமிழக டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.அதனால் அங்கிருந்த ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து தருமபுரி மற்றும் சேலம் பகுதிகளில் 40,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக தர்மபுரியில் காவிரி … Read more

“வழக்கு வந்தால் தலைமறைவாகிவிடுவார்” புகழ் எஸ்விசேகர் மீது வழக்கு!

"வழக்கு வந்தால் தலைமறைவாகிவிடுவார்" புகழ் எஸ்விசேகர் மீது வழக்கு!

கடந்த செவ்வாயன்று, தமிழ்நாட்டில் “வெற்றிவேல், வீரவேல்” என மாநிலம் முழுவதும் உள்ள பிஜேபி கட்சியினர் முருகனை வணங்குவதாக குவிந்து கொண்டிருந்தனர். ​​அதன் உறுப்பினர்களில் ஒருவரான எஸ்விசேகர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூப் சேனல் மூலம் ஆத்திரமூட்டும் உரைகளை நிகழ்த்துவதன் மூலம் வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முயன்றதாக நடிகர், அரசியல்வாதி எஸ் வீ சேகர் மீது போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் போலீஸ் புகார் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் சி.ராஜரத்தினம் என்பவரால் பதிவு செய்யப்பட்டது. “நடிகராக மாறிய … Read more

தமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 119 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,278 … Read more

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி?

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி?

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவர்.இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து ரூபாய் 3 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார்.இந்தக் கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ஏழு லட்சம் வரை கொடுத்து விட்டாராம். இருந்தபோதும் ஜோசப் கணேசனின் … Read more

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை!

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை!

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை! ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே கோவிலின் முன் யாருக்கும் தெரியாத ஒரு மாதமே ஆன குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது. வாலாஜாபேட்டை அருகே வன்னிவேடு கிராமத்தில் உள்ள அவர் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது.அதனை பார்த்த மக்கள் உடனடியாக அழுது கொண்டிருந்த ஆண் குழந்தையை  மீட்டு வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த ஆண் குழந்தைக்கு ஒரு … Read more

நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தங்கத்தின் விலை!

நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தங்கத்தின் விலை!

கொரோனா தாக்கத்தால் மக்கள் எதுவுமின்றி அவதிக்குள்ளாகிய நிலையில் தங்கம் விலை மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.அதிகபட்சமாக தங்கத்தின் விலை ரூபாய் 43 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்வுக்குவரும் நிலையில் தற்போது தொழிற்சாலைகள்,பெரும்நிறுவனங்கள் தங்களது தொழில்களை தொடங்கியுள்ளன.இதுமட்டுமின்றி தற்போது தங்கசுரங்கத்திலும் வேலை படிப்படியாக தொடங்கியுள்ளது.இதன் காரணமாக,வேகமாக உயர்ந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றது.அதன் தொடர்ச்சியாக நேற்று தங்கத்தின் விலை ரூபாய். 984 குறைந்து விற்கப்பட்டது. தற்பொழுது இன்று ஒரே நாளில் சவரன் ரூபாய்.1832 … Read more

மூணாறு போன்று கொடைக்கானலிலும் நிலச்சரிவா?

மூணாறு போன்று கொடைக்கானலிலும் நிலச்சரிவா?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வணிக நோக்கத்தால் பல விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு கான்கிரீட் கூரையாக மாற்றமடைந்துள்ளன.மேலும் மக்கள் தொகை அதிகரித்ததால் தகுதியில்லாத இடங்களில் கூட வீடு கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க தண்ணீருக்காக மலையின் மீது போர்வெல் போடப்படுகின்றது. இதனால் பாறைகள் நகர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவிக்குமார் கூறுகையில், கொடைக்கானலில் கீழ்க்கண்ட பகுதிகளெல்லாம் கார்மேல்புரம், தந்திமேடு, … Read more

வெறிநாய் கடியால் 8 பேர் படுகாயம் : மேல் சிகிச்சைக்கு வழி இன்றி மக்கள் அவதி

வெறிநாய் கடியால் 8 பேர் படுகாயம் : மேல் சிகிச்சைக்கு வழி இன்றி மக்கள் அவதி

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் , 40 க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றி கொண்டிருக்கின்றன. வெறி நாய் தாக்குதலில் பலர் காயப்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுவரை 15க்கும் மேற்பட்டோர் இந்நாயின் தாக்கத்தில் ஈடுபட்டு அவசர சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம், அப்பகுதியை சேர்ந்த தவமணி, 55, அமிர்தம்72,செல்லம் 52,அமுதா 38, துளசி 57, மூக்கன் 50 உள்ளிட்ட எட்டு பேரை நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டனர். அவர்களை அப்பகுதியில் … Read more

3803 அரசு வேலை காலி பணியிடங்கள்:? ஆகஸ்ட் 18 விண்ணப்பிக்க கடைசி தேதி!

3803 அரசு வேலை காலி பணியிடங்கள்:? ஆகஸ்ட் 18 விண்ணப்பிக்க கடைசி தேதி!

All India institute of medical science (AIIMS)அதிகாரப்பூர்வமான இணைய தள முகவரியில் Nursing officer post காலி பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுங்கள்.இந்த பணியிடம் இந்திய அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலமாக வருகின்ற ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முக்கியமான பணி விபரங்கள்: நிறுவனம் : All India Institute of Medical Sciences (AIIMS) பணியின் பெயர் : Nursing … Read more

முழு ஊரடங்கில் கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம் சேமிப்பு

முழு ஊரடங்கில் கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம் சேமிப்பு

தமிழகத்தில் தினமும் சராசரியாக 30யூனிட்டில் மின் நுகர்வு வேண்டும்.கடந்த வருடம்மார்த்தாண்டம் டிவி தினசரி மின் நுகர்வு 36.99கோடியாக அதிகரித்தது. இதுவே உள்ள அளவாக தற்போது வரை இருந்தது. தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட செயல்படத் தொடங்கினார் தற்போது மின்நுகர்வு 29கோடி முத்தம் என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், ஜூலை ஆகஸ்ட் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஞாயிறன்று கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த … Read more