அரசியலில் ரவுடிகள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்:! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை!

அரசியலில் ரவுடிகள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்:! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை!

சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து அவரது மனைவி ஜமுனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு இன்று விசாரித்து. அவர்கள் அரசியல் பின்புலத்துடன் ரவுடிகள் பலர் புதுச்சேரியில் உலா வருவதாக தெரிவித்தனர். மேலும் ரவுடிகள் அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது நாட்டிற்கே துரதிருஷ்டவசமானது என நீதிபதிகள் … Read more

“Son of MLA” காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்:! கலாய்த்துதள்ளும் நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம்!

"Son of MLA" காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்:! கலாய்த்துதள்ளும் நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம்!

பொதுவாகவே அரசியல்வாதிகளும் பிரபலங்களும் சமூகத்தில் தனியாகத்தான் தெரிவர்.அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கவனிப்பே தனியாகத்தான் இருக்கும். இந்நிலையில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு காரில் பின்புறக் கண்ணாடியில் ஒருவர் சன் ஆப் எம்.எல்.ஏ (son of MLA) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் காரின் புகைப்படம் தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் புகைப்படத்திற்கு மேல் இதுதான் இதுதான் நமது கலாச்சாரம் என்று … Read more

தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே குறைந்துவருகிறது. கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்தும் முடங்கிப் போய்க் கிடந்த நிலையில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக குறைந்து வருகிறது. என்று கிராமிற்கு 28 ரூபாய் குறைந்தும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 224 … Read more

“சித்த, யுனானி ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு” எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:? தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி?

"சித்த, யுனானி ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு" எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:? தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி?

ஆரம்ப கட்டத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது அவர் முறையாக சித்த மருத்துவம் பயிலவில்லை இதுபோன்று பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்க்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஜூலை 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை … Read more

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு தடை?

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு தடை?

தமிழகத்தை பொருத்தவரையில் வருடம் வருடம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும்.விநாயகர் சதுர்த்தி என்றாலே ஒரு வாரத்திற்க்கு முன்பிலிருந்தே,விநாயகர் சிலையை வாங்க ஆரம்பித்து விடுவர்.மேலும் விநாயகர் சதுர்த்தியிலிருந்து,3,5,7நாட்கள் என பூஜை செய்து பின்பு பவானி ஆறு,காவிரி ஆறு,போன்ற சிறப்புமிக்க நீர்நிலைகளில் கரைத்துவிட்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வரும் நிலையில், கொரோனா பரவுதலை கருத்தில்கொண்டு தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. … Read more

கொடுத்த வாக்குறுதியை மீறி மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss

காவிரி டெல்டாவில் எரிவாயு குழாய்ப்பாதை அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. காவிரி பாசனப்பகுதியில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் உழவர்களின் எதிர்ப்பையும் மீறி மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. உழவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் விவசாயத்தை அழிக்கும் நோக்குடன் கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்ப்பாதை … Read more

மீண்டும் உயரத் தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

மீண்டும் உயரத் தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

பொருளாதார பாதிப்பால் தங்கம் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூபாய். 37,616க்கு விற்க்கப்பட்டது. கடந்த 18 நாட்களில் தங்கத்தின் விலை குறையாமல் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வந்தது.கடந்த 7ம் தேதி தங்கத்தின் விலை ரூபாய் 43 ஆயிரத்திற்கு மேல் சென்றது. ஆனால் கடந்த நான்கு நாட்களில் தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வந்து இருந்தது.நேற்று நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய்.40,104க்கும்,ஒரு கிராம் ஆபரணத் … Read more

Voter ID card வீட்டிலிருந்தபடியே சரி செய்வது எப்படி?

Voter ID card வீட்டிலிருந்தபடியே சரி செய்வது எப்படி?

ஆதார் கார்டு, பான் கார்டு போன்று மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக (Voter ID card) ஐடி கார்டு உள்ளது.இதில் சில தவறுகள் ஏற்பட்டிருந்தால் அதனை வீட்டில் இருந்தே மாற்ற இந்த கொரோனா ஊரடங்கு உதவுகிறது.யார் வேண்டுமானாலும் பெயர் முகவரி அல்லது புகைப்படத்தை வீட்டிலிருந்தே சரி செய்து கொள்ள தற்பொழுது இணையதள வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்கு மட்டுமில்லாமல் நம் பொது பயன்பாட்டிற்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, அதனை சரிசெய்து கொள்வது மிக அவசியமாக … Read more

இன்றைய (13.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்றைய (13.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (13.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பங்குச் சந்தையின் விற்பனை கேட்ப ஏற்ற இறக்கத்துடன் அமையும். தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி இன்று (13.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 91ஆகவும் விற்கப்படுகிறது. மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.38ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ … Read more

BSNL ஊழியர்களை தேசத்துரோகி என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ள பாஜக எம்பிக்கு தொழிற் சங்கம் கடும் கண்டனம்?

BSNL ஊழியர்களை தேசத்துரோகி என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ள பாஜக எம்பிக்கு தொழிற் சங்கம் கடும் கண்டனம்?

பாஜக கர்நாடக எம்பி ஆனந்த்குமார் ஹெக்டே சில தினங்களுக்கு முன்பு,பிஎஸ்என்எல் நிறுவனம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பினார்.மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை தேச துரோகிகள் என்றும்,மத்திய அரசுக்கு 100% சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை விரைவில் தனியார்மயமாக்வோம் என்றும், பாஜகவின் எம்பி ஆனந்த்குமார் ஹெக்டே கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுமட்டுமின்றி ஊழியர் சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு இதுதொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்திள்ளது. இதுகுறித்து, என்எஃடிஇ-பிஎஸ்என்எல் தேசிய … Read more